Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
இந்தியாவில் சாப்பிடப்படும் சில விசித்திர உணவுகள்!!!
இந்தியாவில் பல அபூர்வங்கள் உள்ளன. அதில் மக்கள், உணவுகள், கலாச்சாரங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மேலும் இவை அனைத்தும் இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அந்த வகையில் உணவுகள் என்று வரும் போது, இந்திய உணவுகள் மிகவும் சுவையானதாக பார்க்கும் போதே நாஊறும். ஆனால் இந்தியாவிலும் சில பகுதிகளில் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவுகளை மக்கள் சாப்பிடுகின்றனர் என்பது தெரியுமா?
ஆம், இந்தியாவில் பல பகுதிகளில் நினைத்து பார்க்க முடியாத சில உணவுகளை சாப்பிடுகின்றனர். சொல்லப்போனால், அந்த உணவுகளை சொன்னால் நம்பமாட்டீர்கள். மேலும் அது ஆச்சரியமானதாகவும் இருக்கும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?
சரி, அந்த விசித்திர உணவுகள் என்னவென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்க்க ரெடியா....?

காட்டெருது வெண்ணெய் டீ
ஆம், இந்த டீயானது காட்டெருதுவின் பாலில் செய்யப்பட்ட வெண்ணெய் கொண்டு செய்யப்பட்டது. இந்த டீயை திபெத்காரர்கள், இந்தியாவில் முதன்முதலில் வெளிப்படுத்தினர். மேலும் இந்த டீயில் வெண்ணெய் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு அடித்து சாப்பிடக்கூடியதாகும்.

சிக்கன் இரத்தம் மற்றும் பன்றி குடல்
என்ன சிரிப்பா வருதா. ஆனால் இது தான் உண்மை. இந்த ரெசிபிக்கு ஜடோ என்று பெயர். இந்த உணவை இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் சாப்பிடுவார்கள்.

நாய் இறைச்சி
அனைவருக்கும் நாயை வளர்க்க பிடிக்கும். ஆனால் நாகாலாந்து பகுதியில் உள்ள மக்கள் நாய் இறைச்சியை விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லப்போனால், இந்த பகுதியில் இந்த உணவு மிகவும் விலை உயர்ந்தது.

குட்டி சுறா குழம்பு
சுறாவைப் பார்த்து பயப்படும் மக்கள், சுறாவின் குட்டியைப் பிடித்து, அதனை குழம்பு செய்து சாப்பிடுகிறார்கள். பொதுவாக இந்த ரெசிபி கோவாவில் மிகவும் பிரபலமானது மற்றும் விலை அதிகமானதும் கூட.

சிவப்பு எறும்பு சட்னி
சத்தீஸ்கர் பகுதியில் சிவப்பு எறும்பை சட்னி செய்து சாப்பிடுவார்கள்.

கருப்பு அரிசி
மணிப்பூரில் இது மிகவும் ஸ்பெஷலானது. இந்த அரிசியின் நிறத்தால், இதனை 'மேஜிக் அரிசி' என்றும் சொல்வார்கள். மேலும் இந்த அரிசி அறுவடை செய்யும் போது கருப்பு நிறத்திலும், வேக வைத்தப் பின்னர் ஊதா நிறத்திலும் இருக்கும்.

பன்றி மூளை
மேகாலயாவில் பன்றியின் மூளையை வேக வைத்து அலங்கரித்து சாப்பிடுகிறார்கள்.

தவளை கால்கள்
சிக்கிம் பகுதியில், வயிற்றுப் போக்கு மற்றும் இதர வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்குவதற்கு தவளையின் கால்களை சூப் வைத்து சாப்பிடுவார்கள்.

கூட்டுப்புழு
அசாம் மாநிலத்தில் பச்சை நிற கூட்டுப்புழுவை சாப்பிடும் பழக்கம் உள்ளது. இந்த புழுவைக் கொண்டு செய்யப்படும் ரெசிபியானது மிகவும் வண்ணமயமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications