Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
எண்ணத்தை மாற்றாதே!!!
ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் துறவி ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞன் துறவியின் தியானத்தை கலைத்து, "நான் உங்கள் சீடராக விரும்புகிறேன்" என்று கூறினான். துறவி அவனிடம் "ஏன்?" என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன் சிறிது யோசித்து, "நான் கடவுளைக் காண ஆசைப்படுகிறேன். ஆகவே முதலில் உங்கள் சீடர் ஆகி, கடவுளைக் காணும் வழிமுறைகளை கற்றுக் கொள்கிறேன்" என்று கூறினான்.
உடனே துறவி எழுந்து அந்த இளைஞனை ஆற்றை நோக்கி அழைத்துச் சென்று, அவன் தலையை பிடித்து சற்று நேரம் தண்ணீரில் மூழ்கும் படி செய்தார். அவனோ தண்ணீரில் மூழ்கும் போது திணறினான். பிறகு துறவி அவன் தலையை விட்டதும், அவன் தண்ணீரில் இருந்து தலையை எடுத்து, இருமினான், பின் மூச்சை இழுத்து விட்டு சுவாசித்தான்.
அவன் அமைதியானதும், துறவி அவனிடம், "இப்போது சொல், நீ தண்ணீரில் இப்போது இருக்கும் போது என்ன வேண்டினாய்?" என்று கேட்டார். அவன் அதற்கு "காற்று!" என்று கூறினான்.
"சரியாக சொன்னாய்", என்று கூறி, பின்பு அவனிடம், "உனக்கு இப்போதைய தேவை காற்று தான். எப்போது உனக்கு கடவுளைப் பார்க்க வேண்டுமோ! அப்போது என்னிடம் வா." என்று துறவி கூறினார்.
இக்கதையிலிருந்து என்ன புரிகிறதென்றால், "எண்ணம் ஒன்றே என்றால் அதனை எந்த காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்வாறு தேவைக்கேற்ப எண்ணத்தை மாற்றினால் எண்ணத்தை விரைவில் அடைய முடியாது" என்பது நன்கு புரிகிறது.



Click it and Unblock the Notifications











