Just In
- 26 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Movies இது கட்ட பஞ்சாயத்து.. ரத்னம் பட ரிலீஸுக்கு கடைசி நேரத்தில் சிக்கல்.. விஷால் அதிரடி குற்றச்சாட்டு!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தீபாவளியன்று லட்சுமி கணேச பூஜை நடத்துவதற்கான வழிமுறைகள்!!!
தீபாவளி அன்று லட்சுமி தேவி மற்றும் விநாயகருக்காக வீட்டில் செய்யப்படும் இந்த பூஜை சற்று இன்றியமையாத சடங்காகும். தீபாவளியன்று லட்சுமி தேவி பொன்னையும் பொருளையும் அள்ளி கொடுப்பார் என்று நம்பப்படுகிறது.
தீபாவளி நெருங்கி கொண்டிருக்கிறது. இந்த பண்டிகையை கொண்டாட நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். தீபாவளி கொண்டாட்டங்களில் முக்கியமானதாக இருப்பது லட்சுமி விநாயகர் பூஜையாகும். அதனை தீபாவளி தினத்தன்று செய்வது வழக்கம். லட்சுமி தேவி மற்றும் விநாயகரை நம் வீட்டிற்கு வரவேற்பதற்காக நடத்தப்படும் விசேஷ சடங்கு இது. நம் வீட்டிற்கு வந்து அறிவு, செல்வம் மற்றும் அனைத்து வளத்தையும் அவர்கள் வாரி வழங்குவார்கள் என நம்பப்படுகிறது.
லட்சுமி தேவி மற்றும் விநாயகருக்காக வீட்டில் செய்யப்படும் இந்த பூஜை சற்று இன்றியமையாத சடங்காகும். தீபாவளியன்று நம் அனைவரின் வீட்டிற்கும் லட்சுமி தேவி வந்து பொன்னையும் பொருளையும் அள்ளி கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. அதற்காக தான் தீபாவளிக்கு முன்பு வீட்டை நன்றாக சுத்தம் செய்து விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கின்றோம்.
அதனால் தீபாவளியன்று நீங்களும் உங்கள் வீட்டில் லட்சுமி விநாயகர் பூஜையை நடத்த விரும்பினால், அதற்கு எப்படி தயாராக வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லுகிறோம். அதற்கு பூஜைக்கு என்னவெல்லாம் தேவை என்பதை முதலில் பார்க்க வேண்டும். பிறகு இந்த சடங்கை எப்படி நடத்துவது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளை பற்றி பார்க்கலாமா? அவைகளைப் படித்து இப்பூஜையை சிறப்பாக செய்து லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் அருளைப் பெற்றிடுங்கள்.
பூஜைக்கு தேவையான பொருட்கள்
கீழ்கூறிய பொருட்களை பூஜைக்கு தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
கலசம், மாவிலைகள், லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகள், பால், தயிர், தேன், நெய், அரிசி பொறி, இனிப்பு வகைகள், மல்லி விதைகள், வெற்றிலை பாக்கு போன்றவைகள் தேவை. இதுப்போக எப்போதும் பூஜைக்கு பயன்படுத்தும் விளக்குகள், பத்தி, குங்குமம், பூக்கள், மஞ்சள், அரிசி போன்ற பொருட்களும் தேவைப்படும்.
பூஜைக்கான வழிமுறைகள்
முதலில் வீட்டை சுத்தப்படுத்துங்கள். சுத்தமும், சுகாதாரமும் நிறைந்த இடத்தில் மட்டுமே லட்சுமி தேவி தங்குவதாலேயே இந்த ஏற்பாடு. அதன் பின் கங்கா தீர்த்தம் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்துங்கள். இப்போதெல்லாம் பாட்டிலில் அடைக்கப்பட்ட கங்கா தீர்த்தங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.
பூஜைக்கான வழிமுறைகள்
மஞ்சளையும், குங்குமத்தையும் சிலைகளின் மீது தடவி பூஜையை தொடங்கவும். பிறகு விளக்கை ஏற்றவும். அதுமட்டுமின்றி, புத்தகங்கள் அல்லது அலுவலக ஆவணங்களை சிலைகளுக்கு அருகில் வைக்கவும்.
பூஜைக்கான வழிமுறைகள்
மஞ்சளையும், குங்குமத்தையும் சிலைகளின் மீது தடவி பூஜையை தொடங்கவும். பிறகு விளக்கை ஏற்றவும். அதுமட்டுமின்றி, புத்தகங்கள் அல்லது அலுவலக ஆவணங்களை சிலைகளுக்கு அருகில் வைக்கவும்.
பூஜைக்கான வழிமுறைகள்
அதன் பின் மஞ்சள், குங்குமம், மல்லி விதைகள், சீரகம், அரிசி பொறி மற்றும் அரிசியை ஒரு தட்டில் வைக்கவும். மஞ்சள், குங்குமம் மற்றும் அரிசியை கலசத்தின் மீது தடவும். பிறகு பூக்களை கடவுளுக்கு அர்ப்பணிக்கவும். அதன் பின் கொஞ்சம் பூக்களையும், அரிசியையும் கையில் எடுத்துக் கொண்டு, இந்த மந்திரங்களை கூறவும்:
பூஜைக்கான வழிமுறைகள்
வக்ரதுண்ட மஹாகாய சுர்யகோட்டி சமப்ரபா நிர்விக்னம் குருமே தேவா சர்வகர்யேஷு சர்வடா
நமோஸ்தேஸ்து மகா மாயே,
ஸ்ரீ படீ, சுறா பூஜிடே,
ஷங்கா, சக்ரா, கடா ஹஸ்தே,
மஹா லக்ஷ்மி நமோஸ்துதே.
பூஜைக்கான வழிமுறைகள்
மந்திரத்தை கூறிய பின், சிறிது நேரத்திற்கு தியானம் செய்யுங்கள். அதன் பின் பூக்களையும், அரிசியையும் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளின் மேல் தூவவும். பின் லட்சுமி தேவியின் சிலையை எடுத்து ,சுத்தமான ஒரு தட்டின் மீது வைக்கவும். அடுத்து புனித நீரை கொண்டு சிலையை கழுவுங்கள். தேன், தயிர், பால் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை கொண்டு சிலைக்கு அபிஷேகம் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை புனித நீரை கொண்டு சிலையை கழுவுங்கள். சுத்தமான துணியை கொண்டு அதனை நன்றாக துடைத்து, கலசத்தின் மீதே அதை மீண்டும் வையுங்கள். இதையே விநாயகர் சிலைக்கும் செய்ய வேண்டும்.
இப்போது லட்சுமி தேவி மற்றும் விநாயகர் சிலைகளுக்கு மாலைகள் அணிவியுங்கள். சிறிது மஞ்சளையும், குங்குமத்தையும் சிலைகளின் மீது பூசுங்கள். பிறகு இனிப்பு வகைகளை படைத்து, நெருப்பு ஆரத்தி காட்ட வேண்டும். ஆரத்தி எடுக்கும் போது, அதற்கான பாடலை வேண்டுமானாலும் பாடலாம். ஆரத்தி எடுத்தப் பின் கடவுளுக்கு படைத்த இனிப்புகளை பிரசாதமாக எடுத்து உண்ணுங்கள்.