Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
சிங்கங்கள் மிருகங்களின் ராஜாவாக மாறியதற்கு பின்னால் இருந்த வரலாற்றுக் காரணம் என்ன தெரியுமா?
காட்டின் ராஜா எதுவென்று குழந்தைகளிடம் கேட்டால் கூட சிங்கம் என்று சொல்வார்கள். ஆனால் சிங்கங்கள் ஏன் காட்டின் ராஜா என்று அழைக்கபடுகிறது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? வரலாறு முழுவதும், சிங்கங்கள் எப்போதும் கம்பீரம், தைரியம், சக்தி மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை நியாபகப்படுத்துகின்றன. தொடர்புடையவை. "சிங்கத்தைப் போல வலிமையானது" போன்ற சொற்றொடர்களை விளம்பரத்திலும் நாம் பார்த்திருப்போம்.
சிங்கங்கள் பல நூற்றாண்டுகளாக துணிச்சலையும், வலிமையையும் விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் சிங்கம் அதிகாரம் மற்றும் நீதியின் சின்னமாக செயல்படுகிறது, அதனால்தான் பல அரசின் சின்னங்களில் சிங்கம் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய குறியீடுகள் 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சமுதாயத்தில் மிகவும் பிரபலமானது, ஆனால், சுவாரஸ்யமாக, இந்த சின்னங்களை ஊக்கப்படுத்திய ஐரோப்பிய சிங்கங்கள் கிமு 1 ஆம் நூற்றாண்டிலேயே அழிந்துவிட்டன. ஆனாலும் இன்றும் சிங்கம் அதே அந்தஸ்தையும், மரியாதையையும் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிங்கம் அதிகாரம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக தோன்றுவதற்கு முன்பே, அது 'மிருகங்களின் ராஜா' என்று கருதப்பட்டது. ஐரோப்பா கண்டத்தின் செல்டிக் மக்களாலும் வடக்கு ஐரோப்பாவின் ஜெர்மானிய மக்களாலும் சிங்கங்கள் மங்களகரமானவையாகக் கருதப்பட்டது. இருப்பினும், கிறிஸ்தவ மிஷனரிகள் கரடி வழிபாட்டு பாரம்பரியம் அல்லது உருவ வழிபாட்டை ஆதரிக்காததால் இந்த சின்னம் விரைவில் சிக்கலாக மாறியது.
மக்களின் உருவ வழிபாட்டைத் தடுக்க, கரடி பெரும்பாலும் அச்சுறுத்தும் மற்றும் மோசமான உயிரினமாக சித்தரிக்கப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டில், ரோமானிய பேரரசர் கான்ஸ்டன்டைன் மிலனின் ஆணைகிறிஸ்தவத்தை அங்கீகரித்தபோது, கரடிகள் வேட்டையாடப்பட்டன மற்றும் கரடிகள் அசுபமானது என்ற எண்ணம் விரைவில் பரவியது.
ஆனால் கரடிகளை வேட்டையாடுவது மற்றும் இந்த விலங்குகள் அசுபமானது என்று வதந்திகள் பரப்புவது மட்டும் போதாது என்று அவர்கள் நினைத்தனர், எனவே அவர்கள் கரடிக்கு ஒரு போட்டியாளரை உருவாக்கினர், அது கரடியிடமிருந்து கம்பீரம் மற்றும் மங்களகரமான மிருகம் என்ற பெயரை தட்டிப்பறித்தது. பைபிள் எழுதப்பட்ட தேசமான வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து சிங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இந்த அறிமுகம் சிங்கங்களை நம்பிக்கையின் பாதுகாவலர்களாகவும், துணிச்சலான மாவீரர்களின் அடையாளங்களாகவும் நிலைநிறுத்தியது.
13 ஆம் நூற்றாண்டில், சிங்கங்கள் ஐரோப்பா முழுவதும் மிருகங்களின் ராஜாவாக பரவலாகக் கருதப்பட்டன, மேலும் அவை பெரும்பாலும் கிறிஸ்துவுடன் நீதியின் அடையாளமாக இணைக்கப்பட்டன. இந்த மரியாதை பல்வேறு எழுத்துக்களில் அவர்கள் உன்னதமான மற்றும் அரச நபர்களாக சித்தரிக்க வழிவகுத்தது, "Aesop's Fables" போன்ற இடைக்கால படைப்புகள் மற்றும் நவீன இலக்கியங்களில் கூட, சிங்கம் பெரும்பாலும் கிறிஸ்துவைப் போன்ற நற்பண்புகளைக் கொண்டது என்று குறிப்பிடப்பட்டது.
உதாரணமாக 90's கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த "Chronicles of Narnia: The Lion, the Witch, and the Wardrobe" இல், அர்ஸ்லான் சிங்கம் உயிர்த்தெழுவது, கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்படுதல் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இப்படி சிங்கம் வரலாறு முழுவதும் திட்டமிட்டு அதிகாரத்தின் சின்னமாக பிரபலப்படுத்தப்பட்டது.



Click it and Unblock the Notifications
