Latest Updates
-
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். ..
இந்த 6 பொருட்கள மட்டும் நீங்க கைத்தவறி கீழ போட்டா.... வீட்டுல ஏதோ கெட்டது நடக்க போகுதாம்...ஜாக்கிரதை!
Bad luck In Tamil: நம் கைகளிலிருந்து பொருட்கள் தவறி தரையில் விழுவது பொதுவானது. ஆனால் உங்களுக்கு கார்பல் டன்னல் சிண்ட்ரோம் அல்லது வேறு ஏதேனும் தொடர்புடைய மருத்துவ நிலை இருந்தால் தவிர, பொருட்களை கைத்தவறி கீழே போடுவது ஓர் பழக்கமாக இருக்கக்கூடாது.
சில இடங்களில், சில நேரங்களில் அல்லது சில பொருட்களை கைத்தவறி கீழே போடுவது என்பது சாதாரணமானதல்ல. ஆம், இந்த கைத்தவறல் ஒரு பழக்கமாக மாறினால், அது அசுகுணமாகிவிடும். இது போன்ற இயற்கை அறிகுறிகள் மூலம் வரவிருக்கும் சில துரதிர்ஷ்டங்களை முன்பே அறிந்துகொள்ள இயற்கை இந்த வழிகளில் நமக்கு உணர்த்துகிறது.

நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முறை கைத்தவறி பொருட்களை விட்டால், அது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் நீங்கள் இதைப் பழக்கப்படுத்தினால், அது சிக்கல்களைக் குறிக்கலாம். இந்த நடத்தைக்கு சில கிரக தொந்தரவுகள் காரணமாகவும் இருக்கலாம். இது வாஸ்து தோஷத்தையும் குறிக்கலாம். எந்தெந்த பொருட்களை கைத்தவறி கீழே விடுவது, துரதிர்ஷ்டத்தைத் தருகிறது என்று இங்கே காணலாம்.
பூஜை தட்டு மற்றும் தீபம்
பொதுவாக ஆர்த்தி தட்டு உங்கள் கைகளில் இருந்து கீழே விழுந்தால், அது அபசகுணம் என்று கூறப்படுகிறது. ஆரத்தி தட்டு உங்கள் கைகளில் இருந்து நழுவினால், கடவுள் உங்கள் வழிபாட்டை ஏற்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. இது உங்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும் அல்லது வரவிருக்கும் ஓர் பெரிய ஆபத்தை ஒரு பேரழிவை முன்கூட்டியே அறிவிக்கிறது.
அதேபோல எரிந்து கொண்டிருக்கும் விளக்கு திடீரென அணைந்தால், அது ஒரு மோசமான சமிக்ஞையாகும். ஏதோ தவறு நடக்கப்போவதை நமக்கு உணர்த்துகிறது. அதற்கு, ஓர் பரிகார நடவடிக்கை உள்ளது. அதை உடனடியாக செய்ய வேண்டும். பூஜையை ஆரம்பத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே அந்த பரிகாரம். இதனால், குடும்பத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் மற்றும் கருப்பு மிளகு பாத்திரங்கள் தற்செயலாக தரையில் விழுந்துவிடக்கூடாது. கடுகு எண்ணெய் சனி கடவுளுடன் தொடர்புடையது. ஆதலால், தரையில் சிந்தப்பட்ட கடுகு எண்ணெய், சனி பகவானை வருத்தப்படுத்தும். கையில் எண்ணெய் பாட்டிலை எடுத்துச் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
தானியங்கள்
தானியங்கள் என்றால், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். அதனால், தானியங்கள் உங்கள் கையிலிருந்து தவறி விழுந்தால், லட்சுமி தேவி வருத்தப்பட்டாள். கவனக்குறைவாக உங்கள் கைகளில் இருந்து தானியங்கள் விழுந்தாலோ அல்லது தற்செயலாக உங்கள் காலில் பட்டாலோ, அதை உங்கள் நெற்றியில் வைத்து, உங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
பால் கசிவு
வீட்டில் டீ, காபி போடுவதற்கு நாம் தினமும் பால் காய்ச்சுகிறோம். அப்படி பால் காய்ச்சும்போது, பொங்கி ஊற்றுவது மற்றும் வழிவது பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். நாம் அனைவரும் அறிந்தது போல் இது மிகவும் புனிதமான நிகழ்வு. எந்த சூழ்நிலையிலும் கூட, கவனக்குறைவு மற்றும் கவனிப்பு இல்லாததால் பால் கொதித்து வெளியேறுகிறது.
இல்லற விழாவின் போது ஒரு கிளாஸ் பால் கசிந்தால், அது நிச்சயமாக ஒரு சிக்கலைக் குறிக்காது. சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீர்கள்: நீங்கள் ஏதாவது சாப்பிடும் போது உணவை தரையில் கொட்டாதீர்கள். இது லட்சுமி தேவிக்கு நீங்கள் செய்யும் அவமானம். இது பொறுப்பற்ற செயலின் விளைவாக நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உப்பு போடுதல்
வீட்டில் நாம் தினமும் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு. அந்த உப்பு தவறி கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று யோசித்திருக்கிறீர்களா? தற்செயலாக கூட தரையில் உப்பைக் கொட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது வாழ்க்கையில் வரவிருக்கும் தொடர்ச்சியான சிக்கல்களை முன்னறிவிக்கிறது. குறிப்பாக மாலை நேரத்தில் உப்பு யாருக்கும் கொடுக்கக் கூடாது. இது வறுமை மற்றும் நிதி சிக்கல்களில் சுழல்கிறது.
பாத்திரங்களை கீழே போடுவது
நாம் சமைக்கும் போது, பொதுவாக சமையலுக்கு தேவையான பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்போம். சில சமயங்களில், அல்லது எப்போதாவது தற்செயலாக பாத்திரங்களை கீழே போடுகிறோம். இது பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் நடக்கும் ஓர் நிகழ்வு.
ஆனால், இது அடிக்கடி நடந்தால், அது நிச்சயமாக சிக்கலைக் குறிக்கிறது. வாஸ்து தோஷத்தையும் குறிக்கிறது. லட்சுமி தேவியின் கோபத்திற்கும் நீங்கள் ஆளாகி, உங்கள் வாழ்க்கையில் பிரச்சனைகள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் ஏற்படலாம்.



Click it and Unblock the Notifications













