Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
பால் பாக்கெட்களில் காலாவதி தேதி இருக்க காரணம் இந்த அமெரிக்க கேங்ஸ்டர்தான்..இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா
பால் என்பது நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். கடந்த காலங்களில் பசு மாட்டு பாலை நாம் பால்காரரின் வீட்டிற்கு சென்று பாத்திரத்தில் வாங்குவோம். ஆனால் இப்போது பால் பாக்கெட்களே அனைத்து வீடுகளையும் ஆட்சி செய்கிறது.
பாக்கெட்டுகள், டெட்ரா பேக்குகள் அல்லது பாட்டில்களில் வரும் பேக்கேஜ் செய்யப்பட்ட பால் எப்போதும் காலாவதி தேதியுடன் வருகிறது, அந்த தேதியை தாண்டிவிட்டால், அது சாப்பிடுவதற்கு பாதுகாப்பற்றதாகிவிடும். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு பால் பாட்டில்கள் காலாவதி தேதியைக் கொண்டிருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

பால் பாக்கெட்களில் இந்த மாற்றம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்தில்தான் மாற்றப்பட்டது. அதற்கு காரணமாக இருந்தது ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட மனிதராக இருந்த பிரபல அமெரிக்க டான் அல் கபோன்.
அமெரிக்காவின் மதுவிலக்கு
1920-1933 வரை, அமெரிக்காவில் மது தடைசெய்யப்பட்டிருந்தது, அல் கபோன் அந்த நேரத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து கறுப்பு சந்தைப்படுத்துவதன் மூலம் ஒரு செழிப்பான கருப்பு சந்தையை உருவாக்கினார், மேலும் தனது வணிகத்திற்கு உதவுவதற்காக நாட்டில் உள்ள பெரும்பாலான பாட்டில் ஆலைகளைக் கைப்பற்றினார். இருப்பினும், 1933 இல் இந்த தடை நீக்கப்பட்டபோது, அல் கபோன் தனது சட்டவிரோத மதுபான வணிகம் இனி லாபமாக இருக்காது என்பதை உணர்ந்தார், ஏனெனில் அப்போது மதுபானம் அனைத்து கடைகளிலும் எளிதாக கிடைத்தது.
அல் கபோனின் தந்திரம்
அல் கபோன் பல பெரிய பாட்டிலிங் ஆலைகளை வைத்திருந்ததால், அவர் பேக்கேஜ் செய்யப்பட்ட பால் வணிகத்தில் இறங்க முடிவு செய்தார், ஏனெனில் அந்த நேரத்தில் மதுபானத்தை விட பாலின் விலை அதிகமாக இருந்தது, ஆனால் அவர் தனது பாட்டில் ஆலைகள் பெரிய லாபத்தை ஈட்டுவதை உறுதிசெய்ய ஒரு புத்திசாலித்தனமான தந்திரத்தை கையாண்டார். அதுதான் பால் பாட்டிலில் "Use By' தேதியை அச்சிடுவது. இந்த தந்திரம் வெற்றி பெற்றால், பெரும்பாலான பாட்டில் ஒப்பந்தங்களை அவர் பெறுவார் என்று அவர் திட்டமிட்டார். அவரது திட்டபடியே அனைத்தும் நடந்தது.
மற்றொரு காரணம்
பால் பாட்டில்களில் காலாவதி தேதிகளை அச்சிடுவதற்கான அல் கபோனின் பிரச்சாரத்திற்குப் பின்னால் உள்ள இரண்டாவது காரணம் மிகவும் பிரபலமானது, ஆனால் நம்புவதற்கு மிகவும் கடினமானது. கெட்டுப்போன பால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக கேங்ஸ்டர்கள் கவலைப்பட்டதாகவும், எனவே பால் பாட்டில்களின் காலாவதி தேதியை வைக்கும் திட்டத்தை தொடங்கியதாகவும் அவர் கூறினார். பால் பாட்டில்களில் காலாவதி தேதிகளை அச்சிடுவதற்கு அல் கபோனின் இந்த திட்டத்திற்கு பின்னணியில் உள்ள ஒரு வதந்தி என்னவென்றால், அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அறியாமல் கெட்டுப்போன பாலை உட்கொண்டதால் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் என்று கூறப்படுகிறது.
இந்த இரண்டு காரணங்களுமே சந்தேகத்திற்குரியவையாக இருந்தாலும் அதை நம்பும் குறிப்பிட்ட அளவு மக்களையும் கொண்டுள்ளது. ஆனால் இன்று கெட்டுப்போன பாலை யாரும் குடிக்காமல் இருப்பதற்குக் காரணம் அல் கபோன் தான் என்பதை மறுக்க முடியாது.
பால் பாட்டில்களில் காலாவதி தேதி அச்சிடப்பட்டதற்கு ஒரே காரணம் அல் கபோன் என்ற கதை இன்னும் நகர்ப்புற புராணக்கதையாக பலரால் கருதப்பட்டாலும், இது இன்னும் ஒரு சுவாரஸ்யமான கதையாக உள்ளது.



Click it and Unblock the Notifications












