Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருப்பவர்கள் இந்திரனைப் போல வாழ்வார்களாம்... உங்ககிட்ட இருக்கா?
Chanakya Niti: ஆச்சார்யா சாணக்கியரின் புத்திசாலித்தனம் மற்றும் புத்திசாலிராஜதந்திரத்தால் அனைவரும் ஈர்க்கப்பட்டனர். இதனால்தான் அவர் கௌடில்யர் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு திறமையான அரசியல்வாதி, புத்திசாலித்தனமான இராஜதந்திரி, பொருளாதார நிபுணர் என்று அறியப்பட்டார்.
அவர் நீதி சாஸ்திரத்தை இயற்றினார், இதன் மூலம் தனது அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வாழ்க்கை குறித்த பல முக்கியமான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். நல்லவர்களின் பலம் என்பது என்னவென்பது முதல் கெட்டவர்களின் பலவீனம் என்னவென்பது வரை பல விஷயங்களை சாணக்கிய நீதியில் பகிர்ந்துள்ளார். இது தவிர, பல முக்கிய விஷயங்களையும் தனது சாணக்கிய நீதியில் விவரித்துள்ளார்.

சிறந்த மருந்து
சாணக்கிய கொள்கையின்படி அமிர்தம் சிறந்த மருந்து. நல்ல உணவே புலன்கள் அடையும் இன்பத்தில் சிறந்த இன்பமாகும். எல்லாப் புலன்களிலும் கண் மேன்மையானது அதே போல உடலின் எல்லாப் பாகங்களிலும் நெற்றி மேன்மையானது.
ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, ஒருவருடைய கோபமும், திட்டும் மற்றவர்களுக்கு பயத்தை உண்டாக்கவில்லை எனில், அதனால் எந்த பயனும் இல்லை. அவரால் யாரையும் பாதுகாக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. அப்படிப்பட்ட மனிதனால் வாழ்க்கையில் எதுவும் செய்ய முடியாது.
மனதில் பயத்தை உண்டாக்கினால் போதும்
விஷம் இல்லாவிட்டாலும், பாம்பு வேடிக்கையாக நின்றாலே, எதிரில் இருப்பவர் மனதில் பயத்தை உண்டாக்குகிறது, அதேபோல மனிதர்களும் எதிரில் இருப்பவர்களின் மனதில் பயத்தை உண்டாக்கினால் போதும் என்கிறது சாணக்கிய நீதி. இங்கே அது ஆபத்தானதா? இல்லையா? என்பது முக்கியமில்லை. அது உருவாக்கும் பயமே முக்கியம்.
கெட்டவர்கள் எப்படி அழிவார்கள்?
பிறருடைய இரகசியக் குறைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துபவர்கள் மோசமானவர்கள், எறும்புக் குன்றுகளுக்குள் சென்று பாம்பு இறப்பதைப் போலவே அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
இந்திரனை போல வாழக்கூடியவர்கள்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் கடவுளின் கழுத்தில் உங்கள் கைகளால் கட்டிய மாலையை அணிந்தால், இந்திரனுக்கு இணையான மகிமையைப் பெறுவீர்கள். உங்கள் கைகளால் கடவுளுக்கு சந்தனம் அணிவித்தால், உங்கள் கைகளால் கடவுளின் பெயரை எழுதுவது உங்களுக்கு மிகப்பெரிய புண்ணியத்தைக் கொடுக்கும்.



Click it and Unblock the Notifications
