Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல தலைவரிடம் இந்த 4 குணங்கள் அவசியம் இருக்கணுமாம்... உங்ககிட்ட எத்தனை இருக்கு?
Chanakya Niti: ஆச்சார்ய சாணக்கியர் பண்டைய இந்தியாவின் சிறந்த சமய அறிஞர் மட்டுமல்லாமல், ஒரு சிறந்த அரசியல்வாதி, ராஜதந்திரி மற்றும் பொருளாதார நிபுணராகவும் விளங்கினார். அவருடைய திறமையான ராஜதந்திரத்தால்தான் சந்திரகுப்த மௌரியர் மகதப் பேரரசின் சக்கரவர்த்தியானார். ஆச்சார்யர் தனது சாணக்கிய நீதியில் வாழ்க்கையின் அனைத்து துறைகளைப் பற்றிய தனது கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய கருத்துக்கள் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியவை. தற்போதைய காலத்திலும், அவருடைய கொள்கைகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் ஆச்சார்ய சாணக்கியரின் கொள்கைகள் இன்றும் உலகம் முழுவதும் புகழ்பெற்றவையாக உள்ளன. ஒரு நல்ல தலைவர் உருவானால் அவர் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். ஆனால் நல்ல தலைவராக வேண்டுமென்று ஆசைப்படும் எல்லோராலும் நல்ல தலைவராக இருக்க முடியாது.

ஒரு நல்ல தலைவராக இருப்பதற்கு சில தகுதிகளும், குணங்களும் இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவரின் குணங்களைப் பற்றி சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பொறுமை
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, பொறுமை அல்லது நிதானம் ஒரு நல்ல தலைமைப் பண்பின் முக்கியமான அடையாளமாகும். கடினமான காலத்திலும் பொறுமையாக இருக்க தெரிந்தவர்கள், சிறிய மற்றும் பெரிய வேலைகள் அனைத்தையும் மிக எளிதாகக் கையாளக் கூடியவர்களாக இருப்பார்கள். ஒருவரின் இந்தக் குணம் அவரை அவர்களின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறச் செய்கிறது. ஒருவர் தலைவராக விரும்ன்பினால் அவர்கள் நிச்சயம் பொறுமையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
திட்டமிடல்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தவொரு வேலையும் சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அதை திட்டமிட்டுச் செய்தால், அந்த வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உங்கள் வேலையைப் பற்றியும் இலட்சியத்தை அடைவதற்கான வழிகளைப் பற்றியும் அதற்கான உங்களின் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது ஒரு நல்ல தலைமைப் பண்பின் அடையாளமாகும். ஏனெனில், அவ்வாறு ரகசியமாக வைத்திருப்பது எதிர்காலத்தில் உங்களுக்கு எந்தத் தீங்கையும் விளைவிக்காது. அது அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்கும்.
கவனமாக இருப்பது
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவர் என்பவர், ஒரு வேலை முழுமையாக முடியும் வரை அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவர் என்பவர், வேலை முடிவதற்கு முன்பே கொண்டாடாமல், அது முடியும் வரை அந்த வேலையில் முழு விழிப்புடன் இருக்க வேண்டும். அதேசமயம் அவர்கள் தோல்வியடைந்து விட்டால் விரக்தியடையாமல் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட நகர்வை நம்பிக்கையுடன் தொடர வேண்டும்.
சக ஊழியர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்
ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நல்ல தலைவரின் அடையாளம் என்னவென்றால், அவர் எந்தவொரு முயற்சிகளைப் பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தனது சக ஊழியர்களுடன் கலந்தாலோசிப்பார். இவ்வாறு செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மேலும் அவர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். மற்றவர்களின் ஆலோசனைகள் கேட்பவர்களே ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும் என்று சாணக்கியர் உறுதியாக நம்பினார். ஏனெனில் சாணக்கியரின் ஆலோசனைகளை ஏற்றே சந்திர குப்த மௌரியர் சிறந்த அரசராக உருவானார்.



Click it and Unblock the Notifications
