Latest Updates
-
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது! -
ரவா இட்லியும், மல்லி சட்னியும் - சட்டுன்னு 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்! -
இன்றைய ராசிபலன் 18 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
வாஸ்து படி இந்த செடிகளில் ஒன்றை உங்கள் வீட்டில் வளர்த்தால் பணமும், அதிர்ஷ்டமும் தேடிவருமாம் -
சந்திரன்-சுக்கிரனால் உருவாகும் அரிய லட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்!
உங்க வீட்டில் பிள்ளையார் சிலையை இந்த இடத்தில் வைத்தால் செல்வமும், புகழும் தேடிவருமாம்...!
இந்து மதத்தின் முழுமுதற் கடவுளாக இருப்பவர் விநாயகர். வாழ்க்கையில் அனைத்து தடைகளையும் நீக்குபவராக இருப்பதால் விநாயகர் அனைவரின் இல்லத்திலும் வழிபடபடுகிறார், கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் விநாயகரின் சிலையோ அல்லது புகைப்படமோ நிச்சயம் இருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் விநாயகர் சிலையை சரியான திசையில் வைத்திருந்தால், உங்கள் வீட்டில் அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கும். விநாயகரை வீட்டில் வைக்கும் முன் ஒருவர் மனதில் கொள்ள வேண்டிய பல்வேறு வாஸ்து விதிகள் உள்ளன.

விநாயகர் சிலை வைக்கும் நிலை மிகவும் முக்கியமானது மற்றும் அதேபோல விநாயகர் சிலை எந்த பொருளில் தயாரிக்கப்படுகிறது என்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
விநாயகப் பெருமானின் உடல் உறுப்புகளின் முக்கியத்துவம்
விநாயகருக்கு தனித்துவமான அம்சங்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் வாழ்க்கையில் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவை. உங்கள் இல்லத்தில் அமைதியையும் செழிப்பையும் கொண்டுவர இறைவனிடம் உள்ள இந்த குணங்களை ஒருவர் பின்பற்றலாம்.
விநாயகரின் ஒவ்வொரு உடல் உறுப்பும் நமக்கு என்ன உணர்த்துகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
- பெரிய தலை - பெரிதாகவும் நேர்மறையாகவும் சிந்தியுங்கள்
- பெரிய காதுகள்/சிறிய வாய் - குறைவாகப் பேசுங்கள், அதிகமாகக் கேளுங்கள்
- சிறிய கண்கள் - அதிக ஆற்றல்
- ஒற்றை தந்தம் - வாழ்க்கையில் நல்லவற்றை நினைவில் வைத்து, கெட்டதை மறந்து விடுங்கள்
- நீண்ட தந்தம் - வலிமை மற்றும் பல்துறை
- பெரிய வயிறு - வாழ்க்கையில் உள்ள நல்ல மற்றும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை ஜீரணிக்கவும்
- மோதகம் - தவத்தினால் கிடைக்கும் பலன்கள்
விநாயகர் சிலை நிறத்தின் வாஸ்து முக்கியத்துவம்
விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. சுய வளர்ச்சியை விரும்புபவர்கள் வெண்மை நிறத்தில் உள்ள வாஸ்து விநாயகர் படம்/விக்கிரகத்தை வாங்க வேண்டும். அதேபோல, வெள்ளை நிறம் செழிப்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது. வெள்ளை நிற வாஸ்து விநாயகர் சிலையை வைப்பதன் மூலம் இந்த அதிர்ஷ்டங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம்.
விநாயகர் சிலையை வைக்கும் நிலையின் முக்கியத்துவம்
லலிதாசனம் என்றும் அழைக்கப்படும் இறைவனின் அமர்ந்த நிலை, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அமைதியான சூழலை ஊக்குவிக்கிறது. செல்வம், வசதி, ஆடம்பரம் ஆகியவற்றை விரும்புபவர்கள் சாய்ந்த நிலையில் விநாயகர் சிலையை தரிசிக்க வேண்டும்.
விநாயகர் தந்தத்தின் நிலையின் முக்கியத்துவம்
வாழ்க்கையில் வெற்றி மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இறைவனின் தந்தம் இடது பக்கம் சாய்ந்து இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வலதுபுறம் சாய்ந்த தந்தம் சூரியனின் சக்தியை வெளிப்படுத்துகிறது. அப்படிப்பட்ட சிலையை வழிபடும் போது பூஜையின் சடங்குகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
விநாயகர் சிலை திசையின் முக்கியத்துவம்
விநாயகப் பெருமானின் தந்தையான சிவபெருமான் வடக்கு திசையில் வீற்றிருக்கிறார். எனவே, உங்கள் வாஸ்து விநாயகர் சிலையை வடக்கு திசை நோக்கி வைப்பது நல்லது. மற்ற சாதகமான திசைகள் மேற்கு மற்றும் வடமேற்கு. எந்தவித பலன்களும் இல்லாததால் தெற்கு திசையை தவிர்ப்பது நல்லது. அதேபோல், வாஸ்து விநாயகர் படத்தின் முகம் அல்லது வாஸ்து விநாயகர் சிலையின் பின்புறம் வீட்டின் பிரதான கதவுக்கு எதிரே இருக்க வேண்டும்.
எத்தனை சிலைகள் இருக்க வேண்டும்?
ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் இருக்கக்கூடாது, ஏனெனில் பல சிலைகள் வீட்டின் ஆற்றலை சீர்குலைத்து, வீட்டின் அதிர்ஷ்டத்தையும், நேர்மறை ஆற்றலையும் பாதிக்கும்.
விநாயகரின் எலி மற்றும் மோதகத்தின் முக்கியத்துவம்
எலி, இறைவனின் வாகனமாக இருப்பதால், விநாயகர் படங்களின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதேபோல், மோதகம் என்பது விநாயகப் பெருமானுக்கு அளிக்கப்படும் பிரசாதமாகும். உங்கள் வாஸ்து விநாயகர் படம் அல்லது சிலையில் இவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
விநாயகர் சிலை செய்யப்படும் பொருட்களின் முக்கியத்துவம்
நீங்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்திருக்க விரும்பினால், அது எந்தப் பொருளால் ஆனது என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு விஷயங்களைக் குறிக்கலாம்.
- பித்தளை: செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சி அனைத்தும் பித்தளை விநாயகர் சிலையுடன் வீட்டிற்கு வரும்.
- கிர்ஸ்டல்: வீட்டில் வாஸ்து தோஷம் இருப்பது உண்மையில் அசுபமானது. ஒரு கிரிஸ்டல் விநாயகர் சிலையின் உதவியுடன் உங்கள் வாஸ்து தோஷத்தை அகற்றவும்.
- காப்பர்: குடும்பத்தைத் தொடங்க விரும்பும் தம்பதிகள், உங்கள் வீட்டில் செப்பு விநாயகர் சிலையை வைத்திருக்க வாஸ்து அறிவுறுத்துகிறது.
- வெள்ளி: உங்கள் வாழ்க்கையில் புகழைப் பெற விரும்பினால், வெள்ளி விநாயகர் சிலையை வீட்டில் வையுங்கள்.
- மரம்: ஆரோக்கியமே செல்வம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்திருப்பது நல்ல ஆரோக்கியத்தை ஈர்க்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீண்ட, நிறைவான வாழ்க்கையை வாழ உதவும்.



Click it and Unblock the Notifications












