Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சாணக்கிய நீதி படி ஒருவர் முழுமையான வாழ்க்கையை வாழ இந்த 4 விஷயங்கள் அவசியம் இருக்கணுமாம்...!
Chanakya Niti: இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியான சாணக்கியர் தான் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை சாணக்கிய நீதி எனும் புத்தகமாகத் தொகுத்தார். இந்த புத்தகத்தில் வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
ஒரு நபர் தனது செயல்களுக்கு ஏற்ப நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை அனுபவிக்கிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். மனித உறவுகள் பற்றிய பல முக்கிய விஷயங்களையும் அவர் தனது கொள்கைகளில் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் கடைசி மூச்சு வரை நம்மை விட்டுப் பிரியாத சில தோழர்கள் இருக்கிறார்கள் என்று அவர் நம்பினார். சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், அவர்கள் உங்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, அறிவு என்பது ஒரு ஆயுதம் போன்றது, எவ்வளவு கடினமான தடைகளையும் கூர்மையான ஆயுதம் உடைத்தெறிந்து விடும். அறிவை விட சிறந்த நண்பன் ஒரு மனிதருக்கு இருக்க முடியாது. எனவே ஒருபோதும் அறிவை மழுங்க விடக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
இதன் காரணமாகவே ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார், மேலும் இது உங்கள் மரியாதைக்கு காரணமாகிறது. அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும்.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, இயல்பிலேயே மிகவும் நேர்மையான ஒரு நபருக்கு பல எதிரிகள் உள்ளனர். மேலும், இத்தகைய இயல்புடையவர்கள் மக்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரு நேரான, மென்மையான மரம் விரைவாக வெட்டப்படுகிறது. அதேபோல், நேர்மையை சற்று குறைக்கவும். மேலும், பத்து பேர் மத்தியில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதை எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும்.
சாணக்கியரின் கூற்றுப்படி, வாழ்க்கையில் சில நேரங்களில் தோல்வி அவசியம். தோல்வியை சந்திக்காத ஒருவருக்கு எப்போதும் வெற்றியின் மதிப்பு தெரியாது என்று நம்பப்படுகிறது. தோல்வியே வெற்றிக்கான முதல் படி என்றார் சாணக்கியர். இதனுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் உங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். தவறுகளைத் திருத்திக் கொண்டால் விரைவில் வெற்றி பெறலாம்.
சாணக்கியரின் கூற்றுப்படி, பணத்தை விட தர்ம வாழ்க்கை முக்கியமானது என்று நம்பினார். உயிருடன் இருக்கும்போது மட்டுமல்ல, இறந்த பிறகும் தர்மம் ஒருவரை விட்டு விலகாது என்று அவர் நம்பினார்.
அதைப் பின்பற்றி அதன் வழியில் நடப்பவர் புண்ணிய பலன்களைப் பெறுகிறார். தர்மத்தை கடைபிடிப்பவர்கள் எப்போதும் வாழ்க்கையில் வெற்றியைப் பெறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications












