Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
Google நிறுவனத்துக்கு பூமியில் யாராலும் கட்டமுடியாத அபராதத்தை விதித்த ரஷ்ய அரசு... காரணம் என்ன தெரியுமா?
நீதிமன்றங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சமீபத்தில் கூகுள் நிறுவனம் மீது விதிக்கப்பட்ட அபராதம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ரஷ்ய நீதிமன்றம் கூகுளுக்கு $20 டெசில்லியன் அபராதம் விதித்துள்ளது, இது 33 பூஜ்ஜியங்களைக் கொண்ட நம்ப முடியாத தொகையாகும், இது ஒட்டுமொத்த உலகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP) விட அதிகமாகும்.
ஒரு ஊடக அறிக்கையின்படி, மாஸ்கோ நீதிமன்றம் கூகுளுக்கு வரலாற்றில் இதுவரை இல்லாத அபராதத்தை விதித்துள்ளது. இதற்கு காரணம் யூடியூப் மற்றும் பிற தளங்களில் ரஷ்யாவின் அரசு-இணைக்கப்பட்ட சேனல்களைத் தடுக்க கூகுள் நிறுவனம் எடுத்த முடிவுதான்.

ரஷ்ய நீதிமன்றம் ஏன் கூகுளுக்கு $20 டெசிலியன் அபராதம் விதித்தது?
கூகுளுக்கு இந்த இமாலய அபராதத் தொகையை வழங்குவதற்கான ரஷ்ய நீதிமன்றத்தின் முடிவு, கூகுள் நிறுவனத்திற்கும், ரஷ்ய அரசுக்கும் இடையே நிலவும் சட்ட மோதலால் உருவானது, இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் அரசாங்க சார்பு ரஷிய சேனலான Tsargrad TV-யை தடுத்தபோது தொடங்கியது.
Tsargrad TV-க்குப் பிறகு, கூகுளின் மற்ற தளங்களில் அரசுடன் இணைக்கப்பட்ட சேனல்கள் தடுக்கப்பட்டன, இது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையைத் தொடங்க மாஸ்கோவைத் தூண்டியது. ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ரஷ்ய அரசு "பிரச்சாரம்" மற்றும் அரசாங்கத்தால் உருவாக்கப்படும் கதைகளைப் பரப்புவதைத் தடுக்க சேனல்கள் தடைசெய்யப்பட்டதாக கூகுள் கூறியது.
பல ஆண்டுகளாக, ரஷ்ய அரசுடன் இணைக்கப்பட்ட மீடியா சேனல்களை Google-க்கு சொந்தமான தளங்கள் இதேபோல நடத்தியது, இதன் விளைவாக கூகுள் மீது மாஸ்கோ சட்ட நடவடிக்கைகளை எடுத்தது. ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், குறிப்பாக சென்சார் மற்றும் பிரச்சாரம் தொடர்பாக கூகுள் இந்த சேனல்களை முடக்கியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா நிர்வாக குற்றங்கள் கோட் பிரிவு 13. 41 ஐப் பயன்படுத்தியது, இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகுவதற்கான அங்கீகாரமற்ற கட்டுப்பாட்டைத் தடுக்கிறது மற்றும் தணிக்கைக்கு குற்றம் சாட்டப்பட்ட கட்சி/கட்சிகளுக்கு எதிராக அபராதங்களை விதிக்கிறது.
$20 டெசில்லியன் அபராதத்தை Google எவ்வாறு செலுத்த வேண்டும்?
மாஸ்கோ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், கூகுள் ஒரு நாளைக்கு 100,000 ரூபிள் (சுமார் $1200) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது, கூகுள் இதை செய்யத் தவறினால் ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் அபராதம் இரட்டிப்பாகும். இருப்பினும், கூகுள் இந்த தீர்ப்பை தொடர்ந்து மீறியது மற்றும் சேனல்கள் மீதான தடையை நீக்கவில்லை மற்றும் அபராதம் செலுத்தவில்லை, இதன் விளைவாக அபராதத் தொகை குவிந்து, இப்போது நம்பமுடியாத 2 அன்டிசில்லியன் ரூபிள் அல்லது $20 டெசில்லியன் டாலர்களாக உள்ளது, இது மொத்த உலகளாவிய ஜிடிபி-யை விட அதிகமாகும்.
பூமியில் எந்த நிறுவனமோ, அரசாங்கமோ அல்லது கார்ப்பரேட்டோ அந்தத் தொகையில் ஒரு பகுதியைக் கூட செலுத்த முடியாது என்பதால், வரலாற்றில் இதுவரை இல்லாத இந்த அபராதத் தொகையானது மறக்க முடியாத சம்பவமாக மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுளின் பதில் என்ன?
மாஸ்கோவின் சட்ட நடவடிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 2022 இல் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவில் அதன் செயல்பாடுகளை நிறுத்த கூகுள் முடிவு செய்தது. கூகுள் அதன் ரஷ்ய துணை நிறுவனத்தை மூடிவிட்டு ரஷ்யாவில் திவால்நிலையை அறிவித்தது, அரசின் ஆதரவற்ற ஒழுங்குமுறைச் சூழலையும், அதன் மீது சுமத்தப்பட்டுள்ள நிர்வகிக்க முடியாத சட்ட மற்றும் நிதிக் கோரிக்கைகளையும் மேற்கோள் காட்டி இதனை செய்தது.
கூகுள் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டில் சுமார் $100 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யா கைப்பற்றி, அமெரிக்க நட்பு நாடான உக்ரைனுக்கு எதிரான போர் முயற்சிக்கு திருப்பியனுப்பியதாக கூறப்படுகிறது.
மாஸ்கோவுடன் நடந்து வரும் இந்த சட்டப் போரினால் குறிப்பிடத்தக்க நிதிப் பின்விளைவுகள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கூகுள் உறுதியளித்துள்ளது மற்றும் ரஷ்யாவின் அழுத்தத்தைத் தாங்கும் நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளது.



Click it and Unblock the Notifications
