Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்..
சாணக்கிய நீதி படி இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வறுமை சீக்கிரம் வரப்போகுதுனு அர்த்தமாம்...!
சாணக்கியரின் நீதி நூலான சாணக்கிய நீதி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பல நேர்மையான மற்றும் எளிதான வழிகளை போதிக்கிறது.
சாணக்கியரின் பெயர் பல நூற்றாண்டுகள் கடந்தும் வரலாற்றில் நிலைபெற்றிருக்க அவரின் ஞானமும், இராஜதந்திரமும்தான் காரணம். தனது புத்திக்கூர்மையால் சந்திர குப்த மௌரியரை அரியணையில் அமர செய்த சாணக்கியர் எப்போதுமே வரலாற்றில் கிங் மேக்கராக போற்றப்படுவார்.

சாணக்கியரின் நீதி நூலான சாணக்கிய நீதி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பல நேர்மையான மற்றும் எளிதான வழிகளை போதிக்கிறது. சாணக்கிய நீதியில் போதனைகள் மட்டுமின்றி, சில எச்சரிக்கைகளும் கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வாழ்க்கையில் வெற்றி பெற போதனைகள் மட்டுமே போதாது. சாதாரணமென நினைத்து நாம் செய்யும் சில தவறுகள் வெற்றி மற்றும் மகிழ்ச்சியிடமிருந்து நம்மை வெகுதூரம் இழுத்துச் செல்லும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. உங்களை வெற்றியிடமிருந்து பிரிக்கும் உங்களின் அந்த தவறுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆசிரியர்களை அவமதிப்பவர்கள்
குரு கடவுளின் வடிவமாக கருதப்படுகிறார் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் நம்மை வழிநடத்துகிறார்கள் மற்றும் வாழ்க்கையில் வெற்றிபெற சரியான கல்வியை வழங்குகிறார்கள், எனவே அவர்களுடன் வாதிடுபவர் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் எப்போதும் மரியாதை கிடைக்காது.

முட்டாளுடன் வாதிடுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, முட்டாள்தனமான ஒருவருடன் ஒருபோதும் வாக்குவாதம் செய்யக்கூடாது. ஏனெனில் இது உங்கள் நேரத்தை மட்டுமே வீணடிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை, தாங்கள் விரும்பியதை மட்டுமே பேசுவார்கள் மற்றும் செய்வார்கள். அதனால்தான் அத்தகைய நபரிடம் இருந்து தூரமாக இருக்க வேண்டும்.

பெரியவர்களை அவமதிப்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பெரியவர்களை அவமதிப்பவர் மற்றும் அவர்களுக்கு தீமை செய்பவர் ஒருபோதும் வெற்றி பெறமாட்டார். அத்தகைய வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்காது. பெரியவர்களை அவமதிப்பது கடவுளை அவமதித்ததற்கு சமமாக கருதப்படுகிறது.

துளசி செடி காய்வது
உங்கள் வீட்டில் வைத்திருக்கும் துளசி செடி காய்ந்தால், அது அசுபமாக கருதப்படுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, துளசியை உலர்த்துவது ஒரு பொருளாதார அடையாளத்தைக் குறிக்கிறது. எனவே, உங்கள் வீட்டில் இந்த செடியை நட்டால், அதை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications