பன்சானுக்கு ஏற்பட்ட ஞானோதயம்

By Sutha

Banzan's Enlightenment
ஞானோதயம் எப்போது, எப்படி ஏற்படும் என்றே சொல்ல முடியாது. ஒரு நாள், ஜென் துறவியான பன்சான் ஒரு தெருவில் உள்ள மார்க்கெட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு இறைச்சிக்கடைக்காரர் தனது வாடிக்கையாளருடன் பேசுவதைக் கேட்க நேரிட்டது.

அந்த வாடிக்கையாளர் கேட்டார், எனக்கு சிறந்த கறி வேண்டும். எனவே அப்படிப்பட்டதை மட்டுமே என்னிடம் கொடுங்கள் என்றார்.

அதற்குக் கடைக்காரர், எனது கடையில் உள்ள எல்லாமே சிறந்ததுதான். ஒரு சின்ன பீஸைக் கூட இது மோசமானது என்று உங்களால் கூற முடியாது என்றார்.

எவ்வளவு அறிவுப்பூர்வமான பதில்... இதைக் கேட்டதும் பன்சானுக்கு ஞானோதயம் ஏற்பட்டதாம்.

Story first published: Tuesday, May 29, 2012, 16:01 [IST]
Desktop Bottom Promotion