வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

கோடையில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்ய நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால், தொண்டைக்கு இதமாக குளிர்ச்சியான நீரை அருந்துவதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொளுத்தும் கோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நல்லதுதானா?' என்ற கேள்வி காலம் காலமாக உள்ளது.

தினமும் குளிர்ந்த நீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஆனால் கோடை காலம் வந்துவிட்டாலே போதும்.. வெயிலின் உஷ்ணத்தில் இருந்து சற்று விடுபட குளிர் பானங்கள், ஐஸ் வாட்டர் போன்றவற்றை அடிக்கடி குடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இப்போது நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க....

drinking ice water in summer

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க, சாதாரண உடல் வெப்பநிலையை பராமரிக்க மற்றும் உறுப்புகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இது மற்ற உடல்நலப் பிரச்சனைகளை சரிச்செய்யவும் நீரழிவைத் தடுக்கவும் உதவுகிறது.

சாதாரணமாக.. நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். நாம் குளிர்ந்த நீரைக் குடிக்கும்போது, ​​​​இந்த வெப்பநிலையைக் கட்டுப்படுத்த உடல் ஆற்றலை வெளியிடுகிறது. குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. குறிப்பாக உணவின் போது அல்லது அதற்குப் பிறகு ஐஸ் வாட்டர் குடிப்பதைத் தவிர்ப்பதற்கான மற்றொரு காரணம், இது எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்று நுரையீரல் நிபுணர்கள் கூறுகிறார்.

வெயிலின் உஷ்ணத்தைத் தணிக்க குளிர்ந்த நீரை அருந்த விரும்புவது இயல்பு. ஆனால் குளிர்ச்சியானது நமது தொண்டையை பாதிக்கிறது என்று எச்சரிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதனால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வரலாம் என்று கூறப்படுகிறது.

உங்களுக்கு காய்ச்சல், சளி அல்லது நாள்பட்ட நோய் ஏதேனும் இருந்தால் ஐஸ் வாட்டர் குடிப்பது நல்லதல்ல என்கிறார் டாக்டர் ஸ்வேதா மகாதிக். மேலும் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் ஸ்வேதா பேசினார். சூடான அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் எந்த நன்மையும் இல்லை.

ஐஸ் வாட்டர் குடிப்பதை விட வெந்நீர் குடிப்பது அதிக பலன் தருமா என்ற கேள்விக்கு ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்சா பவுசர் பதிலளித்தார். வெந்நீர் (வெதுவெதுப்பான நீர்) குடிப்பதைப் பற்றி பேசுகையில், மிகவும் குளிர்ந்த ஐஸ் தண்ணீருக்குப் பதிலாக அறை வெப்பநிலை அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.

தண்ணீர் அருந்துவதற்கான சிறந்த வழி பற்றி பேசிய அவர், நின்று கொண்டு அல்ல, உட்கார்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் வெயிலில் இருந்து திரும்பிய பின் குளிர்ந்த நீரை குடிப்பது நல்லதல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய ஒளியில் இருக்கும் போது நமது உடல் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும். அதுவரை வெயிலில் இருந்துவிட்டு, திடீரென வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியில் இருந்து குளிர்ந்த தண்ணீரைக் குடித்தால், இரண்டு வெப்பநிலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். இதனால், இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, வெயிலில் இருந்து வந்த உடனே குடிக்காமல் 10 நிமிடம் ரிலாக்ஸ் ஆன பிறகு எடுத்துக்கொள்வது நல்லது.

மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதால் வயிற்றின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஜீரண மண்டலம் சரியாக ஜீரணமாகாமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே, ஃப்ரிட்ஜ் தண்ணீருக்குப் பதிலாக பானை தண்ணீர் அல்லது சாதரண தண்ணீரைக் குடிப்பது எல்லா வகையிலும் நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Story first published: Tuesday, April 9, 2024, 13:35 [IST]
Desktop Bottom Promotion