Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
சாணக்கிய நீதி படி உங்களை பற்றிய இந்த 5 விஷயங்களை நீங்க யாருகிட்டயாவது சொன்னா உங்க வாழ்க்கை காலியாம்...!
Chanakya Niti: கௌடில்யர் என்று அழைக்கப்படும் சாணக்கியர், சிறந்த ஆசிரியர், தத்துவவாதி மற்றும் இராஜதந்திரியாக விளங்கினார். மனித வாழ்வு தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் கூறியுள்ளார். எனவே வாழ்க்கையை வெற்றிகரமாக வழிநடத்த விரும்புபவர்கள் சாணக்கிய நீதியை பின்பற்றலாம்.
சாணக்கியர் தனது சாணக்கிய நீதி புத்தகத்தின் 7 வது அத்தியாயத்தின் முதல் வசனத்திலேயே பெண்கள் மற்றும் பணம் பற்றி பேசியுள்ளார். சாணக்கியரின் கூற்றுப்படி, சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது அல்லது யாரிடமும் சொல்லாமல் இருப்பது புத்திசாலித்தனமானது.

சாணக்கியரின் கூற்றுப்படி, மனைவி மற்றும் பணம் தொடர்பான சில விஷயங்களை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது, அதே சமயம் சோகமாக இருக்கும்போது சொல்லக் கூடாத சில விஷயங்களையும் சாணக்கியர் கூறியுள்ளார். இது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உங்களை ஆபத்தில் கூட சிக்க வைக்கும்.
எந்தெந்த தருணங்களில் மனதை கட்டுப்படுத்த வேண்டும்?
செல்வம் கரையும் போதும், மனதுக்குள் வருத்தம் ஏற்படும் போதும், மனைவியின் நடத்தை பற்றிய சந்தேகம், மோசமான ஒருவரிடமிருந்து சில தீய விஷயங்களைக் கேட்கும் போதோ அல்லது அவர்களால் அவமானப்படுத்தப்படும் போதோ, மனதில் தோன்றுவதை யாரிடமும் சொல்லக் கூடாது சாணக்கியர் கூறியுள்ளார்.
பணக்கஷ்டத்தை நெருங்கியவர்களிடம் கூற வேண்டாம்
வியாபாரம், வேலை, பரிவர்த்தனை போன்றவற்றில் பண நஷ்டம் ஏற்பட்டாலோ, உங்கள் பணத்தை யாராவது திருடினாலோ, அப்படிப்பட்ட விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது. அவர் எவ்வளவு நெருக்கமான நபராக இருந்தாலும் சரி.
உண்மையில், ஒரு நபர் பொருளாதாரரீதியாக பலவீனமாக இருக்கும்போது, அவரது நெருங்கிய நண்பர்கள் கூட அவரை ஆதரிக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாரிடமாவது பணக்கஷ்டம் பற்றி சொன்னால், எதிரில் இருப்பவர்கள், நீங்கள் அவரிடம் உதவி கேட்க வந்ததாக நினைத்து உங்களை அவமதிப்பார்கள்.
உங்கள் மனக்கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளாதீர்கள்
நீங்கள் மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்போது அல்லது எந்த வேலையும் செய்ய விரும்பாத நிலையில், அத்தகைய சூழ்நிலையைப் பற்றி நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. இல்லையேல் நஷ்டம் உங்களுக்குத்தான்.
மக்கள் உங்களைப் பற்றி அறிந்து உங்கள் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார்கள். எனவே சோகமான மனநிலையில் இருக்கும் போது உங்கள் மனதின் நிலைகளை யாரிடமும் வெளிப்படுத்தக் கூடாது.
மனைவி மீது சந்தேகம் இருந்தால் பகிர வேண்டாம்
மனைவியைப் பற்றி சாணக்கியர் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார், ஒருவருக்கு தனது மனைவியின் குணாதிசயங்கள் அல்லது அவரது பழக்கவழக்கங்கள் பற்றி சந்தேகம் இருந்தால், இந்த விஷயத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
கணவன் அல்லது மனைவியின் குணாதிசயம் தொடர்பான விஷயங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டால், சூழ்நிலைகளைக் கையாள்வது கடினமாகிவிடும். சமூகத்தின் மத்தியில் அமர்ந்திருக்கும் போது, ஒருவன் அவமானப்படுத்தப்படுகிறான், பல சமயங்களில் அவர் ஒரு பாவப்பட்டவராக பார்க்கப்படுகிறார்.
உங்களின் ஈகோ
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் ஈகோ உங்களுடைய தன்னம்பிக்கையின்மையின் அடையாளமாகும். உங்களுடைய ஈகோவை பாதுகாக்க போராடுவது என்பது நீங்கள் உங்கள் நம்பிக்கைக் குறைவை ஈடுசெய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது தெளிவான அறிகுறியாகும். முடிந்தவரை உங்கள் ஈகோவை உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
