Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம்
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா?
Agni Natchathiram 2026: கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு வெயில் காலம் மிகவும் கொடூரமானதாக இருக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரமே தொடங்காத நிலையில் இந்த வருடத்தில் வெயிலின் தாக்கம் அளவிற்கதிகமாக உள்ளது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் எப்படி கணக்கிடப்படுகிறது, ஒவ்வொரு வருடமும் இந்த காலம் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

உண்மையில் அக்னி நட்சத்திரம் என்பது முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்புத் திருவிழாவாகும். இது தமிழ்நாட்டில் 25 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் மே மாதத்தின் கடும் வெப்பக் காலத்தில் இந்த விழா வருகிறது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் திருச்செந்தூர், திருத்தணி மற்றும் பழனி போன்ற புகழ்பெற்ற ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகளையும் சடங்குகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தாலும், பக்தர்கள் முருகப்பெருமானின் திருவருளைப் பெறவும், தங்களின் வெற்றி மற்றும் செழுமைக்காகப் பிரார்த்திக்கவும் பெருந்திரளாகக் கூடுகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கும் மற்றும் நிறைவடையும் தேதிகள், அதன் முக்கியத்துவம் மற்றும் வழிபாட்டுச் சடங்குகள் குறித்த அனைத்து முக்கிய விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அக்னி நட்சத்திரம் 2026: தொடக்கம் மற்றும் முடிவு தேதி
- அக்னி நட்சத்திரம் 2026 தொடக்க தேதி: 4 மே 2026, திங்கட்கிழமை
- அக்னி நட்சத்திரம் 2026 முடிவு தேதி: 28 மே 2026, வியாழன்
அக்னி நட்சத்திரத்தின் முக்கியத்துவம்
கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானை வழிபடுவதற்கு, அக்னி நட்சத்திர காலம் ஒரு மங்களகரமான காலமாகக் கருதப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக இந்த காலகட்டத்தில் முருகனுக்கு நேர்த்திக் கடன்கள் செலுத்தப்படுகின்றன. மறுபுறம், இக்காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், புதிய செயல்களைத் தொடங்குவதற்கோ, திருமணம் செய்வதற்கோ, பயணம் மேற்கொள்வதற்கோ அல்லது நிதி சார்ந்த பரிவர்த்தனைகளைச் செய்வதற்கோ இது உகந்த நேரம் அல்ல என்று மக்கள் கருதுகின்றனர். இருப்பினும், பக்தர்கள் இந்தக் காலகட்டத்தில் முருகப்பெருமானை தவறாமல் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.
அக்னி நட்சத்திர சடங்குகள்
அக்னி நட்சத்திரக் காலத்தில், பக்தர்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி திருக்கோயிலில் முருகப்பெருமானை வழிபடுகின்றனர். பக்தர்கள் மலையை வலம் வருகின்றனர். இந்த மலையின் சுற்றுப்புறத்தில் இருக்கும் மூலிகைகள் மனம் மற்றும் உடலை ஆரோக்கியத்துடன் காக்கிறது. முருகனுக்கு வேண்டியுள்ள நேர்த்திக் கடன்களை செய்ய இது சிறந்த காலகட்டமாக இருக்கிறது. இந்த நாளில் பெண்கள் முருகப்பெருமானுக்கு பிடித்த கடம்ப மலர்களை சூடி வழிபடுகிறார்கள்.
அக்னி நட்சத்திர விழா நடைபெறும் நாட்கள் முழுவதும், தினமும் இறைவனுக்கு முறைப்படி நீரால் திருமஞ்சனம் செய்யப்படுகிறது; இந்நீரானது 'தீர்த்தம்' என சேகரிக்கப்படுகிறது. அக்னி நட்சத்திரம் முடியும் விழாவின் இறுதி நாளில், இந்தப் புனித நீர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மக்கள் இதனை முருகப்பெருமானின் ஆசீர்வாதமாகத் தங்கள் இல்லங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர் அல்லது கோவில்களிலும் கிணறுகளிலும் ஊற்றுகின்றனர்.
அக்னி நட்சத்திரம் என்பது வெறும் ஒரு பருவகால நிகழ்வு மட்டுமல்ல. அது ஆன்மீகச் சிந்தனை, சுயக்கட்டுப்பாடு மற்றும் பக்தி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்துவதற்கான, ஒரு காலமாகும். 'கத்திரி வெயில்' எனப்படும் சுட்டெரிக்கும் வெப்பச் சூழல் நிலவினாலும்கூட, இத்திருவிழா பக்தர்களுக்கு அவர்களின் மன வலிமையையும், தங்கள் வாழ்வில் முருகப்பெருமான் என்றும் நீங்காது வீற்றிருக்கும் உண்மையையும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது.



Click it and Unblock the Notifications
