Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சாணக்கிய நீதி படி இந்த 4 விஷயங்கள் இருந்தால் எவ்வளவு பெரிய எதிரியையும் ஈஸியாக ஜெயிச்சிரலாமாம்...!
சாணக்கியர் ஒரு சிறந்த தத்துவஞானி, மேலும் அவர் வரலாற்றின் சிறந்த அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக இருந்தார். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் கீழ், அவர் நாட்டை மிக உயரத்திற்கு கொண்டு சென்றார். சந்திர குப்த மௌரியரும் மற்றும் சாணக்கியரும் இணைந்து ஆட்சி செய்த காலம் மௌரியர்களின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மோசமான காலங்களில் ஒருவருக்கு உதவக்கூடிய விஷயங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிட்டுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒருவர் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். மோசமான நேரங்களுக்கு உங்களை எவ்வாறு தயார்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பயம் கொள்ளக்கூடாது
பயம்தான் நம்மை பலவீனமாக்குகிறது மற்றும் சூழ்நிலையை நம் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. பயப்படுகிற மனிதனை விட தன்னம்பிக்கை கொண்ட ஒருவர் சூழ்நிலையை சிறப்பாக வெல்ல முடியும். அதிகம் பயப்படுபவர்கள் ஆபத்துக்களை நெருங்குவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே முடியாது. ஒரு சூழ்நிலையை எதிர்த்துப் போராட, ஒருவர் முதலில் பயத்தை எதிர்த்துப் போராட வேண்டும். எனவே பயம் உங்களை நெருங்கும்போது, ஒரு போர்வீரனைப் போல அதைத் தாக்கி அதைக் கொல்ல வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நிகழ்காலத்தில் வாழ வேண்டும்
உங்கள் நேரம் மோசமாக இருப்பதற்கு தோல்வியே காரணம் என்று நீங்கள் நினைத்தால், சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் மோசமான காலங்களை கடக்க வேண்டியிருக்கும் போது, வலி அவர்களின் இதயத்தை ஆக்கிரமித்து அவர்களை விரக்திக்கு ஆளாக்குகிறது. கடந்த காலத்தைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ சிந்திக்காமல், சூழ்நிலையைச் சமாளிக்க ஒருவர் தங்களால் இயன்றவரை முயற்சி செய்ய வேண்டும். மாற்றம் ஒன்றே உலகில் நிலையானது. எனவே, நேரம் சாதகமாக இல்லாதபோது, ஒருவர் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் அவரால் எதுவும் செய்ய முடியாவிட்டால் நிலைமையைக் கடந்து செல்ல முயற்சிக்க வேண்டும். சாணக்கிய நீதி கூறுவது போல உங்கள் கடந்த காலத்தை பற்றி வருந்தாதீர்கள், உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள், மாறாக உங்கள் நிகழ்காலத்தை நன்றாக வாழுங்கள்.
மகிழ்ச்சியே எதிரிகளைக் கொல்லும்
உங்கள் கெட்ட நேரங்களுக்கு உங்கள் எதிரிகள் காரணமாக இருக்கலாம். ஆனால் உங்கள் எதிரியை நீங்கள் எளிதாக தோற்கடிக்கலாம், எவ்வாறெனில் நீங்கள் அவர்களின் மன உறுதியைத் தாக்க முயற்சிக்க வேண்டும். தன்னம்பிக்கையே மனிதனுக்குத் தேவையான பலத்தை அளிக்கும் என்பதால், தன்னம்பிக்கையைக் கொல்வது எதிரியை பலவீனப்படுத்தும். உங்களை மகிழ்ச்சியாக பார்க்க முடியாதவர்களுக்கு உங்களின் நிலையான மகிழ்ச்சியே மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். சாணக்கிய நீதி கூறுவது என்னவெனில், உங்கள் மகிழ்ச்சியே உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை.
உங்களை வலிமையானவராக காட்டிக் கொள்ள வேண்டும்
எதிரியின் நம்பிக்கையில் கவனம் செலுத்துங்கள், அவரது வெற்றிக்கான வாய்ப்புகளைத் தீர்மானிக்கும் பலமே அதுதான். எதிராளி பலமாக இருக்கும்போது எல்லோருக்கும் பயம் ஏற்படுவது இயற்கைதான். தீங்கிழைக்கும் எண்ணம் கொண்ட பெரும்பாலான மக்கள் தங்களை விட வலிமையானவர்களிடமிருந்து விலகி இருக்கிறார்கள். அவர்கள் முதலில் பலவீனமானவர்களைத் தாக்குகிறார்கள். எனவே, நீங்கள் எப்போதும் உங்களை ஒரு வலிமையான நபராக சித்தரிக்க வேண்டும். சாணக்கிய நீதி கூறுவது என்னவெனில் ஒரு பாம்பு தான் ஆபத்தானதாகை இல்லாவிட்டாலும் தன்னை அப்படி காட்டிக்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications











