Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சாணக்கிய நீதி படி பெண்களிடம் இந்த 3 குணங்கள் மட்டும் இருக்கவே கூடாதாம்... இருந்தா அவங்க வாழ்க்கை நரகம்தான்!
Chanakya Niti about Women: ஆச்சார்ய சாணக்கியர் தனது விலைமதிப்பற்ற ஞானத்தையும், அனுபவத்தையும் சாணக்கிய நீதி நூலாக தொகுத்துள்ளார். இந்நூலில் நடைமுறை வாழ்க்கை மற்றும் இல்லற வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை ஆச்சார்யா கூறியுள்ளார். ஒரு சமூகத்தை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்ற கூற்றில் ஆழமான நம்பிக்கைக் கொண்டவர் சாணக்கியர். அதனால்தான் பெண் எப்படி சமூகத்தை கட்டமைக்க முடியுமோ, அதேமாதிரி அழிக்கவும் முடியும் என்று அவர் நம்பினார்.

பெண்களின் கல்வி
பெண்களின் கல்வி என்பது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், குடும்பத்தின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி சமூகத்தின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. அதனால்தான் சாணக்கியர் பெண்கள் எப்போதும் பெண்கள் தங்களுக்கான கல்வியைப் பெறுவதில் உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
ஆன்மீக நம்பிக்கை
ஆன்மீக செயல்பாடுகளில் ஆணுடன் பெண்ணின் நம்பிக்கையும் அவசியம் என்று சாணக்கியர் நம்பினார். நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பெண்களுடனேயே அதிக நேரம் செலவிடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஆன்மீக நம்பிக்கைக் கொண்ட பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்புகளைக் கொடுப்பார், அதன் காரணமாக ஒரு நல்ல சமூகம் உருவாகும். மேலும், அத்தகைய பெண்கள் ஒருபோதும் உங்களை ஏமாற்ற மாட்டார்கள்.
ஈகோ
ஆச்சார்யா சாணக்கியர் ஈகோ பெண்களுக்கு மிகவும் ஆபத்தான குணம் என்று விவரிக்கிறார். ஆச்சார்யாவின் கூற்றுப்படி, எப்போது ஒரு பெண்ணிற்குள் ஈகோ வருகிறதோ, அப்போதே சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவி இருவரும் அவரிடம் கோபப்பட்டு அவரை விட்டு விலகிவிடுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில், அவரது மனம் சிதைந்து, குடும்பத்தின் மகிழ்ச்சியும் செழிப்பும் படிப்படியாக அழியத் தொடங்குவதாக சாணக்கியர் கூறுகிறார்.
பேராசை
சாணக்கியரின் கூற்றுப்படி, பேராசை உணர்வு கொண்ட பெண்கள், தங்கள் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு ஆபத்தாக மறுக்கிறார்கள். இந்த குணம் உள்ள பெண்களை கொண்ட குடும்பத்தினரின் வாழ்க்கை மன அழுத்தம் நிறைந்ததாகவே இருக்கும். மன அழுத்தம் ஒரு நபரின் புத்திசாலித்தனத்தை பாதிக்கிறது மற்றும் இது முழு குடும்பத்தின் முன்னேற்றத்தையும் தடுக்கிறது.
சார்புணர்வு
ஒரு பெண் இன்னொருவரைச் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் அவருடைய நம்பிக்கையில் குறை ஏற்படலாம். எனவே உங்கள் வீட்டின் செல்வதை பாதுகாப்பதைப் போலவே ஒரு பெண்ணும் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் விஷயத்தில் யாரையும் நம்பக் கூடாது என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.



Click it and Unblock the Notifications













