Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
சாணக்கிய நீதி படி மனைவிகள் இந்த ரகசியங்களை ஒருபோதும் கணவரிடம் சொல்லக்கூடாதாம்...இல்லனா பிரச்சினைதான்!
கணவன்-மனைவி இடையே இருக்கும் உறவானது அன்பு, நம்பிக்கை, பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயங்கள் உறவில் குறையும்போது அது திருமண வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்துகிறது. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது.
வாழ்க்கையை தனித்தனியாக வாழ்வதைத் தவிர்த்து, தம்பதிகள் வாழ்க்கையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ வேண்டும். துக்கமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, இருவரும் அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால் அந்த உறவு காலத்திற்கும் நிலைத்திருக்கும். திருமண பந்தம் வலுவாக இருக்க, தம்பதிகள் ஒருவருக்கொருவர் எந்த ரகசியத்தையும் வைத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் சாணகியரின் கூற்றுப்படி, பெரும்பாலான மனைவிகள் தங்கள் கணவரிடம் சொல்லாக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. ஏனெனில் அவர்கள் அந்த ரகசியத்தைக் கூறினால், திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
மாமியாரின் தவறுகள்
திருமணத்திற்குப் பிறகு, பெண்கள் தங்கள் மாமியாரின் குறைகள் மற்றும் தவறுகளை மறைக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கணவன் மனைவி உறவில் பாதிப்பு ஏற்படும் மற்றும் திருமண வாழ்வில் இடையூறு ஏற்படும்.
தானம்
வலது கை செய்யும் தானம் இடது கைக்கு தெரியக்கூடாது, அப்போதுதான் நீங்கள் அதற்கான முழுப்பலனைப் பெறுவீர்கள். செய்த தானத்தை சொல்லிக்காட்டும்போது அதனால் பலன்கள் கிடைக்காமல் போகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனைவி ஏதாவது தானம் செய்தால் அதை கணவரிடம் ஒருபோதும் சொல்லக்கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
சேமிப்பு
சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி தனது கணவரின் அல்லது அவரது சொந்த சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழிக்காமல் சேமிக்க வேண்டும். ஆனால் அதனை எப்போதும் கணவரிடம் சொல்லக்கூடாது. இந்த பணம் குடும்பத்தின் கடினமான காலங்களில் உதவியாக இருக்கும். இந்த சேமிப்பை முன்கூட்டியே கணவரிடம் சொன்னால் அது வேறு விஷயங்களுக்கு செலவு செய்யப்படலாம்.
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கான தந்திரங்கள்
மனைவிகள் தங்கள் கணவரை வேறொரு ஆணுடன் எப்போதும் ஒப்பிடக் கூடாது. இப்படிச் செய்வதால் கணவரின் சுயமரியாதையை பாதிக்கும், இதனால் திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படத் தொடங்கும் என்று சாணக்கியர் கூறுகிறார். இது கணவர்களுக்கும் பொருந்தும், அவர்கள் தங்கள் மனைவியை வேறொரு பெண்ணுடன் ஒருபோதும் ஒப்பிடவே கூடாது.
மரியாதைக்குரிய நடத்தை
சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் மரியாதையுடன் நடத்த வேண்டும். பணிவால் யாருடைய மனதையும் வெல்ல முடியும். கண்ணியமான நடத்தை கோபத்தை நீக்குகிறது, எனவே திருமண வாழ்க்கையில் உங்களுக்குள் சண்டைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துதல்
கோபத்தைக் கட்டுப்படுத்தினால் திருமண வாழ்க்கை வெற்றி பெறும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் கோபமாக இருக்கும்போது அவரால் நல்லது கெட்டதை பிரித்து பார்க்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உறவில் விரிசல் ஏற்படலாம். எனவே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவனும் மனைவியும் கோபப்படுவதை தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

