Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் இருக்கும் ஆண்கள் அவங்க ,மனைவியை திருப்தியை வைச்சுக்குவாங்களாம்...!
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பல விலங்குகளின் குணங்களின் அடிப்படையில் மனிதர்களுக்கு வாழ்க்கையின் அம்சத்தை விளக்கியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, மனிதன் ஒவ்வொரு விலங்குகளிடமிருந்தும் ஏதாவது கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் காகம் போலவும், ஆண்கள் நாய் போலவும் இருக்க வேண்டும் என்று சாணக்கியர் விளக்குகிறார். ஒரு ஆணுக்கு நாயின் 5 குணங்கள் இருந்தால், அவர்களின் மனைவி எப்போதும் திருப்தியாக இருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அத்தகைய குணங்களைக் கொண்ட ஒரு ஆண் குடும்பத்தில் மகிழ்ச்சியைப் பாதுகாப்பார் மற்றும் குடும்பத்தை செழிப்பாக வைத்திருப்பார் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒரு மனிதனுக்கு இந்த திறனைக் கொடுக்கும் அந்த குணங்கள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வீரம்
நாய் என்பது தன் உரிமையாளருக்காக உயிரைக் கூட கொடுக்கக்கூடிய ஒரு வீரமான விலங்காகும். அதேபோல், தேவைப்படும் போது, ஒரு ஆணும் தைரியமாக இருக்க வேண்டும். ஒரு அதிர்ஷ்டசாலி பெண்ணுக்கு மட்டுமே தனக்காக தனது உயிரை பணயம் வைக்கும் ஒரு ஆணைப் பெறுகிறார்.
வருமானத்தில் திருப்தி அடைய வேண்டும்
ஒரு மனிதன் தன்னால் இயன்ற அளவு உழைக்க வேண்டும், தங்கள் வேலையில் கிடைக்கும் பணத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். சம்பாதித்த பணத்தில் குடும்பம் நடத்த வேண்டும். இதைச் செய்பவனே சிறந்த மனிதன். ஒரு நாய் தனக்குக் கொடுக்கப்பட்ட உணவில் திருப்தி அடைவது போல, ஒரு மனிதன் தான் பெறும் அன்பின் அளவில் திருப்தி அடைய வேண்டும்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
ஆழ்ந்த உறக்கத்தில் கூட நாய்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கும் அதே போல ஆண் தன்னுடைய மனைவி மற்றும் கடமைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எப்பொழுதும் எதிரிகளிடம் கவனமாக இருங்கள், எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், குடும்பத்தைப் பாதுகாக்க ஒரு மனிதன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய குணங்கள் கொண்ட ஒருவரை மணந்தால் ஒரு பெண் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்.
விசுவாசம்
நாய் ஒரு விசுவாசமான உயிரினமாகும், அதன் விசுவாசத்தை யாராலும் சந்தேகிக்க முடியாது. அதே போல ஒரு ஆணும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இது பெரும்பாலான ஆண்களிடம் இப்போது காணப்படுவதில்லை.
பெரும்பாலான ஆண்கள் மனைவி தவிர பிற பெண்கள் மீது ஈர்ப்புக் கொள்கிறார்கள், அத்தகைய வீட்டில் இருக்கும் பெண் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார். நாயின் விசுவாசம் கொண்ட ஒரு ஆணை கணவராக பெற்ற மனைவி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்.
திருப்தியாக வைத்திருக்க வேண்டும்
ஒரு ஆண் தன் மனைவியை எப்போதும் திருப்தியாக வைத்திருக்க வேண்டும். உங்கள் மனைவியின் அனைத்து தர்க்கரீதியான கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளிக்க வேண்டும், மேலும் தங்கள் மனைவியை உணர்ச்சிரீதியாக திருப்திப்படுத்த வேண்டும்.
இப்படிச் செய்யும் ஆண் தன் மனைவியிடம் எப்போதும் உண்மையான அன்புடன் இருப்பார், அவர்களின் உறவுகளும் நீண்ட காலம் தொடரும்.



Click it and Unblock the Notifications
