Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும்
சாணக்கிய நீதி படி இந்த 4 வீடுகளில் வசிப்பவர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் ஏழையாகத்தான் இருப்பார்களாம்
Chanakaya Niti: சாணக்கியரைப் பற்றியோ, அவருடைய கொள்கைகளைப் பற்றியோ யாரும் இந்தியாவில் அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர் தனது சாணக்கிய நீதியில் மனிதர்களின் நன்மை தீமைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார். ஒருவர் தனது நற்பண்புகளால் வாழ்க்கையில் வெற்றியை அடையும் அதே நேரத்தில், வெற்றிகரமான வேலை கூட மோசமான செயல்களால் தோல்வியடைகிறது என்று சாணக்கியர் கூறியுள்ளார்.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் மற்றும் ராஜதந்திரியான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' என்ற நூலில் செல்வம் மற்றும் செழிப்பு குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்துள்ளார். சிலர் வேண்டுமென்றோ அல்லது அறியாமலேயோ செய்யப்படும் தவறுகள், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியைக் கோபப்படுத்தி, அவரை வீட்டை விட்டு வெளியேறச் செய்து, வறுமையை அதிகரிக்க வழிவகுக்கும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.
இந்த தவறுகளை செய்பவர்கள் கடினமாக உழைத்த போதிலும், அத்தகைய நபர்கள் தங்கள் வாழ்க்கையில் செல்வம் மற்றும் சொத்துக்களின் பற்றாக்குறையை அனுபவிப்பார்கள். இதனால் லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறி துரதிர்ஷ்டம் அவர்களின் வீட்டில் நுழையத் தொடங்கும். இந்த பதிவில் லட்சுமி தேவி எந்தெந்த வீடுகளில் வசிக்க மாட்டார் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆடம்பரமாக செலவு செய்வது
தங்களிடம் உள்ள செல்வத்தை வெளிக்காட்டுவதற்காகத் தேவையற்ற முறையில் பணம் செலவிடப்படும் வீடுகளில் செல்வம் நிலைத்திருக்காது என்று சாணக்கியர் கூறுகிறார். வருமானம் எவ்வளவு இருந்தாலும், அங்கு வசிப்பவர்கள் கடன் சுமையால் அவதிப்படுவார்கள் என்று சாணக்கியர் எச்சரிக்கிறார். இக்கட்டான சூழலில் கையில் சேமிப்பு இல்லாதது, அவர்கள் நிதி நெருக்கடிகளைச் சமாளிப்பதைத் தடுக்கிறது. எனவே, எப்போதும் பணத்தை விவேகத்துடன் செலவிட வேண்டும். ஆடம்பரமாக செலவழிப்பவர்கள் வீட்டில் ஒருபோதும் லட்சுமி தேவி வசிக்க விரும்ப மாட்டார் என்று சாணக்கிய நீதி கூறுகிறது.
அசுத்தமான சமையலறை பாத்திரங்கள்
அசுத்தமான வீடுகளை, குறிப்பாக இரவில் சமையலறையில் பாத்திரங்கள் கழுவப்படாமல் இருக்கும் வீடுகளை லட்சுமி தேவி தவிர்த்துவிடுகிறார். இரவில் சமையலறையைச் சுத்தம் செய்யாமல் விடுவது, லட்சுமியின் மற்றொரு வடிவமான அன்னபூர்ணா தேவியின் கோபத்திற்கு ஆளாக்குகிறது. இத்தகைய வீடுகளில் தொடர்ச்சியான வறுமை, மரியாதை குறைவு மற்றும் நிதி இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன என்று சாணக்கியர் கூறுகிறார்.
மாலை நேரத்தில் வீட்டை கூட்டுவது
சூரியன் மறைந்த பிறகு, துடைப்பம் அல்லது மாப் போடப்படும் வீடுகளுக்குள் லட்சுமி தேவி ஒருபோதும் நுழைய மாட்டார் என்று சாணக்கியர் கூறுகிறார். மாலை நேரம்தான் லட்சுமி தேவி வருகை தரும் நேரம் என்று நம்பப்படுகிறது, எனவே இந்த நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. அதனால் சுத்தம் செய்யும் வேலையை பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும். மாலை நேரச் சுத்தம் தவிர்க்க முடியாத பட்சத்தில், சேகரிக்கப்பட்ட அழுக்கை உடனடியாக அப்புறப்படுத்தாமல், அடுத்த நாள் காலை வரை வைத்திருக்க வேண்டும்.
எப்போதும் சண்டை நடக்கும் வீடு
சாணக்கியரின் கூற்றுப்படி, எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவும் வீட்டில் லட்சுமி தேவி ஒருபோதும் வாசம் செய்வதில்லை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் வீட்டுக்கு லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டுமென்றால், உங்கள் வீட்டின் சூழலை நீங்கள் மேம்படுத்த வேண்டும். மேலும், குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக வாழும் வீட்டில் மட்டுமே லட்சுமி தேவி வாசம் செய்வார் என்று சாணக்கியர் கூறுகிறார்.



Click it and Unblock the Notifications
