Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் இருக்கும் தம்பதிகளை யாராலும் பிரிக்க முடியாதாம்...உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் அனைத்து துறைகள் தொடர்பான தனது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். உறவுகள், பணம், வணிகம், கல்வி மற்றும் வெற்றி போன்றவற்றைப் பற்றி சாணக்கிய நீதியில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.
ஆச்சார்ய சாணக்கியர் அரசியலிலும், இராஜதந்திரத்திலும் சிறந்தவராக இருந்தார், அதேசமயம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் கற்றறிந்தவராக இருந்தார். அவர் தனது போதனைகளில், சரியாக பின்பற்றினால், வெற்றிக்கு வழிவகுக்கும் சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
யாரேனும் தங்கள் காதல் உறவில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அல்லது குடும்பத்தில் அமைதியின்மையால் பாதிக்கப்பட்டாலோ சாணக்கியர் கூறிய இந்த விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

எந்தவொரு உறவும் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது என்று சாணக்கியர் நம்பினார்.ஒருவர் தங்களின் துணைக்கு மரியாதை கொடுக்கவில்லை எனில் அந்த உறவு நீண்ட காலம் நீடிக்காது. நீங்கள் பொதுவெளியில் ஒருவரை மீண்டும் மீண்டும் அவமதித்தால், அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கிறது, இது உறவுகள் மோசமடைய காரணமாகிறது.
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்த ஒரு உறவிலும் அகங்கார உணர்வு இருந்தால், அந்த உறவில் விரிசல் ஏற்படுவது இயல்பு. ஒரு உறவில் ஆணவம் அதிகரிக்கும் போது அந்த உறவில் அன்பின் முக்கியத்துவம் குறையத் தொடங்குகிறது, இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எந்த சூழ்நிலையிலும் உங்கள் உறவுகளில் ஆணவத்தை கொண்டு வராமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
எந்த ஒரு உறவின் அடித்தளமும் நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் போது அந்த உறவு அசைக்க முடியாத பலமுடையதாகிறது. கணவன்-மனைவி அல்லது காதலன்-காதலி இடையே நம்பிக்கை மிகவும் முக்கியமானது. தங்களுக்குள் உடைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கும் தம்பதிகள் நீண்டகால மற்றும் வலுவான உறவைக் கொண்டுள்ளனர். மறுபுறம், சந்தேக உணர்வு இருந்தால், அது உறவுகளை விரைவில் பிரித்துவிடும்.
சாணக்கியரின் கொள்கைகளின்படி, நீங்கள் ஒரு உறவில் நீண்ட காலம் நிலைத்திருக்க விரும்பினால், உங்கள் துணைக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும். கட்டுப்பாடுகளைக் கொண்ட உறவுகள் நீண்ட காலம் நீடிக்காது, அவற்றில் எப்போதும் சில சிக்கல்கள் இருக்கும். அந்தவகை உறவில் இருப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.



Click it and Unblock the Notifications
