Latest Updates
-
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்..
சாணக்கிய நீதி படி பெண்களிடம் இந்த 3 குணங்கள் மட்டும் இருக்கவே கூடாதாம்... இருந்தா அவங்க வாழ்க்கை நரகம்தான்!
Chanakya Niti about Women: ஆச்சார்ய சாணக்கியர் தனது விலைமதிப்பற்ற ஞானத்தையும், அனுபவத்தையும் சாணக்கிய நீதி நூலாக தொகுத்துள்ளார். இந்நூலில் நடைமுறை வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை ஆச்சார்யா கூறியுள்ளார். ஒரு சமூகத்தை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்ற கூற்றில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர் சாணக்கியர். அதனால்தான் பெண் எப்படி சமூகத்தை கட்டமைக்க முடியுமோ, அதேமாதிரி அழிக்கவும் முடியும் என்று அவர் நம்பினார்.

பெண்களின் கல்வி
பெண்களின் கல்வி என்பது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி சமூகத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அதனால்தான் சாணக்கியர் பெண்கள் எப்போதும் பெண்கள் தங்களுக்கான கல்வியைப் பெறுவதில் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
ஆன்மீக நம்பிக்கை
ஆன்மீக செயல்பாடுகளில் ஆணுடன் பெண்ணின் நம்பிக்கையும் அவசியம் என்று சாணக்கியர் நம்பினார். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெண்களுடனேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆன்மீக நம்பிக்கைக் கொண்ட பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்புகளைக் கொடுப்பார், அதன் காரணமாக ஒரு நல்ல சமூகம் உருவாகும். மேலும், அத்தகைய பெண்கள் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார்கள்.
ஈகோ
ஆச்சார்யா சாணக்கியர் ஈகோ பெண்களுக்கு மிகவும் ஆபத்தான குணம் என்று விவரிக்கிறார். ஆச்சார்யாவின் கூற்றுப்படி, எப்போது ஒரு பெண்ணிற்குள் ஈகோ வருகிறதோ, அப்போதே சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவி இருவரும் அவரிடம் கோபப்பட்டு அவரை விட்டு விலகிவிடுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவரது மனம் சிதைந்து, குடும்பத்தின் மகிழ்ச்சியும் செழிப்பும் படிப்படியாக அழியத் தொடங்குவதாக சாணக்கியர் கூறுகிறார்.
பேராசை
சாணக்கியரின் கூற்றுப்படி, பேராசை உணர்வு கொண்ட பெண்கள், தங்கள் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு ஆபத்தாக மறுக்கிறார்கள். இந்த குணம் உள்ள பெண்களை கொண்ட குடும்பத்தினரின் வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாகவே இருக்கும். மன அழுத்தம் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை பாதிக்கிறது மற்றும் இது முழு குடும்பத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கிறது.
சார்புணர்வு
ஒரு பெண் இன்னொருவரைச் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் அவருடைய நம்பிக்கையில் குறை ஏற்படலாம். எனவே உங்கள் வீட்டின் செல்வதை பாதுகாப்பதைப் போலவே ஒரு பெண்ணும் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் விஷயத்தில் யாரையும் நம்பக் கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications













