Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
சாணக்கிய நீதி படி வாழ்க்கையில் இந்த 4 விஷயங்களை பெற்றவர்கள் வாழும்போதே சொர்க்கத்தை அனுபவிப்பார்களாம்...!
பண்டைய இந்தியாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவரான சாணக்கியர் தனது வாழ்க்கையின் அனுவங்களை சாணக்கிய நீதி என்ற புத்தகத்தில் தொகுத்துள்ளார். இன்றும் சாணக்கிய நீதி பிரபலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாணக்கியரின் வார்த்தைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒருவர் எதையும் சாதிக்க முடியும் மற்றும் தங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கலாம்.
சாணக்கியர் மனித வாழ்க்கை வெற்றியடைய பல கொள்கைகளை வழங்கியுள்ளார். இந்த கொள்கைகளை கடைபிடிப்பவர் தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. நமது புராண நூல்களில், நல்லொழுக்கமுள்ள ஆத்மாக்கள் வசிக்கும் பெரிய வான உலகத்தைப் பற்றிய விளக்கம் உள்ளது.

நற்செயல்கள் செய்பவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது ஐதீகம். ஆனால் சாணக்கிய நீதியின் படி சிலருக்கு பூமியிலேயே சொர்க்கம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சாணக்கிய நீதியில் மொத்தம் 17 அத்தியாயங்கள் உள்ளன மற்றும் வாழ்க்கை மற்றும் தொழில் தொடர்பான அனைத்து முக்கிய விஷயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சாணக்யநீதியின் இரண்டாம் அத்தியாயத்தில் பூமி சிலருக்கு சொர்க்கமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில இன்பங்களையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பவர்களுக்கு பூமியே சொர்க்கம் என்று கூறப்படுகிறது.
கீழ்படியும் மகன்
சாணக்கிய நீதியின் இரண்டாம் அத்தியாயத்தில், கீழ்ப்படிதலுள்ள மகனைப் பெற்ற தந்தை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனென்றால், பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து மதிக்கும் மகன் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுகிறான். அத்தகைய மகனைக் கொண்ட பெற்றோர்கள் எப்போதும் தங்கள் வளர்ச்சியைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களுக்கு பூமியே சொர்க்கம் போன்றதாக இருக்கும். பெற்றோரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் குழந்தைகளைப் பெற்றவர்கள் உலகில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகக் கருதப்படுகிறார்கள்.
உறுதுணையான மனைவி
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, மனைவியின் முழு ஆதரவைப் பெறுபவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. சாணக்கியரின் கூற்றுப்படி, கணவனும் மனைவியும் வாழ்க்கைத் தேரின் இரு சக்கரங்கள். மனைவி கணவனைப் புரிந்து கொண்டு, இக்கட்டான சமயங்களில் அவருக்கு நிழலாக நின்று, அவருக்குத் தகுந்த வழிகாட்டுதல் அளித்து, ஊக்கப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட மனைவியைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.
புத்திசாலி மனைவி
மனைவி புத்திசாலியாக இருந்தால், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை முழு மரியாதையுடன் வீட்டை நன்றாக நடத்துவார். அத்தகைய மனைவியின் கணவனுக்கு குடும்பத்திலும் சமுதாயத்திலும் மரியாதை கிடைக்கும். தகுதியான மனைவியைக் கொண்ட ஒரு மனிதனுக்கு பூமி சொர்க்கம் போன்றது. ஒரு திறமையான மற்றும் அறிவார்ந்த மனைவி தனது கணவரின் வெற்றியில் சிறப்புப் பங்கு வகிக்கிறார். மேலும் நெருக்கடியான காலங்களில் மட்டுமே மனைவியை அடையாளம் காண முடியும் என்கிறார் சாணக்கியர்.
போதுமான செல்வம் கொண்டவர்கள்
பேராசையே துன்பத்திற்கு முக்கியக் காரணமாகும். பேராசையிலிருந்து விடுபட்டு, தன் சொந்தச் செல்வத்தால் திருப்தியடைபவர்களுக்கு பூமியில் வாழ்வதே சொர்க்கம் என்கிறார் சாணக்கியர். பணத்தின் பேராசையால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் தியாகம் செய்கிறார்கள். அதனால்தான் வாழ்க்கையில் சிக்கல்களும் எழுகின்றன. தன்னிடம் இருக்கும் செல்வத்தில் திருப்தி அடைபவர்கள் நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள்.



Click it and Unblock the Notifications

