Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
திருமணம் என்றாலே அலர்ஜியாக கருதும் இந்திய பழங்குடியின பெண்கள்... இந்த ஊரில் லிவ்-இன் உறவு மட்டும்தானாம்...!
இந்தியாவில் லிவ்-இன் உறவுகள், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் அடைவது போன்றவை சமூகரீதியாக தடைசெய்யப்பட்டவையாகத்தான் இன்றுவரை உள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள் லிவ்-இன் உறவை ஆதரிப்பதில்லை மற்றும் தங்கள் குழந்தைகள் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சியடைந்த நகரங்களில் கூட இன்னும் லிவ்-இன் உறவு அங்கீகரிக்கப்படாத சூழ்நிலையில் இந்தியாவின் ஒரு பழங்குடியின சமூகத்தில் லிவ்-இன் உறவுகள், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் போன்றவை மிகவும் சாதாரணமான விஷயமாக இருக்கிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
உண்மைதான் ராஜஸ்தான் மாநிலத்தில், கராசியா பழங்குடியினரிடையே ஒரு தனித்துவமான கலாச்சார நடைமுறை காணப்படுகிறது. இங்கு பெண்களுக்கு தங்கள் லிவ்-இன் பார்ட்னரை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. மேலும் இந்தியாவில் பரவலாக உள்ள திருமணம் என்ற உறவு இங்கு நடைமுறையில் இல்லை, மேலும் லிவ்-இன் உறவில் இணைந்து வாழ்வது இந்த சமூகத்தில் நீண்டகால பாரம்பரியமாக இருந்து வருகிறது.

கராசியா பழங்குடியினரின் விதிமுறை
கராசியா பழங்குடியினரிடையே, குறிப்பாக ராஜஸ்தானின் தெற்குப் பகுதிகளில், லிவ்-இன் உறவு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ளன. பாரம்பரிய சமூக விதிமுறைகளுடன் ஒப்பிடும்போது இந்த கலாச்சார விதிமுறை அவர்களின் முற்போக்கான நடைமுறையை விளக்குகிறது. மேலும் இந்த பழங்குடியினரை சேர்ந்த இளம் பெண்கள் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் லிவ்-இன் உறவில் ஈடுபடும் உரிமையைக் கொண்டுள்ளனர். மேலும் இந்த உறவு மூலம் குழந்தைகளும் பெற்றுக் கொள்ளலாம், மேலும் முறையான திருமண விழாக்கள் பிற்காலத்தில் நிகழலாம்.
இரண்டு நாள் காதல் திருமண விழா
இந்த உறவுகளின் தொடக்கமானது குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படும் "இரண்டு நாள் காதல் திருமண விழா(Two-day courtship fair)" எனப்படும் ஒரு சிறப்பு சடங்கின் போது நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் போது, பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் தங்களுக்கு விருப்பமான துணையைச் சந்தித்து தொடர்புகளை உருவாக்குகிறார்கள். அதன்பின் அவர்கள் ஓடிப்போய், திருமணம் செய்யாமலேயே ஒன்றாக இணைந்து வாழ தொடங்குகிறார்கள். வரதட்சணையும் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ளது, இதில் மணமகனின் குடும்பத்தினர் மணமகள் திரும்பியதும் மணமகனின் குடும்பத்தினருக்கு பணம் கொடுக்க வேண்டும்.
கராசியா பழங்குடியினரின் திருமண பழக்கவழக்கங்கள்
லிவ்-இன் உறவு மட்டுமல்ல கராசியா பழங்குடியினர் திருமண பழக்கவழக்கங்களுக்கு ஒரு தனித்துவமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறார்கள். லிவ்-இந்த உறவில் உள்ளவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தால், அந்த பெண் மற்றொரு விழாவில் ஒரு புதிய துணையை உருவாக்க விரும்பினால், அவர் தனது முன்னாள் துணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் கலாச்சார விதிமுறைகளின் இந்த குறிப்பிட்ட அம்சம் சமூகத்தின் தனித்துவமான மதிப்புகள் மற்றும் நடைமுறைகளை பிரதிபலிக்கிறது.
முற்போக்கான சமூகம்
பொதுவாக பாரம்பரிய அல்லது பின்தங்கிய சமூகமாகக் கருதப்பட்டாலும், கராசியா பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் முற்போக்கான தன்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, அவர்களின் வழக்கத்திற்கு மாறான சடங்குகள் அவர்களின் சமூகத்திற்குள் வரதட்சணை மரணங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்துள்ளன, இது அவர்களின் தனித்துவமான சமூக கட்டமைப்பின் செயல்திறன் மற்றும் நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த பழக்கமுறை எப்படி தொடங்கியது?
ஆரம்ப காலங்களில் இந்த பழங்குடியினரின் நான்கு சகோதரர்களில் மூன்று பேர் திருமணம் செய்து கொண்டு குடும்பங்களைத் தொடங்கினர், ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்-இன் உறவைத் தொடங்கி ஒரு குழந்தையைப் பெற்றார். இந்த வழக்கம் அன்றிலிருந்து தொடங்கியது. கராசியா பெண்கள், தங்கள் முதல் துணைவரின் மரணத்திற்குப் பிறகு, மற்றொரு துணையைத் தேர்ந்தெடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











