Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களை உங்க மனைவியிடம் நீங்க சொன்னா உங்களால் நிம்மதியாவே வாழ முடியாதாம்...!
Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவில் ஒரு இராஜதந்திரி, அரசியல்வாதி, பொருளாதாரம் மற்றும் சமூகவியலாளர் என பல துறைகளில் பிரபலமானவராக இருந்தார். ஒரு துறையில் மட்டுமின்றி பல துறைகளில் அவர் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். சாணக்கியர் வாழ்க்கையில் வெற்றி பெற சில கொள்கைகளை வகுத்தார். இன்றும் மக்கள் தங்கள் வாழ்வில் அதனை பயன்படுத்துகின்றனர். அந்த கொள்கைகளின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியில் பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதை பின்பற்றுவதன் மூலம் உங்கள் தொழிலில் வெற்றி பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம். திருமண வாழ்வைப் பற்றி சாணக்கியர் பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன என்று சாணக்கிய நீதி கூறுகிறது.

குறிப்பாக ஆண்கள் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இந்த விஷயங்களை தங்கள் மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ளக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பலவீனம்
ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கணவன் தனது பலவீனங்களை மனைவியிடம் இருந்து எப்போதும் மறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒருவரின் பலவீனத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லக்கூடாது, அது மனைவியாக .
ஏனெனில் மனைவி தன் ஆசைகளை நிறைவேற்ற கணவனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்வார். இதனால் வீட்டிலும் சமூகத்திலும் அவமானங்களை சந்திக்க நேரிடும்.
சேமிப்பு
சாணக்கிய நீதியின் படி, நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை விரும்பினால், உங்கள் சேமிப்பு பற்றிய அனைத்தையும் உங்கள் மனைவியிடம் தெரிவிக்காதீர்கள். உண்மையில், மனைவிகள் பெரும்பாலான பணத்தை சேமிக்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் கணவனுக்கு அதிக வருமானம் இருக்கும்போது, அவர்களால் தங்கள் செலவைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தேவையற்ற செலவுகள் அதிகரித்து பணத்தட்டுப்பாடு ஏற்படும்.
நன்கொடைகள்
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அவரவர் திறமைக்கேற்ப தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும். ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் தானத்தைப் பற்றி கூறியுள்ளார்.
ஆண்கள் எப்போதும் தங்கள் நன்கொடைகளை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். தானம் பற்றி உங்கள் மனைவியிடம் கூட சொல்லாதீர்கள். நீங்கள் செய்யும் தொண்டுப் பணிகளைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வது அதன் முக்கியத்துவத்தை இழக்கிறது.
அவமரியாதை
ஒரு ஆண் தன் மனைவியை அவமதித்ததைப் பற்றி தற்செயலாகக் கூட சொல்லக் கூடாது. ஏனெனில் கணவரால் ஏற்படும் அவமானத்தை எந்த மனைவியாலும் தாங்க முடியாது. பழிவாங்காமல் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது. இதனால் உங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படலாம். எனவே, அவமானங்கள் அல்லது சண்டைகள் பற்றி உங்கள் மனைவியிடம் சொல்ல வேண்டாம்.
துக்கம் மற்றும் தனிப்பட்ட ரகசியங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்களுக்கு ஏதேனும் சோகம் ஏற்பட்டால், அதை உங்கள் மனதிற்குள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். நம் துக்கத்தின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால், நாம் கேலி செய்யப்படுவோம். நாம் யாருடன் நமது துக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறோம், எதிர்காலத்தில் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவர்கள் நமது துக்கங்களையும் ரகசியங்களையும் பிறருக்குப் பகிரங்கப்படுத்த வாய்ப்புள்ளது.
எண்ணங்கள் மற்றும் திட்டங்கள்
தற்செயலாக கூட ஒரு நபர் தனது எண்ணங்களையும் திட்டங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். சாணக்கியர் தனது திட்டங்களை மூடிமறைக்க விரும்புவதாக கூறுகிறார். ஏனென்றால் மற்றவர்கள் உங்கள் திட்டங்களை அறிந்து அவற்றை உங்களுக்கு எதிராக பயன்படுத்த முயற்சி செய்யலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கே தீங்கு விளைவிக்கும்.



Click it and Unblock the Notifications












