Latest Updates
-
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 14 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம் -
50 ஆண்டுகளுக்கு பின் சனி ஜெயந்தியில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
காதலில் சம்மதம் முக்கியமா? டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன தெரியுமா? -
எடை இழப்புக்கு உதவும் வெஜிடேபிள் சிக்கன் சூப் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
'Main Tera' Day ட்ரெண்டில் காதலை சொல்லப் போறீங்களா? இந்த பாதுகாப்பு டிப்ஸ் தெரியாம மெசேஜ் அனுப்பாதீங்க, சிக்கலில் மாட்டிக்காதீங்க!
விநாயகரின் தோற்றம் குறித்த கதைகள்!!!
இந்து புராணங்கள் பெரும்பாலும் வாய்வழிக் கதைகளே. பல ஆண்டுகளாக வழிவழியாகச் சொல்லப்படுவதனால், ஒவ்வொரு கதைக்கும் பல கிளைக்கதைகளும், பல பதிப்புகளும் உள்ளன. விநாயகரின் தோற்றம் குறித்த கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
மூலக்கதை ஒன்றாக இருந்தாலும் பலரால் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டிருப்பதால் விநாயகரின் தோற்றம் குறித்து மூன்று கதைகள் சொல்லப்படுகின்றன.

கதை: 1
கைலாச மலையில் பார்வதி தனிமையாக உணர்ந்த போது, அவர் உடலில் இருந்த அழுக்கையெல்லாம் திரட்டி ஒரு சிறுவனின் சிலையை செய்தாராம். பிறகு அதை உயிர்ப்பித்து கணேசர் என்ற பெயரும் சூட்டினார். பின் தான் குளிக்கச் செல்லும் போது, வாயிலைக் காக்க கணேசரை பணித்துவிட்டு குளிக்கச் சென்றாராம்.
அப்போது அங்கே வந்த சிவனை கணபதி தடுக்க, கோபம் கொண்ட சிவன் கணபதியின் தலையை சீவிவிட்டாராம். கணபதியின் அலறலைக் கேட்ட பார்வதி ஓடிவந்து, அவரின் நிலையை கண்டு கோபம் கொண்டாராம். அதுமட்டுமல்லாது அவரது மகன் கணபதி மீண்டும் உயிர்பெறவில்லையென்றால் உலகத்தையே அழிக்கப்போவதாக சூளுரைத்தாராம். அங்கு நடந்த குழப்பத்தில் கணபதியின் தலையைக் காணவில்லை.
பிறகு கிங்கரர்களை அழைத்த சிவன், காட்டிற்கு சென்று முதன்முதலில் தென்படும் மிருகத்தின் தலையை எடுத்து வாருங்கள் எனப் பணிக்கவே, அவர்களும் அவ்வாறே ஒரு யானையின் தலையை எடுத்து வந்தார்கள். பிறகு கணபதியின் தலை இருந்த இடத்தில் ஒரு வெள்ளை யானையின் தலையை மாட்டி, அவரை உயிர்ப்பித்தாராம் சிவன்.
கதை: 2
இரண்டாவது கதை ஏறத்தாழ ஒரேமாதிரியாக இருந்தாலும், இதில் அழுக்கிற்கு பதில் விநாயகரை சந்தனத்தைக் கொண்டு பார்வதி உருவாக்கியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் பார்வதியின் முழு அருளையும் பெற்ற கணபதியை அழிக்க வேண்டுமானால், ஒரு முழு ராணுவமே தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
கதை: 3
இம்மார்டஸ் ஆஃப் மெலுஹுவா என்ற புதிய நாவலில் இந்த மூன்றாவது கதை வருகிறது. எழுத்தாளர் அம்ரிஷ் புதிய திருப்பத்துடன் கூடிய கதையை சொல்லியிருக்கிறார். சதியின் முதல் கணவருக்குப் பிறந்த கணேசர் சில குறைபாடுகளுடன் பிறந்ததால், சதியின் தந்தை கணேசரை நாகர்களின் இடத்திற்கு விரட்டிவிட்டாராம். கணேசர் சிவனின் குழந்தை அல்ல என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக இந்த கோணம் பதிவு செய்கிறது.
இவை மூன்றும் கணேசரின் பிறப்பு பற்றிய பதிப்புகளாகும், உங்களுக்கு வேறு கதைகள் தெரிந்தால் தயவுகூர்ந்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications