Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை
அயோத்தி ராமர் கோவில்: உலகின் முதல் சைவ 7 ஸ்டார் ஹோட்டல் இங்குதான் வரப்போகுதாம்... வேறென்ன வருது தெரியுமா?
ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு இந்தியாவே தயாராகி வரும் நிலையில், ராமபூமிக்கு திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் குறித்து ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பிரசாதத்திற்காக தயாரிக்கப்படும் 7000 கிலோ அல்வா முதல் அயோத்தியில் இருந்து இறைச்சிக் கடைகளை அகற்றுவது வரை, ராமர் கோவில் கட்டுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்திய அறிக்கைகளின்படி, அயோத்தியில் விரைவில் இந்தியாவின் முதல் 7-நட்சத்திர சைவ ஹோட்டலைக் காணும் மற்றும் முற்றிலும் சைவ உணவு மெனுவைக் கொண்டிருக்கும்.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்ளூர் நிகழ்வொன்றில், மும்பையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான தி ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா (HoABL) மூலம் இந்த சுத்தமான-சைவ ஹோட்டல் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
அயோத்தியில் விடுதிகள் அமைக்க 25 பரிந்துரைகள் அரசுக்கு வந்துள்ளதாகவும் உ.பி முதல்வர் தெரிவித்தார். இதுவரை, இந்தியாவில் எந்த ஆடம்பர ஹோட்டலும் முற்றிலும் சைவ உணவுகளை வழங்கவில்லை, சந்தேகத்திற்கு இடமின்றி, அயோத்தியில் உள்ள இந்த ஏழு நட்சத்திர சைவ ஹோட்டல், ராமர் கோவிலுடன் பார்வையாளர்களை மிகவும் கவரும் இடமாக இருக்கும். அறிக்கைகளைளின் படி, அயோத்தியில் சரயு நதிக்கரையோரம் சிறிய மற்றும் பெரிய ஹோட்டல் உரிமையாளர்கள் குறைந்தது 110 பேர் ஏற்கனவே நிலம் வாங்கியுள்ளனர்.
இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தை காண ஏராளமான மக்கள் செல்வதால், அயோத்தியில் வழங்கப்படும் உணவுகளை அனைவரும் பார்வையிட்டுள்ளனர். ஆடம்பரமான உணவு விருப்பங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அயோத்தி நகரம் அதன் ஆலு டிக்கி, கச்சோரி, சமோசா மற்றும் பப்டி சாட் போன்ற பல்வேறு சாட்களுக்கு பிரபலமானது.
ராம் லாலாவின் பிறப்பிடமாக இருப்பதால், இந்த நகரம் சுவையான லட்டுகளின் தாயகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தயிர் வடை, ரப்ரி, கச்சோரி, வெஜ் பிரியாணி மற்றும் பல்வேறு வகையான சைவ உணவுகளையும் ஒருவர் அனுபவிக்க முடியும்.
ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நகரின் வளர்ச்சிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வளர்ச்சிகளைப் பொறுத்தவரை, சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்தார், மேலும் இது மும்பை, டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் விமானம் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ரயில் நிலையமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் சேவையும் விரைவில் தொடங்கப்படும். லக்னோவில் இருந்து அயோத்திக்கு இந்த ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படும். மொத்தத்தில், அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றி ஒரு 'ஹப்' வடிவம் பெறுகிறது.



Click it and Unblock the Notifications
