Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
சாணக்கிய நீதி படி ஆண்கள் திருமணத்திற்கு பின் இந்த விஷயங்களை மட்டும் செஞ்சுரவே கூடாதாம்...!
Chanakya Niti About Marriage: பண்டைய இந்தியாவின் சிறந்த அரசியல் ஞானியான சாணக்கியரின் கொள்கைகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமானவையாக இருக்கிறது. சாணக்கியரின் நீதி சாஸ்திரம் வேலை, நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் தொடர்பான பல விஷயங்களைக் குறிப்பிடுகிறது. சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் பணம், முன்னேற்றம், திருமணம், நட்பு, பகை, வியாபாரம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வழி செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் சாணக்கியர் பேசியுள்ளார். தம்பதிகள் இருவரின் வாழ்விலும் எப்படி மகிழ்ச்சி வரும், அதற்கு என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.

சாணக்கியரின் கொள்கைகளில், உறவுகளைப் பேணுவது தொடர்பான பாடங்கள் ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. திருமணமான ஒருவர் தனது கற்பனையிலிருந்து விடுபட்டு யதார்த்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறியுள்ளார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அவமரியாதை செய்யக்கூடாது
பெண்களைப் புரிந்துகொள்வது ஆண்களுக்கு எப்படிக் கடினமாக இருக்கிறதோ, அதேபோல பெண்களுக்கும் ஆண்களைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்கிறார் சாணக்கியர். ஆண்கள் பெண்களை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் வார்த்தைகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மனைவியை மதிக்கும் கணவனின் வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.
மற்ற பெண்களின் அழகைக் கண்டு மயங்கக்கூடாது
ஆண்கள் எப்போதும் வெளிப்புற விஷயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள். மற்ற பெண்களின் அழகு அவர்களை மயக்குகிறது மற்றும் அவர்களின் மனதை திசை திருப்புகிறது. இதுவே ஆண் பெண்ணை ஒரு பொருளாக பார்க்க காரணம். ஆனால் இதுவே திருமணத்தில் பிரச்சினைகளையும், அழிவையும் ஏற்படுத்துகிறது. ஆண்கள் எப்போதும்வெளிப்புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உள் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு வாழ்க்கையில் எப்போதும் நிம்மதி கிடைக்கும்.
அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
ஒரு ஆண் எப்போதும் அழகான மற்றும் கண்ணியமான மனைவியை விரும்புகிறார். அழகான மனைவியைப் பெற்ற பிறகு, ஆண்கள் அவர்களை தங்கள் பொருளாகக் கருதுகிறார்கள் மற்றும் அதனால் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். ஆனால் திருமணத்தைப் பொறுத்த வரையில் அவ்வாறு செய்வது தவறு. மனைவி என்பவர் நீங்கள் தற்பெருமையுடன் காட்டிக்கொள்ள பொருள் அல்ல. மனைவியின் அழகை விட அவருடைய மனதின் அழகில் கவனம் செலுத்த வேண்டும். இப்படிச் செய்யும் ஆண் தன் மனைவியாலும் சமுதாயத்தாலும் எப்போதும் மதிக்கப்படுவார்.
மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடக்கூடாது
மனைவி அழகில்லை என்று சொல்லி அவமானப்படுத்தும் ஆண்கள் வாழ்க்கையில் மிகவும் வருத்தப்படுவார்கள். உங்கள் சிறு எண்ணங்களால், உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியே அழிகிறது. இந்த மாதிரியான சிந்தனை கொண்ட ஆண்கள் வீட்டிலோ வெளியிலோ தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. எனவே உங்கள் மனைவியை ஒருபோதும் அவமதிக்காதீர்கள் அல்லது மற்ற பெண்களுடன் ஒப்பிடாதீர்கள்.
இயற்கையான குணத்தை பாராட்ட வேண்டும்
ஒரு பெண் தங்களின் அழகுக்காக இல்லாமல், அவரது குணம் மற்றும் திறமைக்காக பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். எந்த ஒரு மனைவியும் தன் கணவரிடம் மரியாதையையும் பாராட்டையும் விரும்புகிறார். ஒரு கணவர் தன் மனைவியை பாராட்டாமலேயே இருந்தால், அவர் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண மாட்டான்.
எப்போதும் குற்றம் கண்டுபிடிக்கக்கூடாது
ஆண்கள் தங்கள் மனைவியிடம் எப்போதும் குறை காண்பதை தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். ஏனெனில் அவ்வாறு செய்வது அவர்களின் பலவீனத்தை காட்டுகிறது. இந்த பழக்கம் உங்கள் திருமணத்தை எந்த நேரத்திலும் அழிக்கத் தொடங்கும்.



Click it and Unblock the Notifications
