Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
டீன்-ஏஜ் வயதுள்ளவரைப் பற்றி மனதில் தோன்றும் எண்ணங்கள்!!!
பொதுவாக டீன் ஏஜ் வயதுள்ளவரைப் பார்த்தாலே, சிலர் அவர்களுக்கு திமிர், தற்பெருமை மற்றும் ஆணவம் அதிகம் இருக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த வயதில் உள்ள இளைஞர்கள் அனைவருமே, இத்தகைய குணங்களை உடையவர்கள் அல்ல. அத்தகைய குணத்தை பெற வைப்பது சமூகம் தான். மேலும் உறவினர் ஒருவர் குழந்தையில் உள்ள ஒருவனை இளைஞனாகப் பார்த்து விட்டால், உடனே அவர் மனதில் ஓடுவது "அவன் வளர்ந்துவிட்டான் மற்றும் அவனுக்கு நிச்சயம் திமிர் அல்லது வெட்கம் இருக்க வேண்டும்" என்று தோன்றும்.
ஆனால் இவை அனைத்துமே உண்மையில் ஒரு கற்பனையான ஒரு கதை தானே தவிர, அனைத்து இளைஞர்களுக்குமே பொருந்தாது. இப்போது மக்கள் மத்தியில் இருக்கும் இளைஞர்களைப் பற்றிய கற்பனையான மற்றும் தவறான எண்ணங்களை பட்டியலிட்டுள்ளோம்.

* டீன் ஏஜ் வயதுள்ளவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்ற கருத்து இருக்கிறது. சரி தான், அவர்களால் ஏதாவது ஒரு கடினமான சூழ்நிலை வந்தால், அதனை சரியாக சமாளிக்கத் தெரியாது. இதற்கு அவர்களது மன வளர்ச்சியும், சூழ்நிலையும் தான் காரணமே தவிர, அவர்களது தவறில்லை.
* பெரும்பாலானோரின் மனதில், டீன்-ஏஜ் வயதா? அப்படியெனில் அவர்களுக்கு ஆணவம் அதிகம் இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். உண்மையில், இது அவர்களது தவறல்ல. உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றங்களும், ஒருசில சூழ்நிலைகளும் தான் அவர்களது நடவடிக்கைகளை வித்தியாசமாக்குகிறது.
* டீன்-ஏஜ் வயது தான், முதன்முதலில் மனதில் இருக்கும் கருத்தையோ அல்லது செயல்களையோ வெளிப்படுத்தும் வாழ்வின் முதல் நிலை. இந்த நிலையில் அவர்கள் வெளியுலகத்தைப் பற்றி நிறைய ஆராய்வார்கள். அப்போது அவர்களுக்கு எதற்கும் ஒரு கட்டுப்பாடு உள்ளது என்பதை புரிந்து கொள்ளும் சக்தி இருக்காது. அதனால் கட்டுப்பாடின்றி நடந்து கொள்வார்கள். ஆகவே இத்தகைய அறிவை பெற்றோர்கள் தான் சிறுவயதிலிருநந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* குழந்தையாக இருந்து, வளரும் போது ஒவ்வொருவரின் நடையிலும், உடையிலும் , பாவனையிலும் மாற்றங்கள் நிகழ்வது சகஜம் தான். அப்போது அவர்களுக்கு, இந்த உலகிலேயே மிகவும் ஸ்மார்ட் நான் தான் என்று உணர்வார்கள். அதனால் அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் துணிந்து செய்வார்கள். ஏன், இந்த நிலையில் தவறான வழியில் கூட செல்ல வாய்ப்புள்ளது. ஆகவே இதனை பெற்றோர்கள் சரியாக கண்டு கொள்ளாமலும், கவனிக்காமலும் ஆதரித்தால் , பின் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இவையே மக்கள் மத்தியில் டீன்-ஏஜ் வயதுள்ளவர்கள் பற்றிய எண்ணங்கள். என்ன சரிதானா?



Click it and Unblock the Notifications