Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சாணக்கிய நீதி படி இந்த குணங்கள் இருப்பவர்கள் வாழ்க்கையில் எதிரிகளை ஜெயிச்சுகிட்டே இருப்பார்களாம்...!
சாணக்கியரின் கொள்கைகள் மற்றும் அறிவுரைகள் எக்காலத்திற்கும் பொருந்துபவை. அதனால்தான் அவரின் சாணக்கிய நீதி இன்றும் புகழ்பெற்ற நூலாக விளங்குகிறது. வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான நேர்மையான மற்றும் எளிய வழிகள் சிலவற்றை சாணக்கியர் விளக்கியுள்ளார்.
வாழ்க்கையில் சாணக்கிய நீதியின் கூற்றுப்படி எதிரிகளை அடக்கி ஆள்பவர்களே வாழ்க்கையில் அசைக்க முடியாத வெற்றியை பெறுகிறார்கள். எதிரி என்பது யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும், அதன் நோக்கம் தீங்கு விளைவிப்பது மட்டுமே. எதிரியை பலவீனனாகக் கருதும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, எதிரி கண்ணுக்குத் தெரியாதபோது, கண்ணுக்குத் தெரியாமல் தாக்க முயற்சிக்கும் போது, ஒருவர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

நோய்கள், தகுதிகுறைபாடுகள் கூட எதிரிகள்தான்
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, எதிரி எப்போதும் மனித உருவில் மட்டும் இருப்பதில்லை. மாறாக, நோய்கள் உடல் குறைபாடுகள் மற்றும் தீய குணங்களும் மோசமான எதிரிகள் போன்றவைதான், அவை கண்ணுக்குத் தெரியாத ஆனால் ஆபத்தான எதிரியைப் போல தீங்கு விளைவிக்கும். எனவே அவை உங்களை ஒருபோதும் வெல்வதற்கு அனுமதிக்காதீர்கள், கவனமாக இருங்கள்.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் ஆபத்தானவர்கள்
சாணக்கியரின் கொள்கையின்படி, எதிரிகள் ரகசியமாகத் தாக்கும்போது அதிலும் கண்ணுக்குத் தெரியாமல் இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் ஒரு சிறிய கவனக்குறைவும் உங்கள் வாழ்க்கையை நிலைகுலையச் செய்யும்.
எதிரியை பலவீனமாக நினைக்கக்கூடாது
சாணக்கிய நீதியின் கூற்றுப்படி, ஒரு நபரின் திறமை மற்றும் பலம் நெருக்கடி காலங்களில் மட்டுமே சோதிக்கப்படுகின்றன. எதிரியை ஒருபோதும் பலவீனமாகக் கருதக்கூடாது, இது நீங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கும். எதிரியை எப்போதும் கண்காணித்து, அவர்களின் நகர்வை அனுமானித்து, எந்த சூழலுக்கும் தயாராக இருக்க வேண்டும். நெருக்கடி ஏற்படும் போது தைரியத்தை இழக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
தன்னம்பிகையை இழந்து விடக்கூடாது
எதிரியை தோற்கடிக்க கடுமையாகப் போராடத் தேவையிருந்தால், அதை அவசியம் செய்ய வேண்டும் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. சண்டையிட ஒருபோதும் பயப்படக் கூடாது. போராட பயப்படுபவர்கள் தோல்வியை சந்திக்கிறார்கள். ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி, நெருக்கடி ஒருபோதும் சொல்லிக்கொண்டு வராது. எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள், மன உறுதியுடன் இருப்பவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.
எந்த சூழ்நிலைக்கும் உங்களை தயார்படுத்துங்கள்
சாணக்கியரின் கொள்கையின்படி, ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், ஒருவர் பதட்டம் அடையக்கூடாது. நெருக்கடியைத் தவிர்க்க, நிபுணர்கள் மற்றும் அறிஞர்களால் கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனுடன் ஒருவர் தனது திறமையையும் அறிவையும் பயன்படுத்தி தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.



Click it and Unblock the Notifications

