Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வறுமை சீக்கிரம் வரப்போகுதுனு அர்த்தமாம்...!
சாணக்கியரின் நீதி நூலான சாணக்கிய நீதி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பல நேர்மையான மற்றும் எளிதான வழிகளை போதிக்கிறது.
சாணக்கியரின் பெயர் பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றில் நிலைபெற்றிருக்க அவரின் ஞானமும், இராஜதந்திரமும்தான் காரணம். தனது புத்திக்கூர்மையால் சந்திர குப்த மௌரியரை அரியணையில் அமர செய்த சாணக்கியர் எப்போதுமே வரலாற்றில் கிங் மேக்கராக போற்றப்படுவார்.

சாணக்கியரின் நீதி நூலான சாணக்கிய நீதி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பல நேர்மையான மற்றும் எளிதான வழிகளை போதிக்கிறது. சாணக்கிய நீதியில் போதனைகள் மட்டுமின்றி, சில எச்சரிக்கைகளும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வாழ்க்கையில் வெற்றி பெற போதனைகள் மட்டுமே போதாது. சாதாரணமென நினைத்து நாம் செய்யும் சில தவறுகள் வெற்றி மற்றும் மகிழ்ச்சியிடமிருந்து நம்மை வெகுதூரம் இழுத்துச் செல்லும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. உங்களை வெற்றியிடமிருந்து பிரிக்கும் உங்களின் அந்த தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆசிரியர்களை அவமதிப்பவர்கள்
குரு கடவுளின் வடிவமாக கருதப்படுகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள் மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெற சரியான கல்வியை வழங்குகிறார்கள், எனவே அவர்களுடன் வாதிடுபவர் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் எப்போதும் மரியாதை கிடைக்காது.

முட்டாளுடன் வாதிடுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, முட்டாள்தனமான ஒருவருடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஏனெனில் இது உங்கள் நேரத்தை மட்டுமே வீணடிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை, தாங்கள் விரும்பியதை மட்டுமே பேசுவார்கள் மற்றும் செய்வார்கள். அதனால்தான் அத்தகைய நபரிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டும்.

பெரியவர்களை அவமதிப்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை அவமதிப்பவர் மற்றும் அவர்களுக்கு தீமை செய்பவர் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார். அத்தகைய வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்காது. பெரியவர்களை அவமதிப்பது கடவுளை அவமதித்ததற்கு சமமாக கருதப்படுகிறது.

துளசி செடி காய்வது
உங்கள் வீட்டில் வைத்திருக்கும் துளசி செடி காய்ந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, துளசியை உலர்த்துவது ஒரு பொருளாதார அடையாளத்தைக் குறிக்கிறது. எனவே, உங்கள் வீட்டில் இந்த செடியை நட்டால், அதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications