Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களை கடைபிடிப்பவர்கள் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமா வாழ்வார்களாம்...!
Chanakya Niti: சாணக்கியர் மனித குலத்தின் நலனுக்காக பல அறிவுரைகளைக் கூறியுள்ளார், அவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஒருவர் வெற்றியை அடையலாம். மனிதர்களின் ஆரோக்கியம் தொடர்பான சில குறிப்பிட்ட விஷயங்களை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். ஆரோக்கியமே மனிதனின் மிகப்பெரிய செல்வம் என்பது நாம் அறிந்ததே. ஒருவர் ஆரோக்கியமாக இருந்தால் அவர் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் அடைய முடியும் என்று சாணக்கியர் நம்பினார்.
தற்காலத்தில் மனிதர்கள் பல நோய்களுடன் வாழ்கின்றனர். மனிதர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆச்சார்ய சாணக்கியர் சொன்ன சில விஷயங்களை கடைபிடித்தால், நிச்சயம் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியத்தைப் பற்றி சாணக்கியர் என்ன கூறியுள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உணவு மற்றும் நீர்
உணவு ஜீரணமாகாதபோது தண்ணீர் குடிப்பது மருந்து போன்று செயல்படக்கூடும். உணவு செரித்த அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. உணவுக்கு இடையில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தை பாதுகாப்பது. இதற்கிடையில், சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது விஷம் போன்றது. எனவே சாப்பிடும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கிய உணவுகள்
உலர் உணவை விட தூள் தானியங்கள் அதிக சத்தானது. தூள் தானியங்களை விட பால் 10 மடங்கு நன்மை பயக்கும். இதற்கிடையில், இறைச்சி பாலை விட 10 மடங்கு அதிக சத்தானது. இறைச்சியை விட நெய் 10 மடங்கு அதிக சத்து நிறைந்தது என்று சாணக்கியர் கூறுகிறார். இவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மிகவும் முக்கியமான உடல் உறுப்பு
உலகின் மிகப்பெரிய இன்பங்களில் உணவே முக்கியமான இன்பமாகும். உண்பதில்தான் மிகப்பெரிய இன்பம் கிடைக்கிறது. உடலில் உள்ள அனைத்து புலன்களிலும் கண்கள் மிக முக்கியமானவை. அனைத்து உறுப்புகளிலும் மூளை மிகவும் முக்கியமானது என்றும் சாணக்கியர் கூறுகிறார்.
மசாஜ்
சாணக்கியரின் கூற்றுப்படி, நல்ல ஆரோக்கியத்திற்கும் ஆரோக்கியமான உடலுக்கும் வாரத்திற்கு ஒருமுறை முழு உடல் மசாஜ் செய்ய வேண்டும். இது சருமத் துளைகளைத் திறந்து உள்ளே இருக்கும் அழுக்குகளை வெளியேற்றும், மசாஜ் செய்த பின் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தானியங்கள்
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு தானியங்களை உண்ண வேண்டும். தானியங்களை உண்பதால் ஒரு நபர் ஆற்றல் மிக்கவராக இருப்பதோடு, அவர்களின் செரிமான அமைப்பும் வலுவடைகிறது. செரிமான அமைப்பு வலுவாக உள்ளவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
பால்
பால் அருந்துவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பால் தானியங்களை விட பத்து மடங்கு வலிமையானது. தினமும் பால் அருந்துவது ஒரு மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பால் உட்கொள்வது எலும்புகளின் வலிமைக்கு மிகவும் நல்லதாகும்.



Click it and Unblock the Notifications












