Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
பாபா வங்கா-நாஸ்ட்ராடாமஸ் இருவருமே 2025-ல் நடக்கப்போவதாக கணித்துள்ள ஆபத்தான கணிப்புகள்..என்னலாம் நடக்கப்போகுதோ?
தற்போது எதிர்காலத்தை கணிப்பதாக ஏமாற்றுபவர்கள்தான் பலர் உள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கும் சிலர் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் பாபா வாங்கா மற்றும் நோஸ்ட்ராடாமஸ். இவர்கள் வருங்காலத்தைப் பற்றி கூறிய கணிப்புகளில் பல நிஜமாகியுள்ளன.
2024 ஆம் ஆண்டு போர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் நிறைந்ததாக உள்ளது. 2025 ஆம் ஆண்டாவது அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்குமா என்றால் அப்படி இருக்காது என்று சில கணிப்புகள் கூறியுள்ளது.
பார்வையற்ற பல்கேரிய பாபா வங்கா மிகவும் பிரபலமானவர். 1996 இல் அவர் இறந்த போதிலும், அவர் 9/11, இளவரசி டயானாவின் மரணம் மற்றும் அமெரிக்க அதிபராக பராக் ஒபாமாவின் வெற்றி உட்பட வரலாற்றின் பல முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தார்.

அதேபோல 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடர் நாஸ்ட்ராடாமஸ், அடால்ஃப் ஹிட்லர், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள் மற்றும் லண்டனின் பெரும் தீ ஆகியவற்றை முன்கூட்டியே கணித்த பெருமைக்குரியவர்.
இந்த இருவருமே 2025-ஆம் ஆண்டிற்கான சில ஆபத்தான மற்றும் நடுங்க வைக்கும் முன்னறிவிப்புகளை செய்துள்ளனர். நாஸ்ட்ராடாமஸ் நீருக்கடியில் பேரரசு மற்றும் உயரும் நிழல் வழிபாட்டு முறை பற்றிய தீர்க்க தரிசனங்களைக் கொண்டிருந்தார், அதே நேரத்தில் பாபா வாங்கா டெலிபதி வரும் மாதங்களில் உண்மையானதாக மாறும் என்று கருதுகிறார். இந்த இரண்டு ஞானிகளுமே 2025- ஆம் ஆண்டுக்கான சில கணிப்புகளை செய்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் மற்றொரு கொடிய போர் வெடிக்கும் என்று இரு மர்மவாதிகளும் கணித்துள்ளனர். 'ஐரோப்பா தேசங்களில் இருந்து வருபவர்கள்' எப்படி 'கொடூரமான போர்களில்' ஈடுபடுவார்கள் என்று நாஸ்ட்ராடாமஸ் கூறினார், அவை "பண்டைய பிளேக் எதிரிகளை விட மோசமாக இருக்கும்." என்றும் அவர் கூறியுள்ளார்.
பாபா வங்காவும் 2025 ஆம் ஆண்டிற்கான இதேபோன்ற கணிப்பைக் கூறியுள்ளார், ஐரோப்பாவில் வரப்போகும் மோதல்கள் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். நேர்மறையான கணிப்புகள் என்று வரும்போது, ரஷ்யா-உக்ரைன் மோதலின் முடிவை நாஸ்ட்ராடாமஸ் அடையாளம் காட்டியுள்ளார், பிரான்ஸ் அல்லது துருக்கியின் ஈடுபாடு இந்த போரை நிறுத்தக்கூடும் என்று கூறியுள்ளார்.
அதேபோல சில வேற்று கிரக சந்திப்புகளுக்கு தயாராகுமாறு இருவருமே எச்சரித்துள்ளனர். ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வில் வேற்றுகிரகவாசிகள் தோன்றுவார்கள் என்று பாபா வாங்கா பரிந்துரைத்தார். சில வகையான 'செவ்வாய்ப் போர்' தொடங்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இதற்கிடையில், நாஸ்ட்ராடாமஸ், 'ஹார்பிங்கர் ஆஃப் ஃபேட்' என்று அழைக்கப்படும் ஒரு பிரமாண்டமான சிறுகோள் பற்றி குறிப்பிட்டுள்ளார். செவ்வாய்ப் போர் அதை வளிமண்டலத்தில் வெடிக்கச் செய்யும்.
அது நம்மை அழிக்கும் வால் நட்சத்திரம் இல்லை என்றாலும், அது நமது புதிய 'அக்வாடிக் பேரரசு' அதிபதிகளாக இருக்கலாம். முக்கிய நகரங்கள் வெள்ளத்தால் நாசமாகும் என்று நாஸ்ட்ராடாமஸ் கூறியுள்ளார். இவையெல்லாம் அழிவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள். பூமியை உலுக்கிய இந்த நிகழ்வுகளிலிருந்து தப்பித்து விட்டால், லூயிஸ் ஹாமில்டன் தனது எட்டாவது F1 பட்டத்தைப் பெறுவதை பார்க்கலாம் என்று கூறியுள்ளார். மற்றொரு நல்ல செய்தி என்னவெனில், விஞ்ஞானிகள் மனித உறுப்புகளை ஆய்வகங்களில் வளர்க்க முடியும், இது மனிதர்ளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும்.



Click it and Unblock the Notifications
