Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
தேங்காயோட இந்த பொருளை சேர்த்து ஒரு தடவை சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமான தலைவர்களாக இருப்பார்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
திருமண மேடையில் திடீர் திருப்பம்! மணமகனை விட்டுவிட்டு காதலனைத் தேடி ஓடிய மணப்பெண் - என்ன நடந்தது? -
Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரத்திற்கும், தமிழ்க் கடவுள் முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன தெரியுமா? -
4 முட்டை இருந்தா இந்த மாதிரி முட்டை பட்டர் மசாலா செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
வெயில் கொடுமையா? இந்த 5 செடிகள் இருந்தா வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
Tamil Nadu Election Results 2026: தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய 5 தேர்தல் முடிவுகள் என்னென்ன தெரியுமா?
கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போன கிணறு!
இயற்கை கோபம் அடையும் போது அதனால் ஒரு சிறு விசயத்தை மட்டுமே செய்ய முடியும். இயற்கை அழிவின் கோபத்தில் இருந்து யாராலும் தப்ப முடியாது. மனிதர்களால் இயற்கையின் சக்தியை தடுக்க முடியாது என்பதற்கேற்ப, இது மிகவும் பயமுறுத்தக்கூடிய ஒன்று.
கிணறே தண்ணீருக்குள் மூழ்கும் அது போன்ற ஒரு இயற்கை அழிவு தான் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நொடிகளில் மொத்த கிணறும் இருக்கும் இடம் தெரியாமல் மூழ்குவது, இயற்கையின் கோபம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
அந்த வீடியோவில் பதிவான ஒட்டுமொத்த நிகழ்வுகள் பற்றிய நிறைய தகவல்கள் இதோ உங்களுக்காக!

முழுவதும் தண்ணீர் நிரம்பிய கிணறு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அப்படியே பூமிக்குள் மூழ்கியது நிச்சயம் ஒரு திகிலூட்டும் நிகழ்வு தான்.
இன்னும் சில நிமிடங்களில் அந்த கிணறு பூமிக்குள் புதையப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதை கண்ட மக்கள் அந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் வீடியோ எடுக்கத் துவங்கினர். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில், வட்ட வடிவ கான்கிரீட் கிணறு அப்படியே பூமிக்குள் தகர்ந்து, அதற்குள் இருந்த தண்ணீரில் மறைந்து போனது.
நமக்கு கிடைத்த அறிக்கையின் படி, இந்த நிகழ்வானது தென்னிந்தியாவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் அம்புகுதி கிராமத்தில் நிகழ்ந்து. அந்த பகுதியின் முக்கியமான பிரபல அடையாளமாக திகழ்ந்த அந்த கிணறு, மிகவும் பழமையான ஒன்று. மக்கள் அக்கிணறை பாசத்துடன் 'முதாசி கிணர்' என்று அழைந்து வந்தனர். 'முதாசி கிணர்' என்பதற்கு பாட்டியின் கிணறு என்று பொருள்.
அதிகளவு பெய்த பருவமழையின் காரணமாகவே கிணறு பூமிக்குள் புதைந்து போனதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். அச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், கிணற்றில் இருந்து வித்தியாசமான சப்தம் வெளிவரத் துவங்கியதை அடுத்து மக்கள் அங்கு கூட துவங்கினர். அதிக மக்கள் கிணற்றின் அருகில் குழுமியிருந்த சமயத்தில், அவர்களின் கண் எதிரே கிணறு பூமிக்குள் புதைந்தது என்கின்றனர்.
கனமழையின் காரணயாக பழைய கிணறுகள் பூமிக்கும் புதைவது என்பது அரிய நிகழ்வு இல்லை என்றாலும், அதை கேமராவில் படம் பிடித்தது மிகவும் அரிதான நிகழ்வு.



Click it and Unblock the Notifications