Ayodhya Ram Mandir: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா குறித்த சில முக்கியமான விவரங்கள்!

Ayodhya Ram Mandir: உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை ஒட்டி பகவான் ஸ்ரீ ராமர் மக்களுக்கு அருள் புரிகிறார். மேலும் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு ராமருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த நாள் ராமர் குழந்தை வடிவில் காட்சி அளிக்கப்பட உள்ளார்.

ராமர் கோயிலில் சிறப்பு ஆரத்தி பூஜைகள் மூன்று விதமான நேரங்களில் நடைபெறுகிறது. இந்த ஆரத்தி பூஜைகளை நீங்கள் காண சிறப்பு பாஸ்கள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆரத்தி நேரங்களிலும் முப்பது பேர்கள் கலந்து கொள்ள முடியும். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ஆரத்தி நேரங்கள் எப்பொழுது நடைபெறுகிறது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

Ayodhya Ram Mandir: Details of Ram Lallas Darshan, Aarti Timings And More In Tamil

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அயோத்தியில் ராம் லல்லாவின் அதாவது குழந்தை வடிவில் ராமர் புனிதப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளார். ஜனவரி 16 ஆம் தேதி அன்று இதற்கான வேத சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கும்பாபிஷேகத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இது தொடங்கப்பட உள்ளது.

ஆரத்தி பூஜைகள்

ஸ்ரீ ராமருக்கு கும்பாபிஷேகம் முடிந்த கையோடு பக்தர்கள் முன்னிலையில் ஆரத்தி காண்பிக்கப்பட உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் மூன்று இடங்களில் இந்த ஆரத்திகள் நடைபெற உள்ளது. இதற்காக இலவச பாஸ்களும் வழங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு ஆரத்தியிலும் 30 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே நீங்கள் அந்த ஆரத்தி தரிசனத்தை காண விரும்பினால் இலவச பாஸ்களை பெறுவது அவசியம். ஏழாம் நாள் அயோத்தி விழா அட்டவணையின் மிகப்பெரிய நாளான ஜனவரி 22 அன்று, ராமர் கோவிலில் மதியம் 12:15 முதல் 12:45 வரை, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் ராமர் காட்சி அளிக்க உள்ளார்.

ஆரத்தி நேரங்கள்

ஸ்ரீ ராமருக்கான ஆரத்தி மூன்று நேரங்களில் நடைபெற உள்ளது.

- காலை : 6.30 மணிக்கு ஸ்ரீ ராமருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
- மதியம் : 12 மணிக்கு ஸ்ரீ ராமருக்கு மதிய வேளையில் ஆரத்தி காண்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
- இரவு : 7.30 மணிக்கு காண்பிக்கப்படும் ஆரத்தியில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். இந்த ஆரத்தி தரிசனத்தை காண அறக்கட்டளையின் வழியாக அனுமதிச் சீட்டு பெறுவது அவசியம். ஒவ்வொரு வரும் தங்கள் அனுமதிச் சீட்டை பெற உங்கள் அடையாள சான்றை கொடுக்க வேண்டியது அவசியம். இதைத் தவிர்த்து நீங்கள் ஆன்லைன் வழியாகவும் உங்கள் ஆரத்தி பாஸை பதிவு செய்து பெறலாம்.

ஆன்லைன் வழியாக ஆரத்தி பாஸை பதிவு செய்யும் முறை:

* ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அதாவது srjbtkshetra.org என்ற இணைய தளத்திற்கு சென்று உங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள்.
* உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டு பிறகு அதற்கு வரும் OTP எண்ணை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
* இப்பொழுது அங்கு நிறைய பிரிவுகள் இருக்கும். அதில் ஆரத்தி பிரிவை மட்டும் க்ளிக் செய்து உள் நுழையுங்கள்.
* இப்பொழுது அதில் நீங்கள் கலந்து கொள்ள விரும்பும் தேதி, ஆரத்தி வகை என்ன என்பதை தேர்ந்தெடுங்கள்.
* இப்பொழுது அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களான உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவு செய்யுங்கள்.
* ஆன்லைனில் பதிவு செய்த பிறகு நீங்கள் நேராக கோயில் செல்லும் போது உங்கள் பாஸ்களை கோவில் கவுண்டரில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

கோவிலில் உள்நுழைவதற்கு முன்பு நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்:

* எலக்ட்ரானிக் பொருட்கள், பிரசாதம் போன்றவற்றை கோயில் வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
* ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் காலை 11.00 மணிக்கு முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.
* ராமர் கோயிலுக்கு செல்வதற்கு எந்த ஆடை கட்டுப்பாடும் இல்லை.

பிரதிஷ்டை நேரங்கள்:

ஜனவரி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான முன் ஏற்பாடுகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. ஜனவரி 22 ஆம் தேதி 2024 அன்று ராமர் சிலை குழந்தை வடிவில் நிறுவப்பட உள்ளது. காசியில் வேத பண்டிதர்கள் கும்பாபிஷேகத்தை நடத்துவார்கள். மதியம் 12:15 முதல் 12:45 வரை ராமர் கோயிலில் அமர்ந்திருப்பார். கும்பாபிஷேகத்திற்கான வேத நிகழ்ச்சிகள் காசியில் நடைபெறும்.

கோயிலினுள் பக்தர்களுக்கு பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன:

கோயிலினுள் பக்தர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகள் உள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கான சாய்வு தளங்கள், லிப்ட்கள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. இதனால் பக்தர்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் 25,000 பார்வையாளர்களைக் கையாளக்கூடிய பயணிகள் வசதி மையமும் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பகவான் ஸ்ரீ ராமரை தரிசிக்க சிறப்பு வழிகள்:

கோயிலின் நுழைவாயிலில் 32 படிக்கட்டுகள் கொண்ட சிங் கேட்டுகள் உள்ளன. அப்படியே சென்றால் 30 அடி தூரத்தில் பால்ய ராமரின் கருவறை உள்ளது. அங்கே சென்று நீங்கள் பகவான் ஸ்ரீ ராமரை உங்கள் கண் கொண்டு தரிசித்து வரலாம்.

இந்த ராமர் கோயிலில் இன்னும் பல சுவாமிகள் இடம் பெற்றுள்ளன. ராமரை தரிசிக்கும் போது நீங்கள் அவர்களையும் தரிசித்து வரலாம். சூரிய பகவான், பகவதி தேவி, விநாயகர், பகவான் சங்கர், மாதா அன்னபூர்ணா, பவன் புத்ர ஹனுமான், மாதா ஷபரி, மகரிஷி விஸ்வாமித்ரா, மகரிஷி ஆகஸ்ட், மகரிஷி வால்மீகி மற்றும் நிஷாத் ராஜ் போன்ற தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களும் இங்கு உள்ளன. இவர்களின் தரிசனங்களையும் ஆசிகளையும் நீங்கள் பெற முடியும். ஸ்ரீ ராமரின் தரிசனத்தை பெற இன்றே உங்கள் இலவச பாஸ்களை புக் செய்யுங்கள்.

Story first published: Thursday, January 11, 2024, 14:40 [IST]
Desktop Bottom Promotion