Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சாணக்கிய நீதி: உங்களை விட பலமான எதிரியை ஜெயிக்கணுமா? இந்த விஷயங்களை நியாபகம் வைச்சுக்கோங்க...!
ஆச்சார்யா சாணக்கியர் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியல் ஞானிகளில் ஒருவராவார். அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களையும், அதன் மூலம் கிடைத்த அனுபவங்களையும் சாணக்கிய நீதி எனும் நூலக தொகுத்துள்ளார்.
இந்த நூலில் நடைமுறை வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் கூறியுள்ளார். பெண் மற்றும் எதிரியும் பற்றி சாணக்கிய நீதியில் கூறப்பட்டுள்ளது, இவை இரண்டுமே வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவை.

சாணக்கியரின் கொள்கைகளை ஒருவர் முழுமையாக பின்பற்றினால், ஒரு நபர் வாழ்க்கையின் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும். ஆச்சார்யாவின் வார்த்தைகளை நீங்கள் புரிந்து கொண்டால், வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களும் எளிதில் தீர்க்கப்படும். மனித சமுதாயம் தொடர்பான அனைத்தும் சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, யார் தனது காதலி அல்லது மனைவிக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கிடையேயான காதல் ஒருபோதும் குறையாது. ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவரிடம் தந்தையின் வடிவத்தைக் எதிர்பார்க்கிறார்.
உங்கள் எதிரி எப்போதும் உங்களைத் தூண்டிவிட முயற்சிப்பார், அதனால் நீங்கள் கோபப்படுவீர்கள். ஏனெனில் கோபத்தில் மனிதனின் சக்தியும் புரிந்து கொள்ளும் சக்தியும் பாதியாகக் குறைந்துவிடும். இது உங்கள் எதிரிக்கு சாதகமாகி விடும். எதிரிகளால் தூண்டப்படும்போது எப்போதும் அமைதியாக இருங்கள் மற்றும் சரியான நேரத்தில் உங்கள் எதிர்வினையை தொடங்குங்கள்.
சாணக்கிய கொள்கைப்படி, எங்கு மரியாதை இல்லை, வேலை வாய்ப்பு இல்லை, கல்வி இல்லையோ அங்கு ஒருபோதும் வீடு கட்டக்கூடாது. அத்தகைய இடங்களிலிருந்து தூரமாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேற முடியாது.
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒருவர் தனது எதிரிகளை ஒருபோதும் வெறுக்கக்கூடாது. உங்கள் எதிரியை நீங்கள் வெறுத்தால், உங்கள் சிந்திக்கும் திறனை இழக்கிறீர்கள். இதன் காரணமாக நீங்கள் அவருடைய பலவீனத்தை மட்டுமே பார்க்க முடியும், அவருடைய பலத்தை உங்களால் பார்க்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், ஒருவர் எப்போதும் தனது எதிரியை நண்பராகப் பார்க்க வேண்டும், மேலும் அவரது பலங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அறிவுள்ள ஒருவர் தனது நிதி நிலையை வேறு யாரிடமும் விவாதிக்கக் கூடாது. நீங்கள் நிதி இழப்பை சந்திக்கிறீர்கள் என்றால், அந்த விஷயத்தை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications

