Latest Updates
-
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
அடர்த்தியான தலைமுடியை பெற உதவும் செம்பருத்தி எண்ணெய் - எப்படி தயாரிக்கணும் தெரியுமா?
எண்ணத்தை மாற்றாதே!!!
ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் துறவியின் தியானத்தை கலைத்து, "நான் உங்கள் சீடராக விரும்புகிறேன்" என்று கூறினான். துறவி அவனிடம் "ஏன்?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் சிறிது யோசித்து, "நான் கடவுளைக் காண ஆசைப்படுகிறேன். ஆகவே முதலில் உங்கள் சீடர் ஆகி, கடவுளைக் காணும் வழிமுறைகளை கற்றுக் கொள்கிறேன்" என்று கூறினான்.
உடனே துறவி எழுந்து அந்த இளைஞனை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்று, அவன் தலையை பிடித்து சற்று நேரம் தண்ணீரில் மூழ்கும் படி செய்தார். அவனோ தண்ணீரில் மூழ்கும் போது திணறினான். பிறகு துறவி அவன் தலையை விட்டதும், அவன் தண்ணீரில் இருந்து தலையை எடுத்து, இருமினான், பின் மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான்.
அவன் அமைதியானதும், துறவி அவனிடம், "இப்போது சொல், நீ தண்ணீரில் இப்போது இருக்கும் போது என்ன வேண்டினாய்?" என்று கேட்டார். அவன் அதற்கு "காற்று!" என்று கூறினான்.
"சரியாக சொன்னாய்", என்று கூறி, பின்பு அவனிடம், "உனக்கு இப்போதைய தேவை காற்று தான். எப்போது உனக்கு கடவுளைப் பார்க்க வேண்டுமோ! அப்போது என்னிடம் வா." என்று துறவி கூறினார்.
இக்கதையிலிருந்து என்ன புரிகிறதென்றால், "எண்ணம் ஒன்றே என்றால் அதனை எந்த காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்வாறு தேவைக்கேற்ப எண்ணத்தை மாற்றினால் எண்ணத்தை விரைவில் அடைய முடியாது" என்பது நன்கு புரிகிறது.



Click it and Unblock the Notifications