சுதந்திர தின வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவிக்க ஆசையா...?

By Maha

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமானது ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 67 ஆவது சுதந்திர தினம் என்பதால், இந்த வருட சுதந்திர தினத்தை வித்தியாசமாக கொண்டாடுவதற்கு தமிழ் போல்ட் ஸ்கை ஒரு வித்தியாசமான வழியைக் கொடுத்துள்ளது.

பொதுவாக சுதந்திர தினம் என்றால் தேசியக் கொடியை குத்திக் கொண்டு, கொடியேற்றி தேசியப் பாடலைப் பாடி, மிட்டாய் கொடுத்து தான் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். மேலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதென்றால், "சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்" என்று மட்டும் சொல்வோம். ஆனால் இன்றைய காலத்தில் அனைவரும் இன்டர்நெட்டிலேயே இருப்பதால், அந்த இன்டர்நெட் வழியாக வெறும் மெசேஜ்களை அனுப்பிக் கொள்வோம்.

Send Greetings For Independence Day 2013

ஆனால் இப்போது ஒரு வித்தியாசமான டெக்னாலஜியைப் பயன்படுத்தி, சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இது சற்று வித்தியாசமானதாக இருந்தாலும், நாட்டுப்பற்றை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். அது என்னவென்றால், தேசியக் கொடியின் படத்தில் நாட்டின் கலாச்சாரம், ஜாதி, மதம் மற்றும் இன வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்குமாறான 7000 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஆகவே கொடியின் மீது எங்கு கிளிக் செய்தாலும், ஒவ்வொரு விதமான நாட்டுப்பற்றை உணர்த்தும் பல வீடியோக்களை காணலாம். எனவே, இந்த வருட சுதந்திர தினத்தின் வாழ்த்தை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவதற்கு, இங்கு கிளிக் செய்து, அதனை நண்பர்களுக்கு அனுப்பி சுதந்திர தினத்தைக் கொண்டாடுங்கள்.

அனைத்து நண்பர்களுக்கும் தமிழ் போல்ட் ஸ்கையின் சுதந்திர தின வாழ்த்துக்கள்!!!

Desktop Bottom Promotion