Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி உங்க வாழ்க்கையில் இந்த 4 அறிகுறிகள் இருந்தால் நீங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த அறிஞராக அறியப்படுகிறார். அவரது கொள்கைகள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம். அவரது கொள்கைகள் மூலம் ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடையலாம்.
திருமண வாழ்க்கையோ, வேலையோ, அரசியலோ, சமூக வாழ்க்கையோ எதுவாக இருந்தாலும் மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து விஷயங்கள் பற்றியும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார்.

சாணக்கியரின் கொள்கைகள் சற்று கடுமையாக இருந்தாலும், அவர் சொன்ன பல விஷயங்கள் உங்களை வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் மாற்றிவிடும்.
கர்மா என்பது வழிபாடு, அது வெறும் சொல் அல்ல. மனிதன் நல்லவர்களாவது அவருடைய குணத்தால் அல்ல, அவருடைய செயல்களால். மனிதனின் செயல்கள் அவரது நிலையையும் திசையையும் தீர்மானிக்கிறது. நல்ல, கெட்ட செயல்களின் பலன்கள் நிகழ்காலத்தில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் கிடைக்கும்.
ஆச்சார்ய சாணக்கியர் சாதாரண தவம் மூலம் அடைய முடியாத விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இந்த 4 விஷயங்கள் உள்ளவர்கள் அதிர்ஷ்டத்தில் பணக்காரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். இந்த சந்தோஷம் இறுதிவரை நிலைக்கும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
நல்லொழுக்கமுள்ள மனைவி
வாழ்க்கையில் விவேகமான மற்றும் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கைத் துணை அனைவருக்கும் கிடைத்துவிட மாட்டார்கள். முற்பிறவியில் ஒருவரின் நற்செயல்களின் அடிப்படையில் மட்டுமே இந்த மகிழ்ச்சி கிடைக்கிறது.
நல்லொழுக்கமுள்ள வாழ்க்கைத் துணையை வைத்திருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெண்களை மதிப்பவர்கள், ஒவ்வொரு இன்பத்திலும், துன்பத்திலும் உடன் வருபவர்களுக்கு, ஒவ்வொரு பிறவியிலும் புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்கிறார் சாணக்கியர்.
பணத்தைப் பயன்படுத்துதல்
பணம் இல்லாமல் வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும், எனவே அனைவரிடமும் பணம் இருக்க வேண்டும். சிலரிடம் அது குறைவாக இருக்கும், சிலரிடம் அது அதிகமாக இருக்கும், ஆனால் அனைவருக்கும் பணத்தை சரியாக பயன்படுத்தும் திறமை இல்லை.
பணத்தை முறையாகப் பயன்படுத்தும் குணம், லக்ஷ்மி தேவியை மதிக்கும், அதன் மதிப்பைப் புரிந்துகொள்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பணத்தை சரியாக கையாளும் அறிவு உங்களிடம் இல்லையென்றால், உங்கள் வாழ்நாள் முழுவதும் லட்சுமியைப் பெற நீங்கள் போராட வேண்டியிருக்கும்.
நன்கொடை
நேர்மையான இதயத்துடன் செய்யப்படும் தானம் ஏழைகளையும் பணக்காரர் ஆக்குகிறது. தொண்டு செய்யும் மனப்பான்மை உள்ளவர்கள் வாழ்க்கையில் எப்போதும் முன்னேறுவார்கள் என்று சாணக்கியர் கூறியுள்ளார். வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.
ஜீரணிக்கும் திறன்
பிடித்த உணவை ஜீரணிக்கும் சக்தியைப் பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். எவ்வளவு நல்ல உணவை சாப்பிட்டாலும் ஜீரணிக்க முடியாவிட்டால், உடல் வீணாகி, நோய்கள் சூழ்ந்து கொள்ளும்.



Click it and Unblock the Notifications












