Latest Updates
-
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா?
வாஸ்துப்படி வேப்ப மரத்தை வீட்டின் எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் தெரியுமா?
Vastu Tips in Tamil: நம் அனைவருக்குமே வீட்டைச் சுற்றி பல அழகான மற்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்களை வழங்கும் செடிகள் மற்றும் மரங்களை வளர்க்க விரும்புவோம்.
வீட்டைச் சுற்றி மரங்கள் இருந்தால் ஒரு நல்ல நிழல் கிடைப்பதைத் தவிர, நம்மைச் சுற்றி நல்ல சுத்தமான காற்றினை நாம் பெறலாம். மரங்களில் வேப்ப மரம் நல்ல குளிர்ச்சியான காற்றினை வழங்கும்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைக்க வேண்டிய சிறந்த மரங்களில் வேப்ப மரமும் ஒன்று. ஜோதிடத்தில் வேப்பமரம் கேது மற்றும் சனியுடன் தொடர்புடையது. எனவே வீட்டில் வேப்பமரத்தை வளர்த்து வந்தால், அது இவ்விரு கிரகங்களையும் அமைதிப்படுத்தி, அந்த கிரகங்களால் சந்திக்கும் பிரச்சனைகளை குறைக்கும்.
இந்தியாவில் வேப்பமரம் துர்கை அம்மனின் வடிவமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட புனிதமான மரத்தை வீட்டில் வளர்க்க நினைப்பவர்கள், வாஸ்து சாஸ்திரம் கூறும் குறிப்புக்களை மனதில் கொண்டு வளர்த்து வந்தால் இன்னும் சிறப்பான நன்மைகள் கிடைக்கும். இப்போது வாஸ்துப்படி வேப்ப மரத்தை வீட்டில் வளர்க்க நினைப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் குறித்து காண்போம்.
* வாஸ்துப்படி, வேப்ப மரத்தை வீட்டில் வளர்க்க நினைத்தால், அதை வீட்டின் வடமேற்கு மூலையில் வைத்து வளர்க்க வேண்டும். ஒருவேளை வீட்டில் வாஸ்து குறைபாடுகள் நிறைய இருந்தால், சிறிது வேப்பிலைகளை அடிக்கடி எரிக்க வேண்டும்.
* வீட்டில் வேப்ப மரத்தை வைத்து வளர்த்து வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் எப்போதும் நிரம்பியிருக்கும் மற்றும் எதிர்மறை ஆற்றல் விலகி விடும். இதனால் வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.
* வாஸ்துப்படி வேப்ப மரத்தை வீட்டின் தெற்கு அல்லது வடமேற்கு மூலையில் வைத்து வளர்த்தால், ஆரோக்கியம் எப்போதும் சிறப்பாக இருக்கும். அதுவும் வேப்ப மரத்தை வீட்டில் வளர்த்தால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும்.
* ஒருவரது வீடு தெற்கு நோக்கி இருந்தால், வீட்டு வாசலில் இருந்து இருமடங்கு தூரத்தில் வேப்பமரத்தை நடுவதால், தெற்கு திசையால் சந்திக்கும் தோஷங்கள் நீங்கும்.
* வீட்டின் வாசலில் வேப்ப மரத்தை வைத்தால், வீட்டினுள் பூச்சிகள், கொசுக்கள் போன்றவை அதிகம் வராது. வேப்ப மரத்தில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் பூச்சிகள் அனைத்தும் விலகி ஓடும்.
* தினமும் வேப்ப மரத்தை வணங்கினால், சனி தோஷம் நீங்கும். அதுவே வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களைத் துலக்கினால், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும். இதனால் எவ்வித பல் மற்றும் ஈறு நோய்களும் ஏற்படாது.
* வீட்டின் தோட்டத்தில் வேப்பமரத்தை வைத்து வளர்த்து வந்தால், அது வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வருவதோடு, கடுமையாக நடந்து கொள்ளும் விதம் மாறும்.
* ஜாதகத்தில் ஒருவர் கேது தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், தினமும் குளிக்கும் நீரில் சிறிது வேப்பிலைகளைப் பறித்துப் போட்டு குளித்து வந்தால், கேதுவால் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.



Click it and Unblock the Notifications












