Latest Updates
-
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ்வது என்பது சாத்தியமல்ல!!! புரியலையா படிச்சு பாருங்க...
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று உலகில் உள்ள அனைவரும் சுற்றுச்சூழலை மாசுபாடின்றி சுத்தமாக வைப்பதற்கான டிப்ஸை கொடுப்பார்கள். மேலும் இந்த நாளன்று மட்டும், பல தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ஆங்காங்கு ஊர்வலத்துடன் சென்று, சுற்றுச்சூழலின் நன்மையை செல்வார்கள். எவ்வளவு தான் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் அல்லது அறிவுறுத்தினாலும், உலகில் வாழ வேண்டுமெனில் கொஞ்சம் சுற்றுச்சூழலை மாசுபட செய்ய வேண்டியுள்ளது. ஆகவே இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாவிட்டால், எப்படி வாழ்வது சாத்தியமில்லாமல் போகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஆம் உண்மையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ முடியாது. எப்படி சொல்லலாம் என்று கேட்கலாம். இவ்வாறு சொல்வதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவை சாலைகள் அமைப்பது, பண்டிகைகளை கொண்டாடுவது, பயணம் மேற்கொள்வது, நீதிக்கு போராட்டம் மேற்கொள்வது மற்றும் பல. இத்தகைய செயல்களை செய்யாமல் இருக்க முடியுமா? அல்லது வாழத் தான் முடியுமா? பதில் சொல்வது கஷ்டம் அல்லவா!
எனவே இப்போது இது போன்று வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துவதற்கு எந்த செயல்களையெல்லாம் மேற்கொண்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம் என்று பார்ப்போம்!!!

சாலைகள்
தற்போது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல சாலைகள் வழியே செல்கிறோம். இத்தகைய சாலைகளை அமைக்க மரங்களை வெட்ட நேரிடுகிறது.

தீபாவளி
அனைவரும் தீபாவளி பண்டிகையன்று மிகவும் சந்தோஷமாக இருப்போம். தீபாவளியின் ஸ்பெஷலே பட்டாசு வெடிப்பது தான். அத்தகைய பட்டாசுக்களை வெடிக்காமல் இருக்க முடியுமா? எப்படியிருப்பினும் சிறு பட்டாசுகளையாவது வெடிப்போம்.

வண்டிகள்
தற்போதுள்ள காலத்தில் அனைவரது வீட்டிலும் வண்டி இல்லாமல் இல்லை. அவ்வாறு வண்டி ஓட்டும் போது, அதிலிருந்து வெளிவரும் புகையும் மற்றும் சப்தமும் ஒருவித மாசுபாட்டை உண்டாக்குவது தான்.

தொழிற்சாலை
தொழிற்சாலைகளில் இருந்து அசுத்தக் காற்று மற்றும் நீர் வருகிறது என்று சொல்கிறோம். அதற்காக தொழிற்சாலைகளை இடிக்கவா முடியும். இல்லை அல்லவா!

பிளாஸ்டிக் பைகள்
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று வாயில் மட்டும் தான் சொல்லிக் கொள்கிறோமோ தவிர, பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருக்கிறோமா? சொல்லப்போனால், அனைவரும் பிளாஸ்டிக் பைகள் கிடைத்தால், உடனே பத்திரப்படுத்தி, வீட்டில் காய்கறிகள் அல்லது பழங்களைப் போட்டு பயன்படுத்திக் கொள்கிறோம்.

கண்ட இடங்களில் குப்பைகள்
'குப்பைகளை குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும்...' வாசகம் சூப்பராக உள்ளது தானே. ஆனால் இதனை எத்தனை பேர் கடைப்பிடிக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். அனைவருக்கும் தெருவோரங்களே குப்பைத் தொட்டிகளாக உள்ளது.

போராட்டம்
போராட்டம் இருந்தால், அங்கு ஒரு பஸ் அல்லது ஆட்டோ நிச்சயம் கொளுந்துவிட்டு எரியும். இதற்காக நீதி கிடைப்பதற்கு போராட்டம் செய்யாமல் இருக்க முடியுமா? இல்லை அல்லவா!

எலக்ட்ரானிக் பொருட்கள்
டெக்னாலஜி வளர்ந்துள்ள நிலையில் அனைவரது வீட்டிலும் கணினி, மொபைல், மைக்ரோவேவ் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தி பழாகிப் போனதை, என்ன செய்வதென்று தெரியாமல் ஒரு மூலையில் போட்டு வைக்கிறோம். அத்தகையவற்றை தூக்கிப் போட்டாலும் சரி, எரித்தாலும் சரி மாசுபாடு தான்.

தேங்கிய மழை நீர்
எவ்வளவு தான் மழை பெய்தாலும், தெரு ஓரங்களில் தேங்கியிருக்கும் மழை நீரை கார்பரேஷன் அவ்வப்போது வந்து சுத்தம் செய்கிறதா? இல்லை. இருப்பினும் அனைவரும் தற்போதுள்ள வேலை பிஸியால், அதை கவனிக்காமலேயே பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறோம். மேலும் எத்தனை பேர் தெருவில் மழை நீர் தேங்கியிருந்தால், அதனை போக்குவதற்கு முயற்சி செய்கிறோம் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications