Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சாணக்கிய நீதி படி இந்த 5 தகுதிகள் இருக்கும் ஆண்கள் சிறந்த குடும்பத்தலைவராக இருப்பார்களாம்...!
Chanakya Niti: பிரபல பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆச்சார்யா சாணக்கியர் பற்றி இந்த சமூகத்திற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. சந்திரகுப்த மௌரியரின் திறமையை அங்கீகரித்து அவருக்கு மன்னனாக முடிசூட்டியவர் சாணக்கியர்.
பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்ததால், நிதி கிரந்தம் என்ற புத்தகத்தையும் எழுதினார். இதில், சமூக, வணிக, பொருளாதார மற்றும் இராஜதந்திரக் கொள்கைகளைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

வாழ்க்கையைப் பற்றி போதிக்கும் சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தை ஒருவர் பின்பற்றினால், அவர்களின் வாழ்க்கை சிறப்பானதாக மாறும். வீட்டின் முன்னேற்றம் அதன் தலைவரைப் பொறுத்தது என்று சாணக்கியர் கூறுகிறார்.
அப்படிப்பட்ட குடும்பத்தலைவரிடம் சில சிறப்புகளும், தகுதிகளும் இருப்பது அவசியம் என்று அவர் கூறியிருக்கிறார். குடும்பத் தலைவரிடம் இந்த குணங்கள் இல்லாவிட்டால் அந்த வீட்டில் ஆசிகள் இருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார்.
எதையும் ஆராயும் குணம்
குடும்பத் தலைவர் சரியான ஆதாரம் இல்லாத எதையும் நம்பாதவராக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்ந்த பிறகே, அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, எதையும் நம்புவதற்கு முன், அதை உறுதிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.ஒருவர் இதைச் செய்யாவிட்டால், அவர் தனது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் கெடுதலை உருவாக்குகிறார்.
செலவுகளை ஏற்றுக்கொள்வது
குடும்பத் தலைவரே வீட்டின் செலவுகளைக் கவனிக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். எந்தச் செலவையும் கவனமாகச் செய்ய வேண்டும். தேவையில்லாமல் பணத்தை செலவழிப்பதால் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் ஏற்படுவதில்லை, தேவைப்படும் நேரத்தில் கையில் பணம் இல்லாமலும் போகிறது.
மேலும் இது குடும்பத்திற்கும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. சுருக்கமாக வீட்டின் தலைவர் பணத்தை சேமிப்பவராக இருக்க வேண்டும். வருங்காலத்தில் குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய, பணத்தைச் சேமிப்பது குடும்பத் தலைவரின் பொறுப்பு.
குடும்பத்தினரைப் பற்றி நினைக்க வேண்டும்
எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது, குடும்பத்தலைவர் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர் எடுக்கும் முடிவு குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும்.
யாரும் காயமடையாத வகையில், இதுபோன்ற முடிவை எடுக்க வேண்டும். இதை பின்பற்றாவிட்டால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
உறுதியாக இருக்க வேண்டும்
குடும்பத் தலைவர் தனது முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும். இது குடும்ப உறுப்பினர்களிடையே ஒழுக்கத்துடன் இருக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
குடும்பத் தலைவர் தனது முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும். இதன் காரணமாக, குடும்பத் தலைவரின் மரியாதையும் பேணப்பட்டு, குடும்பத்தில் ஒழுக்கமான சூழலைப் பேணுகிறது.



Click it and Unblock the Notifications
