Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம்
கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன கிணறு!
இயற்கை கோபம் அடையும் போது அதனால் ஒரு சிறு விசயத்தை மட்டுமே செய்ய முடியும். இயற்கை அழிவின் கோபத்தில் இருந்து யாராலும் தப்ப முடியாது. மனிதர்களால் இயற்கையின் சக்தியை தடுக்க முடியாது என்பதற்கேற்ப, இது மிகவும் பயமுறுத்தக்கூடிய ஒன்று.
கிணறே தண்ணீருக்குள் மூழ்கும் அது போன்ற ஒரு இயற்கை அழிவு தான் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நொடிகளில் மொத்த கிணறும் இருக்கும் இடம் தெரியாமல் மூழ்குவது, இயற்கையின் கோபம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அந்த வீடியோவில் பதிவான ஒட்டுமொத்த நிகழ்வுகள் பற்றிய நிறைய தகவல்கள் இதோ உங்களுக்காக!

முழுவதும் தண்ணீர் நிரம்பிய கிணறு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அப்படியே பூமிக்குள் மூழ்கியது நிச்சயம் ஒரு திகிலூட்டும் நிகழ்வு தான்.
இன்னும் சில நிமிடங்களில் அந்த கிணறு பூமிக்குள் புதையப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதை கண்ட மக்கள் அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் வீடியோ எடுக்கத் துவங்கினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், வட்ட வடிவ கான்கிரீட் கிணறு அப்படியே பூமிக்குள் தகர்ந்து, அதற்குள் இருந்த தண்ணீரில் மறைந்து போனது.
நமக்கு கிடைத்த அறிக்கையின் படி, இந்த நிகழ்வானது தென்னிந்தியாவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் அம்புகுதி கிராமத்தில் நிகழ்ந்து. அந்த பகுதியின் முக்கியமான பிரபல அடையாளமாக திகழ்ந்த அந்த கிணறு, மிகவும் பழமையான ஒன்று. மக்கள் அக்கிணறை பாசத்துடன் 'முதாசி கிணர்' என்று அழைந்து வந்தனர். 'முதாசி கிணர்' என்பதற்கு பாட்டியின் கிணறு என்று பொருள்.
அதிகளவு பெய்த பருவமழையின் காரணமாகவே கிணறு பூமிக்குள் புதைந்து போனதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், கிணற்றில் இருந்து வித்தியாசமான சப்தம் வெளிவரத் துவங்கியதை அடுத்து மக்கள் அங்கு கூட துவங்கினர். அதிக மக்கள் கிணற்றின் அருகில் குழுமியிருந்த சமயத்தில், அவர்களின் கண் எதிரே கிணறு பூமிக்குள் புதைந்தது என்கின்றனர்.
கனமழையின் காரணயாக பழைய கிணறுகள் பூமிக்கும் புதைவது என்பது அரிய நிகழ்வு இல்லை என்றாலும், அதை கேமராவில் படம் பிடித்தது மிகவும் அரிதான நிகழ்வு.



Click it and Unblock the Notifications