சாணக்கிய நீதி படி இந்த விஷயங்களை பாலோ பண்றவங்க எவ்வளவு வலிமையான எதிரியையும் ஜெயிச்சிரலாமாம்...!

Chanakya Niti: சாணக்கியர் வாழ்க்கையில் எதிரிகளை வெல்வதற்கான வழிகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். நீங்கள் எதிரிக்கு எதிராக வெற்றி பெற விரும்பினால், சாணக்கியரின் அறிவுரைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம். சாணக்கிய நீதியில் எதிரியை எதிர்த்து வெற்றி பெறுவது பற்றி சாணக்கியர் என்ன கூறியுள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சாணக்கிய நீதியின்படி, எதிரி யாராக இருந்தாலும், மற்றவர்களுக்குத் தீங்கு செய்வது மட்டுமே அவனது நோக்கமாக இருக்கும். எதிரியை பலவீனமாகக் கருதி ஒருபோதும் தவறிழைக்காதீர்கள்.

Chanakya Niti: How to Achieve Success Against Enemy in Tamil

சாணக்கியரின் கோட்பாட்டின்படி, எதிரி கண்ணுக்குத் தெரியாதபோது, அதாவது கண்ணுக்குத் தெரியாமல் தாக்க முயற்சிக்கும் போது, ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாணக்கிய நீதியில் எதிர்களை பற்றி சாணக்கியர் என்ன கூறியுள்ளார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நோய் மற்றும் தோஷம்

சாணக்கியரின் கோட்பாட்டின்படி, எதிரி மனித உருவில் மட்டும் தாக்குவதில்லை, அதாவது நோய் மற்றும் தோஷம் போன்றவற்றை நாம் எதிரிகளாகக் கருதுவதில்லை, ஆனால் அவையும் எதிரிகளாக தீங்கு விளைவிக்கும். அதனால்தான், இவற்றில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

எதிரியை புறக்கணிக்கக் கூடாது

சாணக்கிய நீதியின்படி, எதிரி ரகசியமாகத் தாக்கும் போது, அது கண்ணுக்குத் தெரியாது, பின்னர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகவும் ஆபத்தானது மற்றும் ஒரு சிறிய கவனக்குறைவு கூட உங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை அல்லது இழப்பை ஏற்படுத்தும்.

எதிரிகள் பலவீனமானவர்கள் அல்ல

சாணக்கியரின் அறிவுரையின் படி, ஒரு நபரின் திறமைகள், திறன்கள் மற்றும் வலிமை நெருக்கடி காலங்களில் மட்டுமே சோதிக்கப்படுகின்றன. எதிரியை ஒருபோதும் பலவீனமானவனாகக் கருதக்கூடாது, அத்தகைய தவறை ஒருபோதும் செய்யக்கூடாது. எதிரியை எப்போதும் கண்காணித்து, எந்தச் சூழலுக்கும் தயாராக இருந்தால் மட்டுமே எதிரியை வீழ்த்த முடியும்.

எப்போதும் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும்

நெருக்கடியான நேரத்தில் தைரியத்தை இழக்காதீர்கள் என்று சாணக்கிய நீதி கூறுகிறது. சாணக்கியரின் கூற்றுப்படி, எதிரியை தோற்கடிக்க நீங்கள் கடுமையாக போராட வேண்டும் என்றால், நீங்கள் அதை செய்ய நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மோதல்களுக்கு ஒருபோதும் பயப்படக் கூடாது. சண்டைக்கு பயப்படுபவர்கள் தோல்வியை சந்திக்க நேரிடும் என்கிறார் சாணக்கியர்.

எச்சரிக்கை அவசியம்

ஆச்சார்யா சாணக்கியரின் கூற்றுப்படி நெருக்கடியான சூழ்நிலைகள் எப்போதும் சொல்லிக்கொண்டு வராது. எப்பொழுதும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர்கள் அதாவது விழிப்புடன் இருப்பவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவது உறுதி.

பீதியடையக் கூடாது

சாணக்கியரின் அறிவுரையின் படி, எந்த விதமான நெருக்கடியையும் எதிர்கொள்ளும்போது நாம் பீதி அடையக்கூடாது. நெருக்கடிகளைத் தவிர்க்க, நிபுணர்கள் மற்றும் அறிவுள்ளவர்களால் கொடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனுடன், ஒருவர் தனது திறமையையும் அறிவையும் பயன்படுத்தி மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

Story first published: Friday, December 1, 2023, 6:05 [IST]
Desktop Bottom Promotion