Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
வாஸ்துப்படி, பாம்பு செடியை வீட்டின் எந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் தெரியுமா?
Vastu Tips In Tamil: வாஸ்துப்படி, செடிகளானது ஒருவரது வீட்டை அலங்கரிக்க பெரிதும் உதவுகின்றன. அதோடு செடிகள் நமக்கு நல்ல சுத்தமான காற்றினை வழங்குவதுடன், வீட்டில் மகிழ்ச்சியையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க உதவுகின்றன.
வீட்டை அலங்கரிக்கும் பலவிதமான செடிகள் உள்ளன. அதே சமயம் அதிர்ஷ்டத்திற்காக வீட்டில் வளர்க்கக்கூடிய சில செடிகளும் உள்ளன. ஆனால் அந்த அதிர்ஷ்ட செடிகளை வீட்டில் சரியான இடத்தில், திசையில் வைத்தால் தான் முழு பலனைப் பெற முடியும். அதில் பலரும் அறிந்த ஒன்று தான் மணி பிளாண்ட். அதற்கு அடுத்தபடியாக வீட்டை அலங்கரிக்கவும், அதிர்ஷ்டத்தை ஈர்க்கவும் பாம்பு கற்றாழை செடி உதவுகிறது.

உங்கள் வீட்டிலும் பாம்பு செடி என்று அழைக்கப்படும் பாம்பு கற்றாழை செடி உள்ளதா? அப்படியானால் அதை சரியான திசையில் வைத்து வளர்த்து வாருங்கள். இப்போது வாஸ்துப்படி பாம்பு செடியை வீட்டின் எந்த இடத்தில், திசையில் வைக்க வேண்டும் மற்றும் பாம்பு செடியை வீட்டில் வளர்ப்பதால் பெறும் நன்மைகளை என்னவென்பதைக் காண்போம்.
பாம்பு செடிகளை எங்கு வைக்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, அதிர்ஷ்டத்திற்காக பாம்பு செடியை வீட்டிற்கு வெளியேயும், உள்ளேயும் வளர்க்கலாம். ஆனால் பாம்பு செடியை சரியான இடத்தில் வைத்து வளர்த்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். வாஸ்துவில் குளியலறை மற்றும் படுக்கை அறையில் வளர்க்க ஏற்ற செடியாக இது கருதப்படுகிறது. மேலும் இந் செடியை வீட்டின் ஹாலின் ஒரு மூலையிலும் வைத்து வளர்க்கலாம்.
வீட்டினுள் பாம்பு செடியை வளர்ப்பதாக இருந்தால், வீட்டிற்கு வருவோரின் கண்களில் படும்படி இருக்க வேண்டும். எப்போதும் இந்த செடியை மற்றவர்களின் பார்வையில் படாதவாறு வைக்கக்கூடாது. இப்படி மற்றவர்களின் பார்வையில் படும்படி வைக்கும் போது கண் திருஷ்டி நீங்கி, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும்.
பாம்பு செடியை வளர்க்க ஏற்ற திசை எது?
பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வளர்க்க விரும்பினால், அதை சரியான திசையில் வைக்க வேண்டும். அப்படி சரியான திசையில் வைக்கும் போது வீட்டில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, பாம்பு செடியை வீட்டின் கிழக்கு, தெற்கு மற்றம் தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இந்த திசையில் இச்செடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
பாம்பு செடியை வீட்டில் வைக்கும் போது நினைவில் கொள்ள வேண்டியவை
* வீட்டில் பாம்பு செடியை வைப்பதாக இருந்தால், அவற்றை எப்போதும் மேசையின் மீதோ அல்லது வேறு ஏதாவது மேற்பரப்பிலோ வைக்கக்கூடாது. எப்போதும் தரையில் தான் வைக்க வேண்டும்.
* பாம்பு கற்றாழை செடியை வீட்டில் வைத்தால், அந்த செடியைச் சுற்றி வேறு எந்த செடியையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலைத் தான் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
* நிறைய பேர் பாம்பு செடியை வீட்டில் வைத்தால், அது வறுமையைக் கொண்டு வரும், வீட்டின் அமைதியைக் கெடுக்கும் என்று நினைத்தாலும், வாஸ்துப்படி பாம்பு செடியை வீட்டில் வைத்தால், அது மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருவதாக கூறுகிறது.
* வாஸ்துப்படி, பாம்பு செடியை வீட்டில் வைத்து வளர்த்தால், அது அந்த வீட்டில் உள்ளோருக்கு தொழிலில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications