Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
விபச்சாரியை உயிருக்கு உயிராக காதலித்த இந்திய பேரரசர்...உயிருடன் புதைக்கப்பட்ட காதலி..காவியமாக மாறிய காதல் கதை!
இந்திய வரலாறு உலகின் மிகவும் வளமான மற்றும் தொன்மையான வரலாறுகளில் ஒன்றாகும். நம்முடைய வரலாற்றில் போர்களும், கலையும் எவ்வளவு முக்கியமானவையாக இருக்கிறதோ அதேபோல நம் வரலாறு முழுவதும் காலத்தால் அழியாத காதல் கதைகளும் நிறைந்துள்ளன.
இந்திய வரலாற்றில் பல தலைமுறைகளாக மக்களின் இதயங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற மற்றும் அழியாத காதல் கதைகளால் நிறைந்துள்ளன. அதற்கு சான்றாக நிற்பதுதான் தாஜ்மஹால், பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் காதலின் அசைக்க முடியாத சின்னமாக தாஜ்மஹால் உள்ளது.

இந்த ஒவ்வொரு காதல் கதையும் பக்தி, தியாகம் மற்றும் சமூகத்தால் ஏற்பட்ட சவால்கள் என அவரவர் வாழ்ந்த காலங்களுக்கு ஏற்ப பிரச்சினைகளை எதிர்கொண்டது. துரதிர்ஷ்டவசமாக வெகுசில காதல் கதைகளைத் தவிர பிற கதைகளை பற்றி நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த பதிவில் இந்திய வரலாற்றின் சிறந்த மற்றும் மறக்க முடியாத காதல் கதைகள் சிலவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஷாஜகான் மற்றும் மும்தாஜ் மஹால்
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் மற்றும் காதலின் சின்னமாகவும் கருதப்படும் தாஜ்மஹாலின் கட்டுமானத்துடன் தொடர்புடைய காதல் கதை இது. இவர்களின் காதல் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானது. முகலாயப் பேரரசரான ஷாஜகான், தனது 14வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது காலமான தனது மனைவி மும்தாஜ் மஹாலுக்கான தனது தீராத காதலின் அடையாளமாக இந்த கல்லறையைக் கட்டினார்.
சலீம் மற்றும் அனார்கலி
பிரபலமான நாட்டுப்புறக் கதைகளின் படி, முகலாய பேரரசர் அக்பரின் மகன் சலீம், அழகில் சிறந்த விபச்சாரியாக இருந்த அனார்கலியை காதலித்தார். இருப்பினும், சமூக அந்தஸ்தில் உள்ள வித்தியாசம் காரணமாக அவர்களது காதல் அக்பரிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது.
அவர்களின் காதல் பல இன்னல்களை எதிர்கொண்டது, இறுதியில் அனார்கலி உயிருடன் புதைக்கப்பட்டார். சலீம் பின்னர் ஜஹாங்கீராக முகாலய சாம்ராஜ்ஜியத்தின் அரசராகி ஆட்சி புரிந்தார். ஆனால் இறுதிவரை அவர் அனார்கலியை மறக்கவில்லை. அவர்களின் காதல் கதை புராணமாக மாறியது மற்றும் பல்வேறு கலை வடிவங்களில் எப்போதும் அழியாததாகும் இருக்கும்.
தோலா மற்றும் மாரு
இது ராஜஸ்தானின் பிரபலமான காதல் கதை. தோலா என்ற இளவரசனும், மாரு என்ற இளவரசியும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். இருப்பினும், அரசியல் காரணங்களால் மாரு மற்றொரு இளவரசருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். தோலா, மாருவை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார், மாறுவேடமிட்டு அவரின் அரண்மைக்குள் புகுந்து மாருவை காப்பாற்றினார், இந்த துணிச்சல் அவர்களின் காதலின் வெற்றிக்கு வழிவகுத்தது.
ஹீர்-ராஞ்சா
ஹீர்-ராஞ்சாவின் காதல் கதை மற்றொரு பிரபலமான பஞ்சாபி காதல் கதை, இந்த கதை கவிஞர் வாரிஸ் ஷாவால் பிரபலப்படுத்தப்பட்டது. இது ஜாட் பெண்ணான ஹீர் மற்றும் ஏழை மேய்ப்பரான ராஞ்சா ஆகியோரின் கதையைச் சொல்கிறது. வெவ்வேறு சமூக வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் காதலித்தார்கள். இருப்பினும், அவர்களது குடும்பங்கள் அவர்களது எதிர்கின்றனர். இது தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் இன்னல்களுக்கு வழிவகுக்கிறது. கதை அவர்களின் அழியாத காதலையும் அவர்கள் எதிர்கொள்ளும் சமூகத் தடைகளையும் சித்தரிக்கிறது.
பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதி
பாஸ் பகதூர் மால்வா இராச்சியத்தின் கடைசி சுதந்திர ஆட்சியாளராக இருந்தார், ரூப்மதி ஒரு திறமையான பாடகி மற்றும் கவிஞராக இருந்தார். மத்தியப் பிரதேச மாநிலம் மாண்டுவில் இருவரும் சந்தித்துக் காதலித்து வந்தனர்.
ரூப்மதியின் மயக்கும் குரல் பாஸ் பகதூரைக் கவர்ந்தது, மாண்டுவின் இயற்கை அழகுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. இருப்பினும், முகலாய பேரரசர் அக்பர் மாண்டுவைத் தாக்கியபோது அவர்களின் கதை சோகமாக முடிந்தது, இது அவர்களின் பிரிவுக்கு வழிவகுத்தது.
மிர்சா-சாஹிபா
மிர்சா-சாஹிபா என்பது பஞ்சாபில், குறிப்பாக ஜாட் சமூகத்தினரிடையே பிரபலமான காதல் கதை. இது ஒரு முஸ்லீம் மிர்சாவிற்கும் ஜாட் இளவரசியான சாஹிபாவிற்கும் இடையிலான தடைசெய்யப்பட்ட காதலைச் சுற்றி வருகிறது.
சிறுவயது நண்பர்களாக இருந்தாலும், அவர்களது காதலை சாஹிபாவின் குடும்பத்தினர் எதிர்த்தனர், மேலும் அவர்கள் ஒன்றாக இருப்பதற்கு பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். சாஹிபாவின் துரோகம் மிர்சாவின் மரணத்திற்கு இட்டுச் செல்லும் சோகமான முடிவுக்கு கதை அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications












