Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த 4 பிரச்சினைகளில் ஒன்று வந்தாலும் அவர்கள் வாழ்க்கை நரகமாக மாறிவிடுமாம்...!
Chanakya Niti: பண்டைய இந்தியாவின் தவிர்க்க முடியாத மேதைகளில் ஒருவர் சாணக்கியர். சிறந்த இராஜதந்திரியான சாணக்கியர் தன்னுடைய சாணக்கிய நீதி மூலம் வாழ்க்கையில் வெற்றிக்கான பல வழிகளைக் கூறியுள்ளார். இன்பமும் துன்பமும் வாழ்வின் அங்கம். துக்கம் இருந்தால் மகிழ்ச்சியும் இருக்கும்.
மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பற்றிய தனது எண்ணங்களை சாணக்கியர் விரிவாகப் பகிர்ந்துள்ளார், ஆனால் சில துன்பங்கள் ஒரு நபரை வெறுமையாக்கி அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் வாழ செய்கிறது.

இந்த துக்கங்களை நீங்கள் எதிர்கொண்டால், உங்கள் வீடு கண்ணீரில் மிதப்பதுடன், வீடே நரகமாக மாறும். சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் இல்லத்தில் நடக்கும் சில சம்பவங்கள் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சந்தேகத்திற்குரிய வாழ்க்கைத்துணை
சந்தேகத்திற்கு தீர்வு இல்லை. மனதில் சந்தேக எண்ணங்கள் எழுந்தால், வாழ்க்கையே அழிந்துவிடும். திருமண வாழ்க்கையில் சந்தேகம் விஷத்தைப் பரப்புகிறது. திருமண வாழ்க்கை என்பது காரின் இரு சக்கரங்கள் போன்றது, ஒன்று தோல்வியுற்றால், முன்னேறுவது கடினம்.
அதே போல, வாழ்க்கைத்துணை பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் சந்தேக உணர்வு ஏற்பட்டால் திருமண வாழ்க்கையே நரகமாகிவிடும். சில சமயங்களில் இது விவாகரத்து வரை செல்லும்.
விதவையான மகள்
தகுந்த மணமகனுக்கும் மகளுக்கும் நல்ல வீட்டில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தந்தையின் கனவாகும். ஒரு மகள் பிரிந்து செல்வது தந்தைக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது, ஆனால் அவரை ஒரு விதவையாகப் பார்ப்பது மிகவும் வேதனையானது. மகளின் மகிழ்ச்சியைப் பறிப்பது மட்டுமின்றி, மாமியார், தாய்வீடு இரண்டின் அழகையும் கெடுக்கும் அவலம் இது.
குடிகார மகன்
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகன் ஒரு இலட்சியவாதியாக மாற வேண்டும், நிறைய முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். வயதான காலத்தில் மகன் பெற்றோருக்கு ஆதரவாக இருக்க வேண்டும், ஆனால் மகன் பயனற்றவனாக மாறினால், பெற்றோருக்கு அதை விட பெரிய வருத்தம் இல்லை. சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரே , ஆனால் அவர்கள் திறமையாகவும் புத்திசாலியாகவும் இருந்தால், பெற்றோர்கள் ஒருபோதும் முதியோர் இல்லத்தில் வாழ வேண்டிய அவசியம் இருக்காது.
சுயநலமான நண்பன்
நண்பர்கள் நம் வாழ்வின் முக்கிய அங்மானவர்கள். உண்மையான நண்பர்களின் அடையாளம் குறித்தும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். முகத்திற்கு நேராக ஒன்றை பேசிவிட்டு, உங்கள் முதுகுக்கு பின்னால் வேரொறொன்றை பேசுபவர்கள் இருக்கிறார்கள், அத்தகையவர்கள் உங்கள் நட்புக்கு ஒருபோதும் தகுதியானவர்களாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஏமாற்றுவது, வஞ்சம் செய்வது அவர்களின் இயல்பு, அவர்கள் உங்களையும் ஏமாற்றத் தயங்காத காலம் வரும். ஒரு நண்பனின் துரோகத்தால் ஏற்படும் வலி என்பது உங்களால் தாங்க முடியாததாக இருக்கும், எனவே அத்தகையவர்களை வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவது நல்லது.



Click it and Unblock the Notifications