Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
சாணக்கிய நீதி படி ஒருவர் முழுமையான வாழ்க்கையை வாழ இந்த 4 விஷயங்கள் அவசியம் இருக்கணுமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியான சாணக்கியர் தான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை சாணக்கிய நீதி எனும் புத்தகமாகத் தொகுத்தார். இந்த புத்தகத்தில் வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
ஒரு நபர் தனது செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை அனுபவிக்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். மனித உறவுகள் பற்றிய பல முக்கிய விஷயங்களையும் அவர் தனது கொள்கைகளில் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் கடைசி மூச்சு வரை நம்மை விட்டுப் பிரியாத சில தோழர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்பினார். சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, அறிவு என்பது ஒரு ஆயுதம் போன்றது, எவ்வளவு கடினமான தடைகளையும் கூர்மையான ஆயுதம் உடைத்தெறிந்து விடும். அறிவை விட சிறந்த நண்பன் ஒரு மனிதருக்கு இருக்க முடியாது. எனவே ஒருபோதும் அறிவை மழுங்க விடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
இதன் காரணமாகவே ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார், மேலும் இது உங்கள் மரியாதைக்கு காரணமாகிறது. அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, இயல்பிலேயே மிகவும் நேர்மையான ஒரு நபருக்கு பல எதிரிகள் உள்ளனர். மேலும், இத்தகைய இயல்புடையவர்கள் மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரு நேரான, மென்மையான மரம் விரைவாக வெட்டப்படுகிறது. அதேபோல், நேர்மையை சற்று குறைக்கவும். மேலும், பத்து பேர் மத்தியில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதை எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் சில நேரங்களில் தோல்வி அவசியம். தோல்வியை சந்திக்காத ஒருவருக்கு எப்போதும் வெற்றியின் மதிப்பு தெரியாது என்று நம்பப்படுகிறது. தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்றார் சாணக்கியர். இதனுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். தவறுகளைத் திருத்திக் கொண்டால் விரைவில் வெற்றி பெறலாம்.
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை விட தர்ம வாழ்க்கை முக்கியமானது என்று நம்பினார். உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பிறகும் தர்மம் ஒருவரை விட்டு விலகாது என்று அவர் நம்பினார்.
அதைப் பின்பற்றி அதன் வழியில் நடப்பவர் புண்ணிய பலன்களைப் பெறுகிறார். தர்மத்தை கடைபிடிப்பவர்கள் எப்போதும் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
