சாணக்கிய நீதி படி இந்த பழக்கங்களில் ஒன்னு உங்ககிட்ட இருந்தாலும் உங்க வாழ்க்கையில் வெற்றி கிட்டயே வராதாம்...!

Chanakya Niti: சாணக்கியர் ஒரு சிறந்த பொருளாதார அறிஞர், தனது நீதி சாஸ்திரத்தில் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். மனிதர்களின் சில பழக்கவழக்கங்களைப் பற்றி சாணக்கியர் கூறியுள்ளார். இந்தப் பண்புகளால், அவர்கள் செய்யும் வேலை வீணாகிறது.

அத்தகைய இயல்பு காரணமாக, அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அமைதியற்றவர்களாகவும், துன்பத்தில் சிக்கியவர்களாகவும் இருக்கிறார்கள். மனதைக் கட்டுப்படுத்தாவிட்டால் பலவிதமான பிரச்சனைகள் அதிகரித்து வெற்றி வெகு தொலைவிற்கு சென்று விடும் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

Chanakya Niti: Habits Should Be Changed for a Happy and Successful Life in Tamil

ஒவ்வொரு நபரும் தனது வாழ்க்கை வசதிகள் நிறைந்ததாக இருக்க வேண்டும் மற்றும் அவரது கனவுகளை நிறைவேற்ற பணம் சம்பாதிக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். ஆனால் உங்களின் சில குணாதிசயங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்கு தடையாக இருக்கலாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏமாற்றுபவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, ஏமாற்று அல்லது மோசமான செயல்கள் மூலம் பணம் சம்பாதிப்பவர்களின் பணம் நீண்ட காலமாக கையில் இருக்காது. இப்படிப்பட்டவர்களைச் சுற்றி எப்போதும் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். இதனால், அவர்களின் பணம் விரைவில் வீணாகிவிடும்.

பொறாமை
பொறாமை கொண்டவர்கள் சமூகத்தில் சரியான இடத்தைப் பெற முடியாது என்று சாணக்கியர் விளக்குகிறார். மக்களின் வெற்றியைக் கண்டு பொறாமைப்படுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே மற்றவர்களின் வெற்றியைப் பார்த்து பொறாமை கொள்ளாதீர்கள், எதிர்காலத்திற்காக கடினமாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அவமரியாதை
நாம் ஒருபோதும் மற்றவர்களை அவமதிக்கக்கூடாது. உங்கள் ஆசிரியர்கள், பெரியவர்கள் மற்றும் ஏழைகளை ஒருபோதும் அவமதிக்காதீர்கள். இப்படி செய்பவர்கள் மீது லக்ஷ்மி தேவி கோபமடைவதால் அவர்கள் வீட்டில் வறுமை வர ஆரம்பிக்கிறது.

காலையில் தாமதமாக எழுந்திருப்பது
காலை முதல் மாலை வரை தூங்குபவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது. அதேசமயம் சூரியன் உதிக்கும் வரை உறங்குபவர் எப்போதும் வறுமையை எதிர்கொள்வார் என்று சாணக்கியர் கூறுகிறார்.

அதிகமாக சாப்பிடுவது
அதிகமாக சாப்பிடுபவர்கள் எப்போதும் வாழ்க்கையில் தோல்வி அடைகிறார்கள். ஏனெனில் அதிக உணவை உண்பது ஒருவரை வறுமைக்கு அழைத்துச் செல்கிறது. அத்தகைய நபர் ஒருபோதும் ஆரோக்கியமாக இருக்க மாட்டார். அவர்கள் ஆரோக்கியத்திற்காகவே தங்கள் சேமிப்பை செலவழிக்க வேண்டியிருக்கும்.

மோசமாக பேசுபவர்கள்
பேச்சில் நிதானம் இல்லாதவர்களையோ, எப்போதும் கடுமையான வார்த்தைகளைப் பேசுபவர்களையோ லட்சுமி தேவி தன் அருகில் வைத்துக் கொள்ள மாட்டார். ஏனென்றால், லட்சுமி தேவி பிறர் மனதை உடைப்பவர்களிடம் கோபப்படுகிறார். அப்படிப்பட்டவர்கள் வாழ்வில் விரைவில் ஏழைகளாகி விடுவார்கள்.

சுத்தமின்றி வாழ்வது
சாணக்கியரின் கூற்றுப்படி, தூய்மையைக் கடைப்பிடிக்காதவர்கள் மற்றும் அழுக்கு ஆடைகளை அணிபவர்கள் அருகில் லட்சுமி ஒருபோதும் நிற்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு சமூகத்தில் மரியாதை கூட கிடைக்காது.

நேரத்தை வீணாக்குவது
சாணக்கிய நீதியின் படி, நேரத்தின் மதிப்பை அறியாத ஒருவர் வாழ்க்கையில் இலக்குகளை அடைவதில் சவால்களை எதிர்கொள்வார். காலம் யாருக்காகவும் நிற்காது என்கிறார் சாணக்கியர். ஒரு முறை கடந்த காலம் திரும்ப வராது. சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகள் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பவர்களும் வாழ்க்கையில் தங்கள் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

Story first published: Saturday, July 1, 2023, 7:00 [IST]
Desktop Bottom Promotion