Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சாணக்கிய நீதி படி நீங்க வாழ்க்கையில் சீக்கிரம் பணக்காரரா ஆகணும்னா இந்த விஷயங்களை அவசியம் பாலோ பண்ணணுமாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய அறிஞர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி ஆவார். சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் அனைத்து வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வை விளக்கியுள்ளார். சாணக்கியரின் நீதி சாஸ்திரம் ஒரு நபரை வழிநடத்துவது மட்டுமல்லாமல், உயரங்களை அடைவதற்கான உறுதியான வழிகளையும் கூறுகிறது.

ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் இல்லாதவர்கள் இந்த சமூகத்தால் பல்வேறு வழிகளில் அவமதிக்கப்படுகிறார்கள். எல்லோரும் பணம் சம்பாதிக்கவும் பணக்காரராகவும் விரும்புகிறார்கள். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் செல்வம் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் பணக்காரர் ஆக விரும்பினால், இந்த விஷயங்களை நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நேரத்தின் மதிப்பை புரிந்து கொள்வது
குழந்தை பருவத்திலிருந்தே நீங்கள் நேரத்தின் மதிப்பைக் கற்றுக்கொள்கிறீர்கள். இதை சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்திலும் குறிப்பிட்டுள்ளார். நேரம் உலகின் மிக சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. காலம் எல்லோருக்கும் ஒன்றுதான். ஒருமுறை தொலைந்தால், காலம் திரும்ப வராது. அதனால்தான் நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர் வாழ்க்கையில் ஒருபோதும் எதையும் இழப்பதில்லை.
இலக்குகளிலிருந்து விலகக்கூடாது
ஒரு நபரின் விதியை மாற்ற ஒரு நொடியே போதும் என்று சாணக்கியர் கூறுகிறார். இலக்கை அடைய சரியான நேரத்தில் முடிவுகளை எடுப்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். குறிக்கோளுடன் இருப்பவர்களுக்கு, எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை பாதை சீராகிவிடும். நேரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்துவதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது.
தற்பெருமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது
சாணக்கியர் கூறுகையில், ஒருவரின் நேரம் நன்றாக இருக்கும் போது, அவரிடம் தற்பெருமையும் அதிகரிக்கத் தொடங்குகிறது. அப்படிப்பட்டவர்களிடம் நாளடைவில் மனித குணங்கள் குறையத் தொடங்கும். அத்தகையவர்கள் நல்லது கெட்டதை வேறுபடுத்திப் பார்க்க மறந்து விடுகிறார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் செயல்களுக்காக வருந்துகிறார்கள். அவர்களின் ஆணவத்தைப் பார்த்து நண்பர்களும் உறவினர்களும் ஒதுங்குகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு கெட்ட காலம் வரும்போது, அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள் என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
நல்ல வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும்
நீங்கள் பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். இலக்குகள் இல்லாத ஒரு நபர் ஒருபோதும் வெற்றியாளராகவோ அல்லது பணக்காரராகவோ மாற முடியாது. குறிப்பாக சரியான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். தவறான வழியில் சம்பாதித்த பணம் இன்று இல்லாவிட்டாலும் நாளை நம்மை விட்டுப் போய்விடும் என்பது உறுதி.
கடின உழைப்பு
கடினமாக உழைப்பவர்களுக்கு ஒருபோதும் பணத்தின் பற்றாக்குறை இருக்காது என்றும், அத்தகையவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் அதிர்ஷ்டத்தை உருவாக்குவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். சாணக்கிய நீதியில் கருணை உள்ளவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்களின் நேர்மையால் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் அவர்களுக்கு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தானம் செய்ய வேண்டும்
சாணக்கியரின் கூற்றுப்படி, கோவிலில் அவ்வப்போது தட்சிணை வழங்குவது இறைவனின் அருளையும் உங்கள் செல்வத்தையும் அதிகரிக்கும். இதன்மூலம் உங்கள் வீட்டில் வறுமை இருக்காது. ஆனால் அதிகப்படியாக தானம் கொடுப்பது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சாணக்கியர் கூறுகிறார். எப்பொழுதும் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்யுங்கள். தொண்டு செய்வதன் மூலம் ஒரு நபரின் பணம் இரட்டிப்பாகத் தொடங்குகிறது.
பணத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்
சாணக்கியரின் கொள்கையின்படி, பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதைச் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதும் அவசியம். பணத்தைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால், அது கையிலிருந்து தண்ணீர் போல வீணாகும். எனவே பணத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது போதாது என்கிறார் சாணக்கியர். அதிக பணம் சம்பாதிப்பது உங்களை பணக்காரர்களாக மாற்றாது, அதை பயன்படுத்தும் முறைதான் உங்களை செல்வந்தராக மாற்றும்.



Click it and Unblock the Notifications
