Latest Updates
-
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க..
சாணக்கிய நீதி படி இந்த 6 விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்களுக்கு எல்லாமே கிடைச்சிருமாம்...!
Chanakya Niti: ஒரு மனிதனின் உண்மையான உறவினர்கள் என்று ஆறு பேர் இருக்கிறார்கள், எந்த சூழ்நிலை வந்தாலும் அவர்கள் ஒருவரை விட்டு விலக மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். மற்றவர்கள் அனைவரும் ஒருவரை கஷ்ட காலங்களில் விட்டுச் சென்றாலும், அவரை விட்டு விலகாத மிக உண்மையான நபர்கள் இந்த ஆறு பேரும்தான்.
அவர்களை மனிதன் தங்கள் உறவினர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த உறவினர்கள் கடினமான சூழலில் இருந்து மேலே வர உதவியாக இருப்பார்கள். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உண்மை தாய் போன்றது
உண்மை எப்போதும் தனித்துவமாக நிற்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒருமுறை அது வெளிவந்தால், அதை மாற்ற முடியாது, அப்படி மாற்றினால், அது உண்மையாக இருக்காது. உண்மையைப் பேசும் ஒரு மனிதன், எதற்கும் பயப்படவோ அல்லது எதையும் கஷ்டப்பட்டு நியாபகம் வைத்துக் கொள்ளவோ தேவையில்லை. ஒரு சிறிய பொய்யை காப்பாற்ற ஆயிரம் பொய்கள் தேவை, உண்மைக்கு அப்படி எதுவும் தேவையில்லை.
தாய் எப்போதும் தன் குழந்தைகளை பாதுகாப்பது போல உண்மை ஒருவரை பாதுகாக்கிறது. அவர்கள் உலகைப் பார்த்து பயப்படும் போதெல்லாம் தாய் போல கவசமாக இருந்து பாதுகாக்கிறது.
அறிவு தந்தை போன்றது
அறிவுள்ள மனிதன் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறான். ஆயிரக்கணக்கான உறவினர்களைக் கொண்டிருப்பவனை விட அறிவுடன் இருக்கும் தனிநபர் சிறந்தவர். அறிவு அவரை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது, எனவே சிறந்த முடிவுகளை எடுக்க வழிவகுக்கிறது, இது அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிவகுக்கும். இவ்வாறு, அறிவு மனிதனின் உண்மையான உறவினர் என்பதை நிரூபிக்கிறது, எல்லா இடங்களிலும் அவரை ஆதரிக்கிறது.
ஒரு தந்தை தன் பிள்ளையை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் எப்படி வழிநடத்துகிறாரோ, அதே வழியில் அறிவு அவரை வழிநடத்துகிறது. பாதகமான சூழ்நிலையில் தந்தை அவரைப் பாதுகாப்பது போல, அறிவும் அவருக்குப் பிரச்சனையின் போது உதவுகிறது. எனவே, சாணக்கியர் அறிவை ஒருவரின் தந்தையுடன் ஒப்பிடுகிறார்.
நீதி சகோதரர் போன்றது
நீதி சகோதரனைப் போன்றது என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு சகோதரன் உங்களுக்குப் பக்கபலமாக நிற்கிறார். அதேபோல, நீதி உங்கள் சகோதரனாக இருக்க வேண்டும் என்றால், வாழ்க்கையின் எல்லா நடவடிக்கைகளிலும் நீங்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நீதி அவருடன் என்றென்றும் நிலைத்திருக்கும். தர்மம் அல்லது நீதி ஒரு மனிதனின் வாழ்நாள் தொடங்கி மரணம் வரை செல்கிறது என்று நம்பப்படுகிறது. எனவே, நீதி சிறந்த சகோதரனாக விளங்குகிறது. ஒரு சகோதரர் உங்களைத் தவறு செய்வதிலிருந்து தடுக்கிறார், அதேபோல் நீதியானது தவறான வாழ்க்கைப் பாதைகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
இரக்கம் நண்பர் போன்றது
கருணை உங்கள் நண்பனாக இருக்க வேண்டும் என்கிறார் சாணக்கியர். கருணை உங்கள் நண்பராக இருக்கும்போது, அனைவரும் உங்கள் நண்பர்களாகிறார்கள். இரக்கம் மக்களை ஈர்க்கிறது. மாறாக, ஒரு மனிதன் இரக்கமற்றவராக இருந்தால், மக்கள் அவரை வெறுக்கிறார்கள், இதனால் இரக்கமற்ற தன்மை அவருக்கு எதிரியாகிறது. எனவே இரக்கத்தை சிறந்த நண்பராக கொண்டவர்கள், அனைவரின் அன்பையும் பெற முடியும்.
அமைதி மனைவி போன்றது
மனிதன் முதலில் அமைதியை மனைவியாக ஏற்க வேண்டும். மனைவி எப்படி அவருக்குப் பக்கபலமாக நிற்பார்களோ, அதுபோலவே வாழ்க்கையின் மோசமான தருணங்களில் அமைதி அவர்களுடன் இருக்க வேண்டும்.
மன்னிப்பு மகன் போன்றது
மன்னிப்பை உங்கள் மகனாக பார்க்க வேண்டும். இது நீங்கள் விலகிச் செல்ல முடியாத ஒன்று, அது உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கம். மன்னிப்பை நமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ளும் போது, சில சமயங்களில் மன்னிப்பதும் சரி என்பதை நாம் உணர்கிறோம். மேலும், பெற்றோர்கள் தங்கள் மகனின் ஒவ்வொரு தவறையும் மன்னிப்பது போல, நாமும் மக்களின் தவறுகளை மன்னிக்க வேண்டும்.
சாணக்கிய நீதி
"சத்ய மாதா பிதா ஞானம், தர்மோ ப்ரதா தயா சகா, சாந்திஹ் பத்னி, க்ஷம புத்ரா, ஷதேதே மாம் பாந்தவா'
அர்த்தம்: உண்மை என் தாய், அறிவு என் தந்தை, நீதி என் சகோதரன், இரக்கம் என் நண்பன், அமைதி என் மனைவி, மன்னிப்பு என் மகன். இந்த ஆறு பேர் என் உறவினர்கள் என்கிறார் சாணக்கியர்.



Click it and Unblock the Notifications
