Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை தெரிஞ்சிக்காம ஒருவரிடம் நண்பராகாதீங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞராகக் கருதப்படுகிறார். தன் அனுபவங்களிலிருந்து மனித வாழ்வுக்குப் பயன்படும் பல நூல்களை எழுதியுள்ளார். அதில் சாணக்கிய நீதி இன்றுவரை மிகவும் பிரபலமானது.
சாணக்கிய நீதியில் மனித வாழ்க்கை தொடர்பான முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இன்றும் சாணக்கியரின் வார்த்தைகள் மனித வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சாணக்கியரின் கொள்கைகளை புரிந்துகொள்வதன் மூலம் ஒரு நபர் தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற முடியும்.

நட்பாக இருந்தாலும் சரி அல்லது காதல் உறவாக இருந்தாலும் சரி நம்பிக்கையுடன் தொடங்குகிறது. நீங்கள் நம்பக்கூடிய நபர்களை மட்டுமே உங்கள் நண்பராக அல்லது காதல் துணையாக வைத்திருக்க விரும்புகிறீர்கள். ஆனால் பெரும்பாலும் இந்த உறவுகளில், ஆரம்பம் நன்றாக இருந்தாலும், பின்னாளில் துரோகங்களும், ஏமாற்றங்களும் உணரப்படுகிறது.
அவர்களை புரிந்து கொள்ள சரியான வழி என்ன? முதலில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. தங்கத்தை சோதித்துப் பார்ப்பது போல, ஒருவரை நம்புவதற்கு முன் அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வது அவசியம். ஒரு நபரை நம்புவதற்கு முன், நீங்கள் சில விஷயங்களை அறிந்திருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தியாக உணர்வு
சாணக்கிய ரின் கூற்றுப்படி, ஒருவரை நம்புவதற்கு முன் ஒருவருக்கு தியாக உணர்வு இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதாவது அவர்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாரா என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் மற்றவர்களின் மகிழ்ச்சியில் அக்கறை கொண்டவர்களை நீங்கள் நம்பலாம் என்கிறார் சாணக்கியர்.
நற்குணங்கள்
எந்தவொரு நபருக்கும் நற்குணங்கள் மிக முக்கியமான விஷயம். எனவே நல்ல குணம் கொண்டவர்களை எப்போதும் நம்ப வேண்டும். நல்ல குணம் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு நல்லது செய்கிறார்கள், ஆனால் கெட்ட குணம் கொண்டவர்கள் தங்கள் சொந்த லாபத்திற்காக மற்றவர்களுக்கு தீங்கு செய்ய கூட தயாராக இருப்பார்கள்.
உண்மை
கோபம், சோம்பல், சுயநலம், பொய், தற்பெருமை போன்ற கெட்ட குணங்களைக் கொண்ட ஒருவரை ஒருபோதும் நம்ப முடியாது என்கிறார் சாணக்கியர். ஆனால் உண்மை மற்றும் நேர்மையை ஆதரிக்கும் ஒரு அமைதியான நபரை நீங்கள் நம்பலாம்.
நல்ல செயல்கள்
உலகில் நல்ல செயல்களைச் செய்பவர்கள், தீய செயல்களைச் செய்பவர்கள் என இருவகை உண்டு. அதனால்தான் நீங்கள் நண்பராக விரும்புபவர்களிடம் முதலில் பேராசை அல்லது பொய் போன்ற குணாதிசயங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்களை நம்பாதீர்கள். நன்மை செய்பவர்களை மட்டுமே எப்போதும் நம்ப வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
அன்பு
மற்றவர்களுக்காக தங்கள் சொந்த மகிழ்ச்சியைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் ஒருவரை நீங்கள் கண்டால், நீங்கள் அவர்களை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். உங்களுக்காக மகிழ்ச்சியைத் தியாகம் செய்யும் ஒருவரை நீங்கள் நம்பலாம் என்கிறார் சாணக்கியர். எல்லோருக்கும் நன்மை செய்பவர்கள் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள்.
நல்ல பாதையில் நடப்பவர்கள்
தவறான செயல்களைச் செய்து, தவறான வழியில் பணம் சம்பாதிப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயநலத்திற்காக யாரையும் ஏமாற்றுவார்கள். சாணக்கியர் ஒருவர் நல்ல வழியில் சென்று பணம் சம்பாதிப்பவர்களை மட்டுமே நம்ப வேண்டும் என்கிறார்.



Click it and Unblock the Notifications
