கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன கிணறு!

By Vivek Sivanandam

இயற்கை கோபம் அடையும் போது அதனால் ஒரு சிறு விசயத்தை மட்டுமே செய்ய முடியும். இயற்கை அழிவின் கோபத்தில் இருந்து யாராலும் தப்ப முடியாது. மனிதர்களால் இயற்கையின் சக்தியை தடுக்க முடியாது என்பதற்கேற்ப, இது மிகவும் பயமுறுத்தக்கூடிய ஒன்று.

கிணறே தண்ணீருக்குள் மூழ்கும் அது போன்ற ஒரு இயற்கை அழிவு தான் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நொடிகளில் மொத்த கிணறும் இருக்கும் இடம் தெரியாமல் மூழ்குவது, இயற்கையின் கோபம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

அந்த வீடியோவில் பதிவான ஒட்டுமொத்த நிகழ்வுகள் பற்றிய நிறைய தகவல்கள் இதோ உங்களுக்காக!

Scary Video Of Well Sinking In Like It Was Never There!

முழுவதும் தண்ணீர் நிரம்பிய கிணறு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அப்படியே பூமிக்குள் மூழ்கியது நிச்சயம் ஒரு திகிலூட்டும் நிகழ்வு தான்.

இன்னும் சில நிமிடங்களில் அந்த கிணறு பூமிக்குள் புதையப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதை கண்ட மக்கள் அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் வீடியோ எடுக்கத் துவங்கினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், வட்ட வடிவ கான்கிரீட் கிணறு அப்படியே பூமிக்குள் தகர்ந்து, அதற்குள் இருந்த தண்ணீரில் மறைந்து போனது.

நமக்கு கிடைத்த அறிக்கையின் படி, இந்த நிகழ்வானது தென்னிந்தியாவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் அம்புகுதி கிராமத்தில் நிகழ்ந்து. அந்த பகுதியின் முக்கியமான பிரபல அடையாளமாக திகழ்ந்த அந்த கிணறு, மிகவும் பழமையான ஒன்று. மக்கள் அக்கிணறை பாசத்துடன் 'முதாசி கிணர்' என்று அழைந்து வந்தனர். 'முதாசி கிணர்' என்பதற்கு பாட்டியின் கிணறு என்று பொருள்.

அதிகளவு பெய்த பருவமழையின் காரணமாகவே கிணறு பூமிக்குள் புதைந்து போனதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், கிணற்றில் இருந்து வித்தியாசமான சப்தம் வெளிவரத் துவங்கியதை அடுத்து மக்கள் அங்கு கூட துவங்கினர். அதிக மக்கள் கிணற்றின் அருகில் குழுமியிருந்த சமயத்தில், அவர்களின் கண் எதிரே கிணறு பூமிக்குள் புதைந்தது என்கின்றனர்.

கனமழையின் காரணயாக பழைய கிணறுகள் பூமிக்கும் புதைவது என்பது அரிய நிகழ்வு இல்லை என்றாலும், அதை கேமராவில் படம் பிடித்தது மிகவும் அரிதான நிகழ்வு.

Desktop Bottom Promotion