Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த விஷயங்கள் ஒருவர் பிறப்பதற்கு முன்னரே எழுதப்பட்டவை... இதை யாராலும் மாற்றமுடியாதாம்...!
கௌடில்யர் மற்றும் விஷ்ணுகுப்தர் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் சாணக்கியர் இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு ஞானி ஆவார். அவரின் அறிவுரைகள் மற்றும் தத்துவங்கள் எக்காலத்திற்கும் பொருந்துபவையாக உள்ளன.
தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையில் வெற்றிக்கான ரகசியங்களையும், அதற்கான நெறிமுறைகளைப் பற்றியும் சாணக்கியர் விளக்கியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி ஒருவரின் விதியானது அவர் தாயின் கருவில் இருக்கும்போதே எழுதப்பட்டு விடுகிறது. அவர் எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனை மாற்ற முடியாது.

ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பே அவருக்கான சில விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆயுள்
ஒரு மனிதன் பிறந்த பிறகு, அந்த உடலில் அவர் பூமியில் எவ்வளவு காலம் செலவிடுவார் என்பது முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, அந்த நபரின் ஆயுட்காலம் முன்னரே தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கிறார். உலக இன்ப துன்பங்களை அனுபவித்த பிறகு, ஒரு குறிப்பிட்ட தேதியில் இறந்து விடுகிறார். அவர் இந்த பூமியில் எத்தனை முயற்சி செய்தாலும் அவரால் விதியை வெல்லவோ, ஆயுளை அதிகரிக்கவோ முடியாது.
கர்மா
உங்கள் செயல்கள் நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி அதற்கான பலன்களை நீங்கள் அடைந்தே தீருவார்கள் என்று சாணக்கியர்கூறுகிறார். கர்மவினையின்படியே ஒருவரின் வாழ்வின் தலைவிதியும் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் நிம்மதியின்மை உங்கள் கடந்தகால கர்மங்களின் விளைவு என்று சாணக்கியர் கூறுகிறார். நிகழ்காலத்தில் நல்லது செய்வதன் மூலம் உங்கள் கர்மாவை மேம்படுத்தலாம். ஆனால் கடந்த கால கர்மாவின் கணக்கை உங்களால் மாற்ற முடியாது. உங்கள் பிறப்பின் இன்ப துன்பங்கள் அனைத்தும் உங்கள் பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை என்று சாணக்கியர் கூறுகிறார்.
செல்வம்
ஒரு நபர் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும், அவர் வாழ்க்கையில் எவ்வளவு கல்வி பெறுவார் என்பது அவரது விதியில் எழுதப்பட்டுள்ளது என்று சாணக்கியர் நம்புகிறார். அதைத் தாண்டி எதைச் சாதிக்க முயன்றாலும், ஏமாற்றமே மிஞ்சும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
மரணம்
ஒருவர் பிறக்கும் நாளிலேயே, அவர் இறக்கும் தேதி, இடம் மற்றும் நேரம் தீர்மானிக்கப்படுகிறது என்று சாணக்கியர் கூறுகிறார். மரணத்தைத் தவிர்க்க முடிவில்லா முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, இதனால் மற்றவர்களுக்கு வலி ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இவ்வுலகை விட்டு வெளியேற வேண்டும் என்று சாணக்கியர் கூறினார். உங்களாலும் உங்கள் அன்புக்குரியவர்களாலும் மரணத்தைத் என்ன செய்தாலும் தடுக்க முடியாது என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications













