Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
தற்காலிக விருந்தினர்!!!
டோசுய் என்பவர் ஒரு ஜென் மாஸ்டர். அவர் புத்த சமய நெறிகளைக் கடைபிடிப்பதை விட்டு, ஒரு பாலத்தின் கீழ் பிச்சைக்காரர்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது டோசுய்வின் முதுமை காலத்தில், அவரது மீதமுள்ள வாழ்கையை கழிக்க, அவரது நண்பர் ஒருவர் அவருக்கு அரிசியிலிருந்து வினிகர் தயாரிப்பதைக் கற்றுக் கொடுத்தார். அதனை டோசுய் தனது மரணம் வரை தொடர்ந்து செய்தார்.
ஒரு முறை டோசுய் வினிகரை செய்து கொண்டிருக்கும் போது, தனது பிச்சைக்கார நண்பர்களில் ஒருவர், புத்தரின் படம் ஒன்றை அவருக்குக் கொடுத்தார். டோசுயும் மதப் பிணைப்புகளுக்கு, அப்பாற்பட்டு இருந்ததால், அந்த படத்தை வியப்புடன் ஏற்றுக்கொண்டார்.
பின் அந்த படத்தை தனது குடிசையின் சுவரில் தொங்கவிட்டு, மேலும் அதில் ஒரு வாசகம் ஒன்றையும் எழுதினார். அது என்னவென்றால், "திரு. அமிதா புத்தர்: இது குறுகிய அறை என்பதால், நான் மட்டும் தான் இங்கு தங்க முடியும். நீங்கள் ஒரு தற்காலிக விருந்தினர். நீங்கள் உங்கள் அழகான மாளிகையில் மறுபடியும் பிறந்து அங்கே தங்குங்கள். இதற்காக என்னை தவறாக எண்ண வேண்டாம்." என்று எழுதி இருந்தார்.
இக்கதையில் டோசுய்-க்கு புத்தரைப் பற்றி நன்கு தெரியும். அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதும் தெரியும். இருப்பினும், நண்பர் கொடுத்த காரணத்தினால், அவரை தன் அறையில் வைக்க கஷ்டப்பட்டு, அவ்வாறு எழுதியுள்ளார். இதனால் டோசுய்க்கும் கஷ்டம், புத்தருக்கும் கஷ்டம். ஆகவே "யாரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து விட்டால், எல்லாம் சௌக்கியமே" என்று கருடன் சொன்னது எல்லோருக்கும் பொருந்தும்.



Click it and Unblock the Notifications