Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
சாணக்கிய நீதி படி மனைவிகள் இந்த ரகசியங்களை ஒருபோதும் கணவரிடம் சொல்லக்கூடாதாம்...இல்லனா பிரச்சினைதான்!
கணவன்-மனைவி இடையே இருக்கும் உறவானது அன்பு, நம்பிக்கை, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயங்கள் உறவில் குறையும்போது அது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
வாழ்க்கையை தனித்தனியாக வாழ்வதைத் தவிர்த்து, தம்பதிகள் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ வேண்டும். துக்கமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, இருவரும் அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால் அந்த உறவு காலத்திற்கும் நிலைத்திருக்கும். திருமண பந்தம் வலுவாக இருக்க, தம்பதிகள் ஒருவருக்கொருவர் எந்த ரகசியத்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் சாணகியரின் கூற்றுப்படி, பெரும்பாலான மனைவிகள் தங்கள் கணவரிடம் சொல்லாக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. ஏனெனில் அவர்கள் அந்த ரகசியத்தைக் கூறினால், திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மாமியாரின் தவறுகள்
திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் மாமியாரின் குறைகள் மற்றும் தவறுகளை மறைக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கணவன் மனைவி உறவில் பாதிப்பு ஏற்படும் மற்றும் திருமண வாழ்வில் இடையூறு ஏற்படும்.
தானம்
வலது கை செய்யும் தானம் இடது கைக்கு தெரியக்கூடாது, அப்போதுதான் நீங்கள் அதற்கான முழுப்பலனைப் பெறுவீர்கள். செய்த தானத்தை சொல்லிக்காட்டும்போது அதனால் பலன்கள் கிடைக்காமல் போகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி ஏதாவது தானம் செய்தால் அதை கணவரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சேமிப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி தனது கணவரின் அல்லது அவரது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழிக்காமல் சேமிக்க வேண்டும். ஆனால் அதனை எப்போதும் கணவரிடம் சொல்லக்கூடாது. இந்த பணம் குடும்பத்தின் கடினமான காலங்களில் உதவியாக இருக்கும். இந்த சேமிப்பை முன்கூட்டியே கணவரிடம் சொன்னால் அது வேறு விஷயங்களுக்கு செலவு செய்யப்படலாம்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான தந்திரங்கள்
மனைவிகள் தங்கள் கணவரை வேறொரு ஆணுடன் எப்போதும் ஒப்பிடக் கூடாது. இப்படிச் செய்வதால் கணவரின் சுயமரியாதையை பாதிக்கும், இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படத் தொடங்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். இது கணவர்களுக்கும் பொருந்தும், அவர்கள் தங்கள் மனைவியை வேறொரு பெண்ணுடன் ஒருபோதும் ஒப்பிடவே கூடாது.
மரியாதைக்குரிய நடத்தை
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். பணிவால் யாருடைய மனதையும் வெல்ல முடியும். கண்ணியமான நடத்தை கோபத்தை நீக்குகிறது, எனவே திருமண வாழ்க்கையில் உங்களுக்குள் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்
கோபத்தைக் கட்டுப்படுத்தினால் திருமண வாழ்க்கை வெற்றி பெறும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் கோபமாக இருக்கும்போது அவரால் நல்லது கெட்டதை பிரித்து பார்க்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உறவில் விரிசல் ஏற்படலாம். எனவே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

